10 சதவீத பொருளாதார இடஒதுக்கீடு தீர்ப்பு.. காங்கிரஸ் தலைவர் மறுஆய்வு மனு

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் இரு நிலைபாடு ஏற்பட்டுள்ளது.

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் இரு நிலைபாடு ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Congress leader files review petition against EWS quota

மத்தியப் பிரதேச காங்கிரஸ் பிரமுகர் டாக்டர் ஜெயா தாகூர்

பொதுப்பிரிவில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு அளிக்கப்பட்ட 10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக மத்தியப் பிரதேச காங்கிரஸ் பிரமுகர் டாக்டர் ஜெயா தாகூர் உச்ச நீதிமன்றத்தில் இன்று (நவ.23) மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisment

பொதுப்பிரிவில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளித்து உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நவ.7ஆம் தேதி தீர்ப்பளித்தது.
மொத்தமுள்ள 5 நீதிபதிகளில் 3 பேர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும், 2 பேர் எதிராகவும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக மத்தியப் பிரதேச காங்கிரஸ் பிரமுகர் டாக்டர் ஜெயா தாகூர் உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மனுத்தாக்கல் செய்தார்.

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசாங்கம் 2019ஆம் ஆண்டு கொண்டுவந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அக்கட்சி வரவேற்றது நினைவு கூரத்தக்கது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Congress Supreme Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: