Advertisment

பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் வெறுப்பு பேச்சு; சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரும் காங். ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், பிரக்யா தாக்கூரின் கருத்துகள் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சி செய்கின்றன. அதே நேரத்தில் கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியில் இருப்பதால் உள்ளூர் காவல்துறை அவருக்கு எதிராக செயல்படாது என்று கூறினார்.

author-image
WebDesk
New Update
jairam ramesh, pragya thakur, pragya thakur karnataka speech, பிரக்யா சிங் தாக்கூர், பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் வெறுப்பு பேச்சு, காங்கிரஸ், ஜெய்ராம் ரமேஷ், pragya thakur hate speech, jairam ramesh supreme court, news, latest news, news today, Tamil indian express

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், பிரக்யா தாக்கூரின் கருத்துகள் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சி செய்கின்றன. அதே நேரத்தில் கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியில் இருப்பதால் உள்ளூர் காவல்துறை அவருக்கு எதிராக செயல்படாது என்று கூறினார்.

Advertisment

கர்நாடகாவில் உள்ள சிவமோகாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் பேசியது வெறுப்பு பேச்சுக்கு தெளிவான உதாரணம் என்றும், அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாக்கூருக்கு எதிராக கர்நாடகா போலீசார் நடவடிக்கை எடுக்காததால் பிரக்யா சிங் தாக்கூர் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார். கர்நாடகாவில் தற்போது பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அந்த மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

“கர்நாடகாவில் பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாக்கூரின் கருத்துகள் வெறுப்புப் பேச்சுக்கு தெளிவான எடுத்துக்காட்டு. மேலும், இதுபோன்ற கருத்துகளை தெரிவித்ததற்காக நான் உச்ச நீதிமன்றத்தை நாடுவேன்” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார் என்று பி.டி.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரக்யா சிங் தாக்கூரின் கருத்துக்கள் சமூகத்தை பிளவுபடுத்த முயற்சி செய்யும் கருத்துகள். அதே நேரத்தில் தென் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியில் இருப்பதால் உள்ளூர் காவல்துறை அவருக்கு எதிராக செயல்படாது என்று அவர் கூறினார்.

இந்து செயல்பாட்டாளர்கள் கொல்லப்பட்டது குறித்து பேசிய பிரக்யா சிங் தாக்கூர், தங்களை தாக்குபவர்களுக்கும் அவர்களின் கண்ணியத்திற்கும் பதிலளிக்க இந்துக்களுக்கு உரிமை உண்டு என்று கூறினார்.

ஒவ்வொருவருக்கும் தங்களைத் தற்காத்துக் கொள்ள உரிமை இருக்கிறது என்பதால், இந்துக்கள் தங்கள் வீடுகளில் கத்திகளைக் கூர்மையாக வைத்திருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

சிவமோகாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்து ஜெகராணா வேதிகேயின் தென் மண்டல ஆண்டு மாநாட்டில் பேசிய மத்தியப் பிரதேசத்தின் போபாலைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாக்கூர், “நம்முடைய வீட்டிற்குள் ஊடுருவும் எவருக்கும் தகுந்த பதிலடி கொடுங்கள் என்று கூட்டத்தினரிடம் கூறினார்.

“உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றுமில்லை என்றால், குறைந்தபட்சம் காய்கறிகளை வெட்டப் பயன்படும் கத்திகளையாவது கூர்மையாக வைத்திருங்கள். எப்போது என்ன நிலை வரும் என்று தெரியாது… ஒவ்வொருவருக்கும் தற்காத்துக்கொள்ளும் உரிமை உண்டு. யாரேனும் நம்முடைய வீட்டிற்குள் புகுந்து எங்களைத் தாக்கினால், தகுந்த பதிலடி கொடுப்பது நம்முடைய உரிமை” என்று கூறினார்.

“லவ் ஜிஹாத். அவர்களுக்கு ஜிஹாத் பாரம்பரியம் உண்டு. எதுவுமில்லை என்றால், அவர்கள் லவ் ஜிஹாத் செய்கிறார்கள். காதலித்தாலும் அதில் ஜிஹாத் செய்கிறார்கள். நாங்களும் (இந்துக்கள்) கடவுளை நேசிக்கிறோம், நேசிக்கிறோம், ஒரு சன்யாசி தனது கடவுளை நேசிக்கிறார்” என்று பிரக்யா சிங் தாக்கூர் கூறினார்.

இந்த விழாவில் பிரக்யா சிங் தாக்கூர் பேசுகையில், “கடவுளால் படைக்கப்பட்ட இவ்வுலகில், ஒடுக்குபவர்கள், பாவம் செய்பவர்கள் அனைவரையும் ஒழித்துவிடுங்கள் என்று ஒரு சன்யாசி கூறுகிறார். இல்லாவிட்டால், அன்பின் உண்மையான வரையறை இங்கு நிலைக்காது. எனவே, லவ் ஜிஹாதில் ஈடுபடுவோருக்கு அதே வழியில் பதில் சொல்லுங்கள். உங்கள் பெண்களைப் பாதுகாக்கவும், சரியான மதிப்புகளைக் கற்றுக்கொடுங்கள்.” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp Karnataka Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment