பிரசாந்த் கிஷோர் ஆலோசனையில் இணைந்த 2 முதல்வர்கள்: காங்கிரஸ் வியூகம் என்ன?

கிஷோரின் முன்மொழிவுகளில் இருந்து செயல்படக்கூடிய பகுதிகளைக் கண்டறியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட மூத்த தலைவர்கள் குழு, சோனியா காந்தியிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும்.

Congress
Baghel Gehlot present in Congress meet, Prashant Kishor stresses on messaging to revive party

இரண்டு காங்கிரஸ் முதல்வர்கள் – ராஜஸ்தானின் அசோக் கெலாட் மற்றும் சத்தீஸ்கரின் பூபேஷ் பாகேல் – புதன்கிழமை கட்சித் தலைவர்கள் குழுவில் இணைந்தனர். 2024 லோக்சபா தேர்தலுக்கு கட்சியை போருக்கு தயார்படுத்துவதற்கான தனது முன்மொழிவுகளை மாற்றியமைக்கும், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் அமர்வில் அவர்கள் கலந்து கொண்டனர்.

இரு தலைவர்களும் கட்சி அமைப்பை வலுப்படுத்த அவரது கீழ்மட்ட வடிவமைப்பு உட்பட பல கேள்விகளை கிஷோரிடம் முன்வைத்தனர்,

இருவருமே மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநிலங்களின் பொறுப்பாளர்களாக தங்கள் முந்தைய பாத்திரங்களில் விரிவான நிறுவன அனுபவத்தைக் கொண்டிருப்பதால், அவர்கள் தகவல் தொடர்பு உத்தியை மேம்படுத்துவதுடன், பூத் மட்டத்தில் கட்சி பணியாளர்களை தயார்படுத்துவது, காங்கிரஸ் வலுவாக இருக்கும் பாஜக மாநிலங்களில் பிளவுகளை உருவாக்குவது, அதன் பிம்பம், கூட்டணிகளின் தேர்வு மற்றும் தந்திரோபாயங்களை புதுப்பித்தல் உட்பட பல விஷயங்களில் கவனம் செலுத்தியதாக அறியப்படுகிறது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த ஆலோசனைகள் தொடரும். பிறகு’ கிஷோரின் முன்மொழிவுகளில் இருந்து செயல்படக்கூடிய பகுதிகளைக் கண்டறியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்ட மூத்த தலைவர்கள் குழு, சோனியா காந்தியிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும். புதன்கிழமை, சோனியா தனது 10, ஜன்பத் இல்லத்தில் சுமார் ஐந்து மணி நேரம் நீடித்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் கிஷோர் இருப்பது குறித்து கெலாட் கூறியது: “பிரசாந்த் கிஷோர் ஒரு பிராண்டாக மாறிவிட்டார். அவர் 2014 மக்களவைத் தேர்தலுக்கு மோடி மற்றும் பாஜகவுடன் இருந்தார்; பின்னர் அவர் நிதிஷ் குமார் உடன் சென்றார், பின்னர் பஞ்சாபில் காங்கிரஸுடன் சென்றார். அவர் ஒரு தொழில் வல்லுநர். அவரைப் போல் இன்னும் பலர் இருக்கிறார்கள் – நாங்கள் அவர்களுடனும் தொடர்பு கொள்கிறோம். ஆனால் பிரசாந்த் கிஷோர் பெரிய பெயராகிவிட்டதால், மீடியாக்கள் அவரை மையப்படுத்துகின்றன” என்றார்.

“ஏஜென்சிகள் மற்றும் நிபுணர்களிடமிருந்து நாங்கள் பரிந்துரைகளை எடுத்து வருகிறோம். கிஷோர் பெரிய பெயராகிவிட்டதால்… அவர் விவாதங்களில் இருக்கிறார். அவரது அனுபவம் கைக்கு வந்தால்…எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க; மோடி அரசுக்கு எதிராக போராட அப்போது அது எதிர்க்கட்சிகளுக்கு உதவும்…”

சிதம்பரம், அம்பிகா சோனி, பிரியங்கா காந்தி வத்ரா, திக்விஜய சிங், ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக், கே சி வேணுகோபால் மற்றும் ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் அடங்கிய குழு திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளிலும் கூடியுள்ளது.

அடுத்த 48 முதல் 72 மணி நேரத்தில் இந்த ஆலோசனையை முடிக்க நாங்கள் முன்மொழிகிறோம் என்று சுர்ஜேவாலா கூறினார். கிஷோர் மற்றும் “கட்சியில் மிகவும் அனுபவம் வாய்ந்த சிலரின்” ஆலோசனைகளையும் அவர்கள் பார்க்கிறார்கள் என்று அவர் கூறினார்.

“அந்த பரிந்துரைகளில் காங்கிரஸ் அமைப்பை வலுப்படுத்துவதற்கும், மக்களுடன் இணைவதற்கும், 2024 ஆம் ஆண்டு வரை நடக்கவிருக்கும் தேர்தலுக்குத் தயாராகும் வழிமுறைகள் அடங்கும்” என்று அவர் கூறினார். அதனால்தான் கிஷோர் மற்றும் பல்வேறு அனுபவமுள்ள தலைவர்கள் வழங்கிய பல்வேறு பரிந்துரைகள் குறித்து இந்த குழு கடந்த மூன்று நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறது.

கெலாட் மற்றும் பாகெல் இருவரும் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் நிறுவன மற்றும் நிர்வாக அனுபவத்தைக் கொண்டவர்கள் என்று சுர்ஜேவாலா கூறினார்.

“அதனால்தான் குழு, கலந்துரையாடலில் கலந்துகொண்டு அவர்களின் ஆலோசனைகளை வழங்க” அவர்களை வருமாறு கேட்டுக் கொள்வது பொருத்தமானது என்று நினைத்தது என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Congress ashok gehlot bhupesh baghel prashant kishor 2024 lok sabha polls

Exit mobile version