Advertisment

கர்நாடகா தேர்தல்: ஹிஜாப் உரிமைக்காக போராடிய காங். முஸ்லிம் பெண் வேட்பாளர்; பா.ஜ.க கடும் போட்டி

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த குல்பர்கா வடக்கு எம்.எல்.ஏ கனீஸ் பாத்திமாவுக்கு எதிராக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நசீர் உசேன் உஸ்தாத் உட்பட 9 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், பா.ஜ.க-வின் லிங்காயத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீலுடன் கடும் போட்டி நிலவி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
karnataka congress, karnataka congress muslim candidates, karnataka kalaburagi area, ஹிஜாப் அணியும் உரிமைக்காக போராடிய காங்கிரஸ் முஸ்லிம் பெண் வேட்பாளர், பா.ஜ.க கடும் போட்டி, கர்நாடகா தேர்தல், காங்கிரஸ், பாஜக, karnataka polls 2023, Tamil idnian express, Tamil indian express news, Tamil indian express election live updates

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த குல்பர்கா வடக்கு எம்.எல்.ஏ கனீஸ் பாத்திமா

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த குல்பர்கா வடக்கு எம்.எல்.ஏ கனீஸ் பாத்திமாவுக்கு எதிராக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நசீர் உசேன் உஸ்தாத் உட்பட 9 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், பா.ஜ.க-வின் லிங்காயத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீலுடன் கடும் போட்டி நிலவி வருகிறது.

Advertisment

தேர்தல் பிரச்சாரம் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் நிர்ணயித்த நேரம் முடிவதற்கு இன்னும் 15 நிமிடங்களே இருந்த நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும், குல்பர்கா வடக்கு தொகுதி வேட்பாளருமான கனீஸ் பாத்திமா, கலபுர்கி நகரின் ஷேக் ரோஜா பகுதிக்கு வந்தார். வெள்ளிக்கிழமை அவருடைய பரபரப்பான தேர்தல் பிரச்சாரம் இறுதி இடமாக இருந்தது.

பாத்திமா கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸின் வாக்குறுதிகளை எடுத்துரைத்து அவசரமாகப் பேசினார். தன்னை 60 விழுக்காடு முஸ்லிம்களைக் கொண்ட இந்த தொகுதி மக்களின் நலன்களைப் பாதுகாப்பவர் என்று குற்றம் சாட்டுகின்ற மற்றவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அவர் உள்ளூர் மக்களை கேட்டுக்கொண்டார்.

2018 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, அமைச்சரும் ஆறு முறை உள்ளூர் எம்.எல்.ஏ.வுமான அவரது கணவர் கமாருல் இஸ்லாம், காலமானதையடுத்து, இல்லத்தரசியாக இருந்து பொது வாழ்க்கைக்கு வந்து கவனத்தை ஈர்த்த 63 வயதான பாத்திமா, “கர்நாடகாவில் காங்கிரஸுக்கு கிடைக்கும் வெற்றி, நாட்டில் மாற்றத்திற்கான தொடக்கமாக இருக்கும்.” என்று கூறினார்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட ஒரே முஸ்லிம் பெண் வேட்பாளராக பாத்திமா உள்ளார். உடுப்பி பகுதியில் உள்ள கபு தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ஒரே முஸ்லிம் பெண் வேட்பாளராக சபீனா சமத் போட்டியிடுகிறார். மாநிலத்தின் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் பா.ஜ.க ஒரு முஸ்லிம் வேட்பாளரைகூட நிறுத்தவில்லை.

2022-ம் ஆண்டு பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ.க அரசு கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்ததைக் கண்டித்து குல்பர்காவில் ஹிஜாப் அணிந்து வரும் பக்தியுள்ள முஸ்லீம் பாத்திமா, குல்பர்காவில் போராட்டம் நடத்தினார். முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியதற்காகவும் 2020-ல் சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றதற்காக அரசு கல்லூரிகளில் நுழைய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து போராடினார்.

“ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை. சுதந்திர இந்தியாவில் நமக்கு சுதந்திரம் உள்ளது. மக்களின் ஆடைகளை பற்றி நாங்கள் கேள்வி கேட்பதில்லை. இந்தப் பிரச்சினைக்காக பெண்கள் கல்லூரிகளுக்குச் செல்வதைத் தடுக்கக் கூடாது” என்று ஹிஜாப் சர்ச்சையின் உச்சக்கட்டத்தில் பாத்திமா கூறியிருந்தார்.

2018 தேர்தலில் தன்னிடம் வெறும் 5,940 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த லிங்காயத் சமூக இளம் தலைவரான பா.ஜ.க-வைச் சேர்ந்த சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் நசீர் உசேன் உஸ்தாத் உள்பட 9 முஸ்லிம் வேட்பாளர்களிடம் இருந்து பாத்திமா கடும் போட்டியை எதிர்கொள்கிறார்.

இந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி கர்நாடகா தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, 2021-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்த போதிலும், மேயர் பதவியை பா.ஜ.க வென்றதன் மூலம் குல்பர்கா நகர சபையின் மீதான பாரம்பரிய பிடியை காங்கிரஸ் கட்சி இழந்தது.

குல்பர்காவில் 55 உறுப்பினர்களைக் கொண்ட கவுன்சிலில் காங்கிரஸ் 27 இடங்களிலும், பா.ஜ.க 23 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. மேயர் பதவிக்கு 32 வாக்குகள் (கலபுர்கியில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.எல்.சி.க்களின் வாக்குகள் உட்பட) தேவைப்பட்ட நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி உடன் கூட்டணி வைத்திருந்தாலும், காங்கிரஸை ஒரு வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க வீழ்த்தியது.

காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான மல்லிகார்ஜுன் கார்கே இல்லாதது பா.ஜ.க-வுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்ற கருத்துகள் இருந்தாலும், வாக்களிக்கும் நாளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கவுன்சிலர் இல்லாததே தோல்விக்கு காரணம் என உள்ளூர் காங்கிரஸ் பிரிவு குற்றம் சாட்டியது. 2009-19 ஆம் ஆண்டு குல்பர்கா மக்களவை எம்.பி.யாக கார்கே இருந்துள்ளார். காங்கிரஸின் தோல்வியால் கலபுர்கியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியைப் பிடித்தது.

மே 10 சட்டமன்றத் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி கலபுர்கியில் பா.ஜ.க மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலைக் குறிப்பிட்டார். கார்கேவின் சொந்த இடத்தில் தனது கட்சி வெற்றி பெற்றது வரவிருக்கும் முடிவுகளின் சமிக்ஞை என்று கூறினார். “இது, ஒரு வகையில், மாநிலத்தில் பா.ஜ.க-வின் வெற்றி யாத்திரை தொடங்கியுள்ளது என்பதற்கான சமிக்ஞை” என்று பிரதமர் மோடி கூறினார்.

வீடு வீடாகவும், உள்ளூர் காய்கறி மார்க்கெட் போன்ற இடங்களிலும் பிரச்சாரம் செய்யும் போது, முஸ்லிம் வாக்குகள் பிளவுபடக் கூடாது என்று வாக்காளர்களிடம் பாத்திமா கூறுகிறார். “நம்முடைய சண்டைகள் மற்றவர்களுக்குப் பலன்களைத் தரக் கூடாது. அனைவரையும் ஒன்றிணைப்பதே எனது முயற்சி. கமாருல் சாஹேப் அனைவரையும் ஒன்றாக அழைத்துச் சென்றார் ” என்று அவர் தன்னை எதிர்ப்பதாக உணரும் முஸ்லிம்களிடம் கூறினார்.

“பல முஸ்லிம் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆனால், உண்மையான போட்டி மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி வேட்பாளரிடம் இருந்து உள்ளது. மேடம் (பாத்திமா) மீது எல்லோருக்கும் தோன்றும் பிரச்சினை அவர் தேர்தலில் போட்டியிடும் ஒரு முஸ்லிம் பெண் என்பதுதான். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்து அவர் தொகுதியைக் கையாளும் திறன் கொண்டவர் அல்ல என்பதுதான் மக்கள் மத்தியில் பரவி வரும் பிரச்சாரம்” என்று அவரது ஆதரவாளர்களில் ஒருவரான அப்ரார் சைத் கூறுகிறார். “பாத்திமா அரசியலுக்கு வந்தபோது அனுபவமில்லாதவர். கமருல் சாஹேப் இறந்த பிறகு காங்கிரஸ் தலைவர்கள் அவரை போட்டியிடச் சொன்னார்கள். அவர் ஒரு கண்ணியமான அரசியலை கடைப்பிடிக்கிறார். மேலும், நபர்களின் பெயர்களை அழைப்பதில் தயங்குவதில்லை. இந்த காரணத்திற்காக அவள் விரும்பப்படுகிறார். அவர் தோற்கடிக்கப்பட்டால் அவர் மீண்டும் வருவது கடினம் என்பது போட்டியாளர்களுக்கு தெரியும்.” என்று கூறினார்.

2018 தேர்தலில் குல்பர்கா வடக்கு தொகுதியிலிருந்து சுயேட்சையாகப் போட்டியிட்ட வழக்கறிஞர் முகமது கிவாமுதீன் ஜுனைதி கூறுகிறார்: “கமாருல் சாஹேப்பால் தொடங்கப்பட்ட இப்பகுதியில் முஸ்லிம்-இந்து ஒற்றுமையின் பாரம்பரியத்தை அவர் (பாத்திமா) பேணி வருகிறார். ரம்ஜான் காலத்தில் ரோஜாவைக் கடைப்பிடிப்பது போல ராம நவமியின் போது ராமர்களுக்கு சர்பத் தருகிறோம். அவர்கள் ஹிஜாபை எதிர்த்தால், ஹிஜாப் அணிந்து சமூகங்களுக்கு இடையே ஒற்றுமையை நிலைநாட்ட பாடுபடும் ஒரு தலைவர் நம்மிடம் இருக்கிறார்.” என்று கூறினார்.

இருப்பினும், உள்ளூர் பேக்கரி உரிமையாளர் முகமது இர்பான் குறிப்பிடுகையில், “குல்பர்கா வடக்கு தொகுதியில் எம்.எல்.ஏ குறித்து சில சந்தேகங்கள் உருவாக்கப்படுகின்றன. அவரிடம் ஒரு கடினமான போட்டி உள்ளது.” என்று கூறினார்.

பாத்திமாவிற்கு எதிராக குறிப்பிடப்பட்டுள்ள எதிர்மறையான விஷயங்களில், அவர் 2020-21-ல் கோவிட் தொற்றுநோய்களின் போது செயலில் இல்லை என்பதும் ஒன்று. இந்த குற்றச்சாட்டை எதிர்த்து கருத்து தெரிவித்த சைத், “மேடம் தன்னால் முடிந்ததைச் செய்தார். நாங்கள் அவர் சார்பாக பொருட்களை விநியோகித்தோம். அவருக்கு 60 வயது, கோவிட் காலத்தில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியிருந்தது” என்று கூறினார்.

இருப்பினும், பாத்திமா தனது கணவருடன் நெருக்கமாக இருந்த கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில கட்சித் தலைவர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களின் நம்பிக்கையைப் பெற்று வருகிறார்.

ஷேக் ரோஜாவில், பல உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் பதவிக்கு பாத்திமா முன்னணியில் இருப்பார் என்று கருத்து தெரிவித்தனர்.

பாத்திமாவின் முஸ்லீம் வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் ஆதாயம் தேடும் பா.ஜ.க, இந்த தொகுதியில் உள்ள இந்து உள்ளாட்சிகளில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அவரது தோல்விகளை எடுத்துக்காட்டுகிறது.

ஷேக் ரோஜா அருகே நடந்த பிரசாரக் கூட்டத்தில், பெண்கள் சுயஉதவி குழுக்களுக்கும், உள்ளூர் கோவில்களை மேம்படுத்துவதற்கும் போட்டி கட்சிகள் நிதியுதவி அளிப்பதால் வாக்காளர்களை திசை திருப்ப வேண்டாம் என்று சந்திரகாந்த் பாட்டீல் கேட்டுக் கொண்டார். “எம்.எல்.ஏ உங்கள் பகுதிகளை புறக்கணித்துவிட்டார். 2018 தேர்தலில் நான் தோல்வியடைந்தாலும், தொகுதியின் வளர்ச்சிக்காக கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் நிதியை என்னால் கொண்டு வர முடிந்தது. நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் எவ்வளவு செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள். எனது அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. சில நாட்களில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், குடிசைப் பகுதிகளில் வீடுகளை மேம்படுத்துவதற்கு ஏராளமான நிதி கிடைக்கும், மற்றவர்களின் சலுகைகளைக் கண்டு ஏமாந்துவிடாதீர்கள்” என்று ஆலண்ட் சாலையில் உள்ள கூட்டத்தில் சந்திரகாந்த் பாட்டீல் கூறினார்.

கர்நாடக தேர்தலில் மொத்தம் உள்ள 187 பெண் வேட்பாளர்களில் (அனைத்து வேட்பாளர்களில் ஏழு சதவீதம்), மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 15 இடங்களில் பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து, பா.ஜ.க 12 இடங்களிலும் மற்றும் காங்கிரஸ் 11 இடங்களிலும் பெண் வேட்பாளர்களையும் ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) அதிகபட்சமாக 17 பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாக ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி மற்றும் பல சுயேச்சைகள் உட்பட மொத்தம் ஒன்பது முஸ்லிம் பெண் வேட்பாளர்கள் (அனைத்து பெண் வேட்பாளர்களில் ஐந்து சதவீதம்) தேர்தலில் உள்ளனர்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் மொத்தம் 11 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி மொத்தம் 23 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு சீட் கொடுத்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி 17 முஸ்லீம் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. ஆனால், அவர்களில் ஒரு பெண் வேட்பாளர்கூட இல்லை.

கர்நாடகாவின் மக்கள்தொகையில் 12 சதவீதத்திற்கும் அதிகமானோர் முஸ்லிம் மக்கள் உள்ளனர். முடிவடையும் இந்த சட்டசபையில் மொத்தம் 7 முஸ்லிம் எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்.

குல்பர்கா வடக்கு தொகுதியில் 2008, 2013-ல் கமாருல் இஸ்லாம் வெற்றி பெற்றார். 2008 தேர்தலுக்கு முன்னதாக தொகுதி மறுவரையறை செய்ததன் மூலம் இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. இது குல்பர்கா தெற்கு மற்றும் குல்பர்கா கிராமப்புறம் ஆகிய இரண்டு இடங்களையும் முந்தைய குல்பர்கா தொகுதியில் இருந்து எடுத்து உருவாக்கியது. அதற்கு முன், கமாருல் 1989 முதல் தொடர்ந்து நடந்த ஒவ்வொரு தேர்தலிலும் குல்பர்கா தொகுதியில் வெற்றி பெற்றார். 2004 தேர்தலில் மட்டும் அவர் பா.ஜ.க-வின் சந்திரசேகர் பாட்டீல் ரேவூரிடம் தோல்வியடைந்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Karnataka Karnataka Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment