ஹரியானாவில் பா.ஜ.க தொடர்ந்து மூன்றாவது முறையாக பாதி வழியைத் தாண்டியதால் காங்கிரஸின் தேர்தல் கணக்கு தவறாகிப்போன, ஒரு நாள் கழித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி-யுமான ராகுல் காந்தி புதன்கிழமை, எதிர்பாராத தேர்தல் முடிவுகளை காங்கிரஸ் கட்சி பகுப்பாய்வு செய்யும் என்று கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்க: Congress analysing unexpected Haryana results… thank people of J&K: Rahul Gandhi
செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து ராகுல் காந்தி கூறியதாவது: ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி - மாநிலத்தில் இந்தியாவின் வெற்றி அரசியலமைப்பின் வெற்றி, ஜனநாயக சுயமரியாதையின் வெற்றி. ஹரியானாவின் எதிர்பாராத முடிவுகளை நாங்கள் பகுப்பாய்வு செய்கிறோம். பல சட்டமன்ற தொகுதிகளில் இருந்து வரும் புகார்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிப்போம்” என்று கூறினார்.
மேலும், ராகுல் காந்தி கூறியதாவது: “ஹரியானா மக்களின் ஆதரவிற்காகவும், அயராத கடின உழைப்பிற்காக நம்முடைய பாபர் ஷெர் தொண்டர்களுக்கு மனமார்ந்த நன்றி. உரிமைகளுக்காகவும், சமூக மற்றும் பொருளாதார நீதிக்காகவும், உண்மைக்காகவும் இந்தப் போராட்டத்தைத் தொடர்வோம், தொடர்ந்து உங்கள் குரலை உயர்த்துவோம்.” என்று கூறினார்.
ஹரியானா தேர்தல் தீர்ப்பை ஏற்க மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை அறிவித்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் "கையாளுதல்" மூலம் "சதி" தீட்டப்பட்டது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஒரு முக்கிய கட்சி ஏற்க மறுப்பது இதுவே முதல்முறை என்று காங்கிரஸ் குற்றச்சாட்டியது - ஹரியானாவில் காங்கிரஸ் பிரமுகர்களான குமாரி செல்ஜா மற்றும் பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோர் தோல்வியை ஒப்புக்கொண்டபோதும், ஹூடா முகாமை இலக்காகக் கொண்டு செல்ஜா தோல்வியை ஒப்புக்கொண்டார்.
ஏ.ஐ.சி.சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தகவல் தொடர்பு தலைவர் ஜெய்ராம் ரமேஷ், “ஹரியானா தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை, ஆச்சரியம் அளிப்பவை என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன், ஏனெனில் இது ஜனநாயகத்தின் தோல்வி, கருவியின் வெற்றி” என்று கூறினார்.
வாக்கு எண்ணும் செயல்முறை, குறைந்தது மூன்று மாவட்டங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து கட்சிக்கு மிகக் கடுமையான புகார்கள் வந்துள்ளன. இன்னும் பல புகார்கள் வருகின்றன என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
“இது (தேர்தல் முடிவுகள்) அடிப்படை யதார்த்தத்திற்கு எதிரானது. இது ஹரியானாவில் உள்ள மக்கள் தங்கள் மனதை மாற்றியதற்கும் மாற்றத்துக்கும் எதிரானது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் வேட்பாளர்களால் தீவிரமான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன... அதை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு வருவோம். ஹரியானாவில் இன்று நாம் பார்த்தது சூழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி, மக்களின் விருப்பத்தை சிதைத்ததற்கான வெற்றி மற்றும் இது வெளிப்படையான, ஜனநாயக செயல்முறைகளுக்கு கிடைத்த தோல்வி. ஹரியானா பற்றிய அத்தியாயம் முழுமையடையவில்லை” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“