Advertisment

பங்கேற்க மறுத்த மம்தா, நிதிஷ்; டிச. 6-ம் தேதி நடக்க இருந்த இந்தியா கூட்டணி கூட்டம் ஒத்திவைப்பு

அனைவருக்கும் வசதியான தேதியில் இந்திய கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் டிசம்பர் மூன்றாவது வாரத்தில் மீண்டும் திட்டமிடப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 

author-image
WebDesk
New Update
INDIA Bloc 1

அனைவருக்கும் வசதியான தேதியில் இந்திய கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் டிசம்பர் மூன்றாவது வாரத்தில் மீண்டும் திட்டமிடப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 

அனைவருக்கும் வசதியான தேதியில் இந்திய கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் டிசம்பர் மூன்றாவது வாரத்தில் மீண்டும் திட்டமிடப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Congress defers Dec 6 INDIA meet after Mamata, Nitish say can’t attend

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அழைப்பு விடுத்த டிசம்பர் 6-ம் தேதி இந்திய கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தைத் தவிர்க்கத் திட்டமிட்டுள்ளதாக பல தலைவர்கள் கூறியதை அடுத்து காங்கிரஸ் இந்தியா கூட்டணி கூட்டத்தை ஒத்திவைத்துள்ளது.

மேலும், அனைவருக்கும் வசதியான தேதியில் இந்திய கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் டிசம்பர் மூன்றாவது வாரத்தில் நடத்த மீண்டும் திட்டமிடப்படும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இருப்பினும், நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் நாளை (டிசம்பர் 6) கூட உள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி திங்கள்கிழமை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவித்தார். டிசம்பர் 6 முதல் டிசம்பர் 11-ம் தேதி வரை வடக்கு வங்காளத்திற்குச் செல்வதாகக் கூறினார். மிக்ஜாம் புயலில் இருந்து தமிழகம் மீண்டு வருவதால், மாநிலத்தில் பல பகுதிகள் நீரில் மூழ்கிய நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனது. இதற்கிடையில், ஜே.டி.யு தலைவரும், பீகார் முதல்வருமான நிதீஷ் குமாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

சமாஜ்வாடி கட்சித் (எஸ்.பி) தலைவர் அகிலேஷ் யாதவும் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தி பேசும் மாநிலங்க்ளான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம்,  சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி அதன் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் சிக்கலில் சிக்கியுள்ளது. அகிலேஷ் குமார் யாதவ் மற்றும் மம்தா பானர்ஜி இருவரும் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான செய்தியை அனுப்பியுள்ளனர்.

அகிலேஷ் குமார் யாதவ், காங்கிரஸின் பெயரைக் குறிப்பிடாமல், திங்கள்கிழமை நடந்த ஒரு நிகழ்ச்சியில், “இப்போது முடிவுகள் வெளியாகிவிட்டதால், ஈகோவும் முடிவுக்கு வந்துவிட்டது. வரும் நாட்களில், ஒரு புதிய வழி கண்டுபிடிக்கப்படும்” என்று கூறினார். மத்தியப் பிரதேசத்தில் சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸுக்கு இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு தோல்வியடைந்ததை அடுத்து, தேர்தலுக்கு முன்னதாக கூட்டணி ஒரு கடினமான சூழலை அடைந்தது. அப்போது அகிலேஷ் யாதவ், “மத்தியப் பிரதேச தேர்தலின் போதுதான் இந்தியா கூட்டணி மக்களவைத் தேர்தலுக்கு மட்டுமே என்பதை நான் கண்டுபிடித்தேன். பிரச்னை நம்பகத்தன்மை பற்றியது. காங்கிரஸ் இப்படி நடந்து கொண்டால் அவர்களுடன் யார் நிற்பார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் தொகுதிகளை பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொண்டிருந்தால் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும் என்று மம்தா பானர்ஜி கூறினார். “இந்தியா கூட்டணி கட்சிகள் சில வாக்குகளைக் குறைத்தன, இதுதான் உண்மை. சீட் பங்கீடு ஏற்பாட்டை பரிந்துரைத்தோம். வாக்குகள் பிரிந்ததால் அவர்கள் தோற்றனர்” என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment