Advertisment

கேரள காங்கிரஸில் யார் மீதும் கோபம் இல்லை; சசி தரூர்

எல்லோரையும் ஒன்றாகப் பார்ப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, யாரிடமும் பேசுவதில் எனக்கு எனக்கு தயக்கமும் இல்லை என சசி தரூர் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Congress leader Shashi Tharoor over Kerala unit row

திருவனந்தபுரம் கார்ப்பரேஷன்-ஐ கண்டித்து காங்கிரஸ் கவுன்சிலர்கள் நடத்திய போராட்டத்தில் நவ.24, 2022இல் கலந்துகொண்ட எம்.பி. சசி தரூர். (கோப்பு புகைப்படம்)

கேரள காங்கிரஸில் கட்சியின் மூத்தத் தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர் மீது அதிருப்தி நிலவுகிறது என்ற செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் சசி தரூர் கொச்சியில் கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “எனக்கு யாரிடமும் கோபமோ கோபமோ இல்லை. நான் யாரையும் குறை கூறவில்லை, குற்றம் சாட்டவில்லை. எனது தரப்பிலிருந்து எந்தப் புகாரும் பிரச்சினையும் இல்லை.

Advertisment

எல்லோரையும் ஒன்றாகப் பார்ப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, யாரிடமும் பேசுவதில் எனக்கு எனக்கு தயக்கமும் இல்லை” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள், கட்சியின் மாநிலத் தலைவர் சுதீசனுடன் பேசுவீர்களா? என்ற கேள்விக்கு, “அவருக்கு உடல் நிலை சரியில்லை. அவர் கட்சி கூட்டத்தில் காணொலி மூலமாக கலந்துகொள்வார்.

நாங்கள் ஒருவருக்கொருவர் நேரில் பார்த்தால் பேசிக் கொள்வோம். அவர் என்னிடம் பேசினால் நான் பதில் சொல்ல மாட்டேனா? என்றார்.

சசி தரூர் கலந்துகொள்ளும் கூட்டங்கள் குறித்து மாநில கட்சித் தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. எனினும் அவர் தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டால் தகவல் தெரிவிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சசி தரூரின் எதிர்பாளர்கள், அவர் கட்சியில் முதலமைச்சர் வேட்பாளர் பெயருக்கு முயற்சிக்கிறார் எனக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala Congress Shashi Tharoor
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment