Advertisment

ஏப்ரல் 14-க்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் ; மோடி சூசகம்!

இந்த யுத்தம் நம் அனைவரையும் ஒன்றிணைத்துள்ளது என ஆலோசனை கூட்டத்தில் மோடி பேச்சு!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Corona lockdown would have to be extended says Prime Minister Narendra Modi

Corona lockdown would have to be extended says Prime Minister Narendra Modi

Corona lockdown would have to be extended says Prime Minister Narendra Modi : இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் அதிக எம்.பி.க்களை கொண்டுள்ள கட்சியின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளிடம் இன்று உரையாடினார். கொரொனா நோய் பரவல் தடுப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

Advertisment

மேலும் படிக்க : கொரோனாவுக்கு பின் வறுமை உறுதி : இந்தியாவில் 40 கோடி மக்களின் நிலை என்ன?

அதில் தலைவர்களின் பல்வேறு கருத்துகளை கேட்டறிந்துள்ளார் மோடி. மேலும் இந்த ஊரடங்கினை அரசு நீட்டிக்க வேண்டுமா இல்லை ஆட்சேபம் தெரிவிப்பீர்களா என்று கேட்டு தெரிந்து கொண்டார். ஊரடங்கு நீட்டிப்பிற்கு தலைவர்கள் மறுப்பு ஏதும் கூறவில்லை. ஆனால் மக்களுக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

அவர்களிடத்தில் ஆலோசனை கேட்ட மோடி ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று மோடி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த யுத்தம் நம் அனைவரையும் ஒன்றிணைத்துள்ளது. இந்த நோய் இந்நாட்டை விட்டு வெளியேறுவது வரை நாம் போராடிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியதாக தெரிகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment