scorecardresearch

‘காரியக் கமிட்டி உறுப்பினர் தேர்தலுக்கு எந்த அறிகுறியும் இல்லை’: புலம்பும் காங்கிரஸ் தலைவர்கள்

காங்கிரஸ் காரியக் கமிட்டி (CWC) உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெறுமா? என்பதில் காங்கிரஸ் தலைவர்கள் நிச்சயமற்ற நிலையில் உள்ளனர்.

Congress leaders on CWC elections Tamil News
Under the Congress constitution, the CWC will consist of the party president, its leader in Parliament, and 23 other members. (Express Photo/File)

 Congress Working Committee (CWC) membership election Tamil News: 2024 மக்களவை தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசிக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (All India Congress Committee – AICC (ஏஐசிசி)) செயற்குழு கூட்டம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், காங்கிரஸ் காரியக் கமிட்டி (CWC) உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெறுமா? என்பதில் காங்கிரஸ் தலைவர்கள் நிச்சயமற்ற நிலையில் உள்ளனர். மறுபுறம், கட்சித் தலைவர்களை நம்பினாலும், தேர்தல் கமிட்டியை அமைக்கும் அகில இந்திய காங்கிரஸ் பிரதிநிதிகளின் பட்டியல் கூட இன்னும் தயாராகவில்லை.

அக்கட்சியில் உள்ள பெரும்பாலோரின் மனநிலை தேர்தலுக்கு சாதகமாக இல்லை. பல தலைவர்கள் ஒரு அதில் போட்டியை உணர்கிறார்கள். அது கசப்பான மற்றும் கடுமையானதாக மாறினால், கட்ச்சிக்குள் பிளவு ஏற்படும் என்று அச்சப்படுகிறார்கள். பரப்புரை மற்றும் தேவையற்ற ஊடக விளம்பரங்களை தூண்டலாம் என்றும் நினைக்கிறார்கள். மேலும், மத்திய அரசிற்கு சவால் விடும் பாரத் ஜோடோ நடைபயண “வெற்றி” மற்றும் கட்சி முயற்சிக்கும் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பலாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், இந்த ஆண்டு பல முக்கிய மாநிலங்களுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. இதனால், கட்சித் தலைமையின் ஒரு பகுதி நேரம் சோதனையான கருத்தொற்றுமை வழியை விரும்புகிறது. அதாவது கட்சியில் அதிகாரச் சமன்பாடுகள் பெரிய அளவில் மாறாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் புதிய காங்கிரஸ் காரியக் கமிட்டியை அமைக்க கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அதிகாரம் அளிப்பதாகும்.

தனிப்பட்ட முறையில் சில தலைவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியை “ஒரு இரகசிய அரசியல் குழு” நடத்துகிறது என்று தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் அமைப்புக்கு சவால் விடும் வகையில் வெளியில் வரமாட்டார்கள் – ஒன்று அவர்கள் ஆதரவைப் பற்றி உறுதியாக தெரியவில்லை அல்லது தலைமைக்கு எதிராக வெளிப்படையாக வெளிவர விரும்பவில்லை.

அவர் போட்டியிட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் பேசுகையில், “தேர்தல் கமிட்டி எங்கே? நான் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினரா இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. அவர்கள் அனைத்து பிசிசி (பிரதேச காங்கிரஸ் கமிட்டி) பிரதிநிதிகளையும் அழைத்துள்ளனர். அவர்களில் எட்டில் ஒரு பகுதியினர் ஏஐசிசி உறுப்பினர்களாகிறார்கள். தேர்தல் நடத்த வேண்டும் என்றால், ஏஐசிசி உறுப்பினர்கள் யார் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். முழுமையான கூட்டம் அடுத்த வாரம்; எங்களிடம் இன்னும் பட்டியல் (தேர்தல் கமிட்டி) இல்லை.” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்ட சசி தரூர், காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர் பதிவுக்கான தேர்தலில் போட்டியிட முடியாது. முந்தைய ஜி-23 தலைவர்களிடமிருந்து உண்மையான சவாலை தலைமை எதிர்பார்க்கவில்லை – குலாம் நபி ஆசாத் மற்றும் கபில் சிபல் ஆகியோர் கட்சியிலிருந்து வெளியேறிய பிறகு குழு பிரிந்தது மற்றும் ஹரியானா ஹெவிவெயிட் பூபிந்தர் சிங் ஹூடாவை சமாதானப்படுத்திய தலைமை அவருக்கு கிட்டத்தட்ட மாநில கட்சியின் ஆட்சியை ஒப்படைத்தது.

சில தனிப்பட்ட தலைவர்கள் இன்னும் ஆச்சரியத்தை ஏற்படுத்த முடியும் என்று கட்சித் தலைவர்கள் நம்பினாலும், தேர்தல்களுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட கோரிக்கையை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ் காரியக் கமிட்டிக்கு கடைசியாக ஆகஸ்ட் 1997ல் சீதாராம் கேஸ்ரியின் கீழ் தேர்தல் நடைபெற்றது. நாற்பத்தொன்பது தலைவர்கள் களத்தில் இருந்தனர் – அவர்களில் சிலர் மூத்த தலைவர்கள். மற்றும் சிலர் வளர்ந்து வரும் தலைவர்களாக இருந்தனர்.

கல்கத்தாவில் நடைபெற்ற கடுமையான போட்டியில் வெற்றி பெற்றவர்களில் அகமது படேல், ஜிதேந்திர பிரசாதா, மாதவ் ராவ் சிந்தியா, தாரிக் அன்வர், பிரணாப் முகர்ஜி, ஆர் கே தவான், அர்ஜுன் சிங், குலாம் நபி ஆசாத், சரத் பவார், கோட்லா விஜய பாஸ்கர் ரெட்டி ஆகியோர் அடங்குவர்.

மதுசூதன் மிஸ்திரி தலைமையிலான அக்கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், அடுத்த வாரம் தேர்தலை நடத்துவது குறித்து தலைமை முடிவு எடுக்கும். தற்போதுள்ள காங்கிரஸ் காரியக் கமிட்டியை மாற்றியமைக்கப்பட்ட வழிநடத்தல் குழு, தேர்தலை நடத்த வேண்டுமா என்பதை தீர்மானிக்க பிப்ரவரி 24ஆம் தேதி கூடவுள்ளது. அவர்கள் முடிவு செய்தால், நாங்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான செயல்முறையைத் தொடங்குவோம்.” என்று கூறியுள்ளனர்.

மற்றொரு தலைவரிடம் அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளாரா? என்று கேட்டபோது, “அவர்கள் (தலைமை) என்ன செய்யப் போகிறார்கள் என்பது கூட எங்களுக்குத் தெரியாது…. தேர்தல் வருமா என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை. முழுக்கூட்டத்திற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது… நீங்கள் போட்டியிட முடிவு செய்தால்… மாநில தலைவர்களை தொடர்பு கொள்ள வேண்டும், உங்கள் நண்பர்களின் ஆதரவைப் பெற வேண்டும். ராய்ப்பூரை அடைந்த பிறகு தேர்தலை அனுமதிக்க அவர்கள் முடிவு செய்தால், அது ஒரு கேலிக்கூத்தாக இருக்கும்… ஏனென்றால் யாருக்கும் கேன்வாஸ் செய்ய நேரம் இருக்காது. நீங்கள் தேர்தலில் மோசடி செய்ய தேவையில்லை. நீங்கள் நிர்வகிக்கிறீர்கள்.”என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் அரசியலமைப்பின் கீழ், காங்கிரஸ் காரியக் கமிட்டி என்பது கட்சித் தலைவர், அதன் நாடாளுமன்றத் தலைவர் மற்றும் 23 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். அவர்களில் 12 பேர் கட்சியில் முக்கிய முடிவெடுக்கும் அமைப்பான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எஞ்சியவர்கள் கட்சியின் தலைவரால் நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Congress leaders on cwc elections tamil news