Advertisment

இந்தியா கூட்டணியின் தூண் டி.எம்.சி - காங். தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து

வருகிற மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமூல காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
jairam ramesh

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் புதன்கிழமை கருத்து தெரிவித்தார். (கோப்பு புகைப்படம்)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காங்கிரஸ் உடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை என்றும், வருகிற மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் தனது கட்சி தனித்து போட்டியிடும் என்றும் புதன்கிழமை அறிவித்தார். இதைத் தொடர்ந்து, அவர் இல்லாத கூட்டணியை அவர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று காங்கிரஸ் உடனடியாக கூறியுள்ளது.

Advertisment

“டி.எம்.சி இந்தியா கூட்டணியின் தூண். மம்தா பானர்ஜி இல்லாத இந்தியா கூட்டணியை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாது. நாளை நமது யாத்திரை மேற்கு வங்கத்தில் நுழைகிறது. தொகுதிப் பங்கீடு தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன, விரைவில் முடிவு வரும், அது அனைவரையும் திருப்திப்படுத்தும்” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

ஆங்கிலத்தில் படிக்க: ‘TMC a pillar of INDIA bloc’: Jairam Ramesh after Mamata’s remark on alliance with Congress

அவர் மேலும் கூறுகையில், “நீண்ட பயணத்தில் சில நேரங்களில் வேகத் தடைகள் வரும் என்று நான் நம்புகிறேன், ஆனால், விவாதத்தின் மூலம் ஒரு வழியைக் கண்டுபிடிப்போம். மம்தா பானர்ஜியின் முன்னுரிமை பா.ஜ.க-வைத் தோற்கடிப்பதாகும், அதே நோக்கத்துடன் ‘பாரத் ஜோடோ நியாய யாத்திரை’ நாளை மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாரில் நுழைகிறது.” என்று கூறினார்.

மேற்கு வங்க முதல்வர் புதன்கிழமை அதிகாலையில் கூறினார்: “எனக்கு எந்த பேச்சும் இல்லை, யாருடனும் பேச்சு இல்லை... எந்த பேச்சும் இல்லை. எல்லாம் பொய். முற்றிலும் தவறு” என்று கூறினார்.

மாநிலத்தில் 2 இடங்கள் வழங்குவதை காங்கிரஸ் கட்சி நிராகரித்ததை சுட்டிக்காட்டிய டி.எம்.சி தலைவர் கூறினார்: “எனது ஆரம்ப முன்மொழிவு ஏற்கனவே அவர்களால் நிராகரிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடுவோம் என்று எங்கள் கட்சி முடிவு செய்தது. நாங்கள் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறோம். அவர்கள் இங்கே ஒரு பேரணி (பாரத் ஜோரோ நியாய யாத்ரா) நடத்துகிறார்கள். மரியாதை நிமித்தமாக, ஒரு முறையாவது, 'தீதி, நான் உங்கள் மாநிலத்திற்கு வருகிறேன்' என்று எங்களுக்குத் தெரிவித்தீர்களா? மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் உடன் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை.” என்று கூறினார். 

“தேசிய அளவில், நாங்கள் என்ன செய்வோம், செய்ய மாட்டோம், தேர்தலுக்குப் பிறகு சிந்திப்போம். நாங்கள் மதச்சார்பற்ற கட்சி, பா.ஜ.க-வை முறியடிக்க தேவையானதை செய்வோம். ஆனால், இப்போது (சீட் பங்கீடு) எந்த விவாதமும் இல்லை” என்று மம்தா பானர்ஜி கூறினார்.

இந்தியா கூட்டணியில் ஒரு கட்சி மட்டும் ஈடுபடவில்லை, என்றார். “பிராந்தியக் கட்சிகள் ஒன்றாக இருக்கும். காங்கிரஸ் 300 இடங்களில் போட்டியிடலாம் என்றும், 72 இடங்களில் பிராந்திய கட்சிகள் போட்டியிடும் என்றும் கூறியுள்ளோம். அதில் காங்கிரஸ் தலையிடக் கூடாது. ஆனால், அது நடந்தால், என்ன செய்வது என்று பார்ப்போம்.” என்று கூறினார்.

அசாமில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ நீதி யாத்திரையில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஒரு நாள் கழித்து, மம்தாவின் அறிக்கை வந்துள்ளது. மம்தாவுடன் நான் ஒரு நல்ல நட்பைப் பகிர்ந்து கொண்டேன், திரிணாமுல் காங்கிரஸ் உடன் தொகுதிப் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது, ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்திருந்தால் எளிதில் தீர்க்கக் கூடிய சிறிய வேறுபாடுகளாக இருந்தன. 

இருப்பினும், மேற்கு வங்க முதல்வர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையிலான காங்கிரஸ், டி.எம்.சி-யின் 2 இடங்களை அக்கட்சி ஒப்புக்கொள்வது குறித்து எந்த கேள்வியும் இல்லை என்று கூறியதால், உறவுகள் படிப்படியாக அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment