தர்மஸ்தலா வதந்தியின் 'சூத்திரதாரி' என குற்றச்சாட்டு; பா.ஜ.க எம்.எல்.ஏ மீது சசிகாந்த் செந்தில் அவதூறு வழக்கு

காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர். அரசியலில் பிரவேசித்த பிறகு, தற்போது பா.ஜ.க.வைச் சேர்ந்த ஜனார்த்தன ரெட்டி மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில், கர்நாடக ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர். அரசியலில் பிரவேசித்த பிறகு, தற்போது பா.ஜ.க.வைச் சேர்ந்த ஜனார்த்தன ரெட்டி மீது அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
sasikanth 2

பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி.யான சசிகாந்த் செந்தில், முன்னர் கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணிபுரிந்தவர். அவர், தர்மஸ்தலாவில் நடந்ததாகக் கூறப்படும் ரகசியமாக உடல்களைப் புதைத்தது தொடர்பான விவகாரத்தின் 'சூத்திரதாரி' என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜி. ஜனார்த்தன ரெட்டி குற்றம் சாட்டியதால், அவர் மீது கிரிமினல் அவதூறு வழக்கை சசிகாந்த் செந்தில் சனிக்கிழமை தாக்கல் செய்தார்.

ஆங்கிலத்தில் படிக்க:

Advertisment

பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் இந்த வழக்கை தாக்கல் செய்தார். நீதிபதி கே.என். சிவகுமார் இந்த வழக்கை செப்டம்பர் 11-ம் தேதி விசாரிக்க உள்ளார்.

ஒரு முன்னாள் துப்புரவுத் தொழிலாளி ரகசியப் புதைப்பு குறித்து எழுப்பிய குற்றச்சாட்டுகளின் மூலம், அந்த கோவில் நகரத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதில் சசிகாந்த் செந்திலின்  பங்கு குறித்து, மத்திய புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) அல்லது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரணை நடத்த வேண்டும் என்று ஜனார்த்தன ரெட்டி அரசிடம் சனிக்கிழமை  கேட்டுக்கொண்டார்.

“அந்த முகமூடி அணிந்த நபர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். செந்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான், அவர் இடதுசாரிகளுடன் தொடர்புடையவர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

Advertisment
Advertisements

இந்த வழக்கில் புகார் அளித்த சி.என். சின்னையாவைத்தான் 'முகமூடி அணிந்த மனிதர்' என்று ஜனார்த்தன ரெட்டி குறிப்பிட்டார்.

கர்நாடகா மாநிலம், கங்காவதி சட்டமன்ற உறுப்பினரான ஜனார்த்தன ரெட்டி, “ராகுல் காந்தி, சித்தராமையாவை சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு கூற செந்தில்தான் தூண்டியுள்ளார். அவர் சி.பி.ஐ அல்லது என்.ஐ.ஏ விசாரணையை ஏன் பரிந்துரை செய்யவில்லை? மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசு இந்த விஷயத்தில் செந்திலைக் கேள்வி கேட்காமல் சந்தேகப்படும்படியான முறையில் செயல்படுகிறது” என்றும் கூறினார்.

சசிகாந்த் செந்தில், ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பதவி விலகியபோது தட்சிண கன்னடா துணை ஆணையராக இருந்தார். பல்லாரிக்கு அவர் உதவி ஆணையராகப் பணியமர்த்தப்பட்ட முதல் நாளிலேயே, ஜனார்த்தன ரெட்டி சட்டவிரோத சுரங்க வழக்கில் கைது செய்யப்பட்டார்.

தன்னுடைய மனுவில், சசிகாந்த் செந்திலின் வழக்கறிஞர், "இந்த விவகாரம் புகார்தாரருக்கு (செந்தில்) மனச்சோர்வை ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தில் அவரது நற்பெயருக்கும், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பணிக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் (ரெட்டி) கூறிய அவதூறான கருத்துக்களால் மக்கள் அவரது நேர்மையைக் கேள்வி கேட்கிறார்கள். எனவே, குற்றம் சாட்டப்பட்டவர் சசிகாந்த் செந்திலைத் 'தீவிர இந்து - எதிர்ப்பாளர்', 'சூத்திரதாரி' என்று குறிப்பிட்டு, அவதூறு பரப்பியுள்ளார். இதன் மூலம் தர்மஸ்தலாவிற்கு அவப்பெயரைக் கொண்டுவர சிலரைத் தூண்டுகிறார்” என்று கூறியுள்ளார்.

இந்த சர்ச்சையில் தனது பெயர் இழுக்கப்பட்டிருப்பது தனக்கு ஆச்சரியமளிப்பதாகவும், இந்த குற்றச்சாட்டுகள் 'அடிப்படையற்றவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை' என்றும் செந்தில் கூறினார்.

"பல்லாரியில் நான் உதவி ஆணையராகப் பொறுப்பேற்ற நாளில், ஜனார்த்தன ரெட்டி சுரங்க ஊழலில் கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ மற்றும் பிற முகமைகள் சுரங்க வழக்கை விசாரித்தபோது, நான் அவர்களுக்கு உதவினேன். அதன்பிறகு நான் அவரைப் பார்த்ததே இல்லை. அவர் கவனத்தை ஈர்க்கவோ அல்லது அவருக்கு யாராவது அறிவுரை வழங்கியிருக்கலாம் அல்லது அவர் தமிழ்நாடு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம் என்று நான் கருதுகிறேன்” என்றும் சசிகாந்த் செந்தில் தெரிவித்தார்.

அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகு, ஜனார்த்தன ரெட்டி பல்லாரியில், இதுபோன்ற பல அவதூறு வழக்குகளை தான் எதிர்கொண்டுள்ளதாகவும், இந்த வழக்கையும் எதிர்கொள்வேன் என்றும் கூறினார்.

web

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: