Advertisment

காங்கிரஸ் தான் இன்னும் பெரிய எதிர்க்கட்சி; சோனியாவை சந்திக்கும் நிதிஷ், லாலு: தேஜஸ்வி யாதவ்

பீகாரில் ஏற்பட்ட மாற்றத்திற்குப் பிறகு பாஜக வெப்பத்தை உணர்கிறது என்பது அதன் பொது தோரணைகளிலும் பிரதிபலிக்கிறது என்று யாதவ் கூறினார்.

author-image
WebDesk
New Update
Tejashwi Yadav

Tejashwi Yadav

எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ் தான்,  இன்னும் பெரிய கட்சி என்று, பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

Advertisment

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், 2024 பொதுத்தேர்தலில், பாஜகவை எதிர்க்க, எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திப்பார்கள் என்று யாதவ் கூறினார்.

பாஜகவை தோற்கடிப்பதே எதிர்க்கட்சித் தலைவர்களின் தனிப்பட்ட லட்சியமாக இருக்க வேண்டும் என்றார்.

ஒரு நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. பீகார் ஒரு நல்ல டெம்ப்ளேட்டை வழங்கியது, அது மற்ற பகுதிகளிலும் பிரதிபலிக்க வேண்டும். நிதிஷ் பல தலைவர்களை சந்தித்துள்ளார், லாலுவும் பேசினார், நானும் சந்தித்து வருகிறேன். சோனியா திரும்பி வந்ததும், நிதீஷ், லாலு அவரைச் சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிப்பார்கள். இறுதியாக அடுத்த மக்களவை தேர்தல் குறித்த பேச்சு வார்த்தை துவங்கியுள்ளது என்றார்.

கடந்த மாதம், பாஜகவுடனான ஐக்கிய ஜனதா தளம் JD(U) கூட்டணியை முடித்துக் கொண்ட நிதிஷ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து, பீகாரில் புதிய கூட்டணி ஆட்சியை அமைத்தார். இது, எதிர்க்கட்சியினரிடம் நம்பிக்கையை உருவாக்கி உள்ளது. வரும் நாட்களில் நாடு முழுவதும் உணரப்படும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதாக யாதவ் கூறினார்.

இது கண்டிப்பாக மாற்றத்தை ஏற்படுத்தும். ஐக்கிய ஜனதா தளம் வெளியேறிய பிறகு பாஜக பலம் ஏற்கனவே குறைந்துவிட்டது. கணக்குப்படி பார்த்தால் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகளின் மொத்த வாக்கு சதவீதம் 50 சதவீதத்தை தாண்டியுள்ளது.

பீகாரில் 40 இடங்களில் 39 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தனது செயல்திறனை மீண்டும் செய்யப் போவதில்லை. ராஜஸ்தானில் காங்கிரஸூக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை, ஆனால் அது மீண்டும் நடக்காது.  நாங்கள் கைகோர்த்து ஒரு வியூகத்துடன் போராடினால், பாஜக நிச்சயம் பாதியிலேயே நின்றுவிடும், என்றார் யாதவ்.

காங்கிரஸை கணக்கீடுகளில் இருந்து விலக்கி வைக்க முடியாது. “நாடாளுமன்றத்தில் அவர்களின் எண்ணிக்கை எங்களை விட அதிகமாக இருப்பதை நாங்கள் விரும்ப முடியாது. இறுதியில், எண்கள் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும், அறிக்கைகள் அல்ல. மற்ற கட்சிகள் பெரும்பாலும் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டவை.

பீகாரில் ஏற்பட்ட மாற்றத்திற்குப் பிறகு பாஜக வெப்பத்தை உணர்கிறது என்பது அதன் பொது தோரணைகளிலும் பிரதிபலிக்கிறது என்று யாதவ் கூறினார்.

இது பாஜகவுக்கு பாதுகாப்பற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் பணியாளர் மன உறுதியை உயர்த்த, அவர்கள் இப்போது 350 இடங்களை குறிவைப்பது பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். அவர்கள் சோசலிச அரசியலை அழிக்க விரும்பினர். பாஜக தலைவர் ஜேபி நட்டா, பிராந்தியக் கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்று வெளிப்படையாக அழைப்பு விடுத்தார்.

அவர்கள் ஐக்கிய ஜனதா தளத்தை உடைக்க விரும்பினர். நாம் என்ன செய்தோம் என்ற செய்தி நாடு முழுவதும் பயணித்துள்ளது. இது எதிர்க்கட்சிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது” என்று யாதவ் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment