Advertisment

சென்னைவாசிகள் அண்டை மாவட்டங்களுக்கு மது வாங்கச் சென்றால் கைது: போலீஸ் அதிரடி

Coronavirus Latest Updates: தமிழகத்தில் சென்னையை தவிர மாநிலத்தின் மற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன. சென்னை மக்கள், பக்கத்து மாவட்டங்களுக்கு மதுவகைகளை வாங்க சென்றால் கைது செய்யப்படுவர் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tasmac shops in tamil nadu, tasmac, age restrictions in tamil nadu, டாஸ்மாக், தமிழகத்தில் டாஸ்மாக், தமிழக செய்திகள், latest tamil news, news in tamil, news

tasmac shops in tamil nadu, tasmac, age restrictions in tamil nadu, டாஸ்மாக், தமிழகத்தில் டாஸ்மாக், தமிழக செய்திகள், latest tamil news, news in tamil, news

Covid-19 News Update : தமிழகத்தில் சென்னையை தவிர மாநிலத்தின் மற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன. சென்னை மக்கள், பக்கத்து மாவட்டங்களுக்கு மதுவகைகளை வாங்க சென்றால் கைது செய்யப்படுவர் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் ஒரே நாளில் 508 பேருக்கு கரோனா வைரஸ் உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4000-ஐ கடந்தது. சென்னையில் ஒரே நாளில் மேலும் 279 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகி இருக்கிறது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2000-ஐ கடந்திருக்கிறது. இதன் காரணமாக, சமூக பரவல் அச்சம் மக்களை சூழ்ந்திருக்கிறது. தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே 16 மாவட்டங்களில் புதிய தொற்று கண்டறியப்படவில்லை.

ஜூன் மாதமும் ரேஷன் கடைகளில் விலையில்லா பொருட்களை வாங்கிக் கொள்ளலாம், என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசுக்கு ஒத்துழைப்பு தருமாறு, மக்களை அறிவுறுத்தி இருக்கிறார், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. மின் கட்டணத்தை அபராதம் இல்லாமல், வரும் 22ம் தேதி வரை செலுத்திக் கொள்ளலாம், என தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது. சென்னையில் நாளை மதுபான கடைகள் திறக்கப்பட மாட்டாது, என தமிழக அரசு அறிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Coronavirus Live Updates : உலக அளவில், கொரோனா வைரஸ் தொடர்பான செய்திகள் அனைத்தையும் இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.



























Highlights

    21:40 (IST)06 May 2020

    சென்னையில் இருந்து வந்து மது வாங்கினால் கைது - காவல்துறை எச்சரிக்கை

    சென்னையில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு வந்து மது வாங்கினால் கைது செய்யப்படுவார்கள் என்று வடக்கு மண்டல ஐ.ஜி நாகராஜன் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

    21:04 (IST)06 May 2020

    1 லட்சம் தொழிலாளர்களுக்கு மேல் சொந்த மாநிலம் திரும்பினர் - ரயில்வே அறிவிப்பு

    பல்வேறு இடங்களில் வேலை செய்வதற்கு சென்று கொரோனா ஊரடங்கு உத்தரவால் சிக்கி இருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 1 லட்சம் பேர்களுக்கு மேல் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.

    20:58 (IST)06 May 2020

    நாமக்கல் மாவட்டத்தில் மது வாங்க 3 வண்ண அட்டை அறிமுகம்

    நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்தபடி வயதின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட நேரத்தில் மது வாங்க அந்தந்த நாட்களுக்கு உரிய 3 வண்ண அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    19:55 (IST)06 May 2020

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்: இன்று 771 பேருக்கு தொற்று; 2 பேர் உயிரிழப்பு

    தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று புதிதாக மேலும் 771 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மொத்த எண்ணிக்கை 4,829 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

    19:04 (IST)06 May 2020

    மது யாருடைய அத்தியாவசிய தேவை? - மநீம தலைவர் கமல்ஹாசன் கேள்வி

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளோடு ஊரடங்கு அமலில் இருக்கும்போது, எதன் அடிப்படையில் மதுக்கடைகளைத் திறக்க அரசு முடிவு செய்கிறது? மது யாருடைய அத்தியாவசிய தேவை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    19:01 (IST)06 May 2020

    மது யாருடைய அத்தியாவசிய தேவை? - மநீம தலைவர் கமல்ஹாசன் கேள்வி

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே மக்கள் வெளியே வர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளோடு ஊரடங்கு அமலில் இருக்கும்போது, எதன் அடிப்படையில் மதுக்கடைகளைத் திறக்க அரசு முடிவு செய்கிறது? மது யாருடைய அத்தியாவசிய தேவை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    18:55 (IST)06 May 2020

    கிருமி நாசினி ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு

    ஆல்கஹாலை அடிப்படையாகக் கொண்ட சானிடைசர் (கிருமி நாசினி) ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    17:59 (IST)06 May 2020

    தமிழகத்தில் மதுக்கடைகளை நாளை திறக்க தடையில்லை - ஐகோர்ட் தீர்ப்பு

    தமிழகத்தில் டாஸ்மாக் மதுப்பானக் கடைகள் திறக்கப்பட்டால் நோய் பரவும் என்று அதனால், மதுக்கடைகளை திறக்க தடை விதிக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசின் விளக்கத்தை ஏற்று தமிழகத்தில் மதுக்கடைகளை நாளை திறக்க தடையில்லை என்று தீர்ப்பு அளித்துள்ளது.

    17:39 (IST)06 May 2020

    டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு - தமிழக அரசு அறிவிப்பு

    டாஸ்மாக் மதுக்கடைகளில் விற்கப்படும் மது பாட்டிலின் விலை மே 7-ம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15% உயர்த்தியுள்ளது. இதனால், சாதாரண வகை 180 மி.லி. மதுபான பாட்டிலின் விலையில் கூடுதலாக ரூ.10 உயர்த்தியுள்ளது.

    தமிழக அரசு நடுத்தர, பிரீமியம் வகை 180 மி.லி. குவார்ட்டர் மதுபான பாட்டிலின் விலை 20 ரூபாய் கூடுதலாகவும் உயர்த்தப்படுகிறது - தமிழக அரசு அறிவிப்பு

    17:19 (IST)06 May 2020

    அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

    வெளிமாநிலத்தில் சிக்கியிருக்கும் தமிழர்களை தொடர்பு கொள்ளவும், இ - பாஸ் வழங்குவதை கண்காணிக்கவும் சிறப்பு அதிகாரிகள் நியமனம்

    * பின்கி ஜோவல், ஆனந்தகுமார், சாந்தகுமார் ஆகியோரை நியமித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

    17:01 (IST)06 May 2020

    கூடுதலாக 50 மில்லியன் லிட்டர் குடிநீர்

    சென்னையில் நாளைமுதல் கூடுதலாக 50 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

    * சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 6.3 டிஎம்சி நீர் இருப்பு உள்ளதால் கூடுதல் குடிநீர் வழங்க ஆணை

    16:45 (IST)06 May 2020

    உற்பத்தியை துவங்கிய டிவிஎஸ்

    இந்தியாவில் ஒசூர், மைசூரு மற்றும் நலகர் ஆகிய இடங்களில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி நடவடிக்கைகளை தொடங்கியது டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம்

    16:40 (IST)06 May 2020

    மது யாருடைய அத்தியாவசிய தேவை?

    எதன் அடிப்படையில் மதுக்கடைகளை திறப்பதற்கு அரசு முடிவு செய்கிறது? 

    மது யாருடைய அத்தியாவசிய தேவை?

    அந்த வருமானத்தை நம்பி இருக்கும் அரசுக்கா? அல்லது தங்களது சாராய ஆலைகளின் விற்பனை குறைந்ததை குறித்த கவலையில் உள்ள ஆண்ட, ஆளும் கட்சிக்கா?

    - கமல்ஹாசன் கேள்வி

    16:32 (IST)06 May 2020

    கோயம்பேடு டூ அரியலூர் - 168 பேருக்கு கொரோனா

    சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு வந்தவர்களில் மேலும் 168 பேருக்கு கொரோனா

    ஏற்கனவே 53 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 221 ஆக உயர்வு

    16:11 (IST)06 May 2020

    1,000 தெருக்களில் பைப் மூலம் தண்ணீர் விநியோகம்

    குடிநீர் விநியோகத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அரசு திட்டம்

    * சென்னையில் லாரி மூலம் குடிநீர் வழங்கி வந்த 1,000 தெருக்களில் பைப் மூலம் தண்ணீர் விநியோகம்

    * கூடுதலாக 50 எம்.எல்.டி குடிதண்ணீர் வழங்கப்படும் - அமைச்சர் வேலுமணி

    16:11 (IST)06 May 2020

    மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது

    "டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது" - சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்

    சமூக விலகல் பின்பற்றப்படும், பாதுகாப்பும் வழங்கப்படும். கொரோனா முடிய நாளாகும் என்பதால் மற்ற கடைகளை போல மதுக்கடைகளும் திறக்கப்படுகிறது - தமிழக அரசு

    15:43 (IST)06 May 2020

    பொருளாதாரம் அழிந்து விடும்

    மே.17க்கு பிறகும் ஊரடங்கு நீடித்தால் மாநிலத்தின் பொருளாதாரம் முற்றிலுமாக அழிந்து விடும். ஊரடங்கு நீட்டிப்பில் மாநில முதலமைச்சர்களை கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும், இல்லையெனில் மாநில அரசு கேட்கும் நிதியையாவது மத்திய அரசு வழங்க வேண்டும் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

    15:42 (IST)06 May 2020

    43 நபர்களுக்கு கொரோனா

    காஞ்சிபுரத்தில் இன்று ஒரே நாளில் கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த 31 நபர்கள் உட்பட 43 நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    15:40 (IST)06 May 2020

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா

    சென்னை வேளச்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா...

    * தள்ளுவண்டி மூலம் காய்கறி விற்ற வியாபாரிக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதியானது

    * தள்ளுவண்டி வியாபாரியின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் கொரோனாவால் பாதிப்பு

    15:40 (IST)06 May 2020

    உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு

    மதுபான கடையை திறக்க உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு - விரைவில் விசாரணை

    14:38 (IST)06 May 2020

    மாதவரம் பால் பண்ணை ஊழியர்களுக்கு கொரோனா

    சென்னை மாதவரம் பால் பண்ணையில் நாள்தோறும் வழக்கமாக 4 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படும். ஆனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் ஏராளமான ஊழியர்களின் வருகையும் பாதியாக குறைந்தது. இதனால் பால் உற்பத்தி செய்யும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக உற்பத்தி செய்யப்படும் 4 லட்சம் லிட்டர் பால் தற்போது 2 லட்சம் லிட்டர் பாலாக குறைந்துள்ளது. மேலும் தேவைக்கு ஏற்ப திருச்சி, பாடாலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து சென்னைக்கு பால் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாதவரம் பால் பண்ணையில் காண்ட்ராக்ட் மூலம் ஊழியர்கள் பணியமர்த்த பட்டுள்ளதாகவும் வழக்கம்போல் பால்பண்ணை எந்தவித தங்கு தடையின்றி இயங்கி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    14:22 (IST)06 May 2020

    பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா

    டெல்லியில் பணியில் இருந்த 30 எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    14:15 (IST)06 May 2020

    சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி?

    சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருவது பற்றி முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்

    * திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அனுமதியளிப்பது பற்றியும் ஆலோசித்து முடிவு

    - அமைச்சர் கடம்பூர் ராஜூ

    13:54 (IST)06 May 2020

    தடுப்புகளை அகற்ற கோரி வழக்கு

    கொரோனா பாதித்த பகுதியை தவிர மற்ற பகுதிகளில் தடுப்புகளை அகற்ற கோரி வழக்கு

    மே 14ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு எந்த ஒரு தடையும் இருக்கக்கூடாது - நீதிபதிகள் அறிவுறுத்தல்

    13:53 (IST)06 May 2020

    மேலும் இருவருக்கு கொரோனா

    சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா

    * ஆணையர் அலுவலகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்வு

    * நுண்ணறிவு, பாதுகாப்பு பிரிவு காவலருக்கு பாதிப்பு உறுதி

    13:21 (IST)06 May 2020

    தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி

    டாஸ்மாக் மதுபானங்களை ஆன்லைனில் விற்க முடியுமா..?" என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. "மதுபானங்களை வீடுகளுக்கு நேரடியாக சென்று டெலிவரி செய்ய முடியுமா? மாற்று ஏற்பாடுகள் என்ன செய்யமுடியும் என்பது குறித்து மதியம் 2.30 மணிக்கு பதில் தர வேண்டும்" என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாரயணனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 

    13:03 (IST)06 May 2020

    போலி சித்த மருத்துவர் தணிகாச்சலம் கைது

    கொரோனாவிற்கு மருந்து உள்ளதாக தவறான தகவல் வெளியிட்டதாக போலி சித்த மருத்துவர் தணிகாசலம் கைது செய்யப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அரசுக்கு எதிராக தகவல் வெளியிட்டதாக தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது கைது செய்யப்பட்டுள்ளார். 

    12:34 (IST)06 May 2020

    மதுபானக் கடை திறப்பதற்கான விபரங்கள் வெளியீடு

    கடைக்கு வரும் கூட்டத்தைப் பொறுத்து 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு தர வேண்டும். கடைக்கு அரை கி.மீ.க்கு முன்பாகவே மதுப்பிரியர்களின் வாகனங்களை நிறுத்தி விட்டு வரிசைப்படுத்த உத்தரவு. அதிக கூட்டம் கூடும் மதுக்கடைகளில், ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் கண்காணிக்க உத்தரவு. நாளை முதல் மதுபானக் கடைகள் தொடங்க உள்ள நிலையில், பாதுகாப்பு விவரங்கள் வெளியீடு.  ஒவ்வொரு கடைக்கும் தலா 2 காவலர்கள், 2 ஊர்க்காவல் படையினர், 1 தன்னார்வலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உத்தரவு.  ஒவ்வொருவருக்கும் இடையே 6 அடி இடைவெளியை உறுதி செய்ய வேண்டும். 

    12:20 (IST)06 May 2020

    சென்னையில் கொரோனா

    சென்னை வேளச்சேரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை கே.கே.நகர் மின்வாரிய அலுவலகத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. 

    12:04 (IST)06 May 2020

    கொரோனா நிவாரண நிதி

    கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.347.76 கோடி நன்கொடை வந்துள்ளது. ஒருநாள் ஊதியத்தை தந்த அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார். 

    11:31 (IST)06 May 2020

    மேலும் 8 பேருக்கு கொரோனா

    சென்னை டிஜிபி அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    11:30 (IST)06 May 2020

    வாரணாசியில் சிக்கிய தமிழர்கள் தமிழகம் வருகை

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சிக்கிய தமிழர்களில் 45 பேர்நேற்று 2 பேருந்துகளில் சென்னைக்கு புறப்பட்டனர். ஞாயிற்றுக் கிழமை கிளம்பிய இவர்கள் இன்று தமிழகம் வந்தடைவார்கள். தமிழக எல்லையில் இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் தனிமைப்படுத்தப்படுவார்கள். 

    10:58 (IST)06 May 2020

    திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி

    திருவண்ணாமலையில் முதல் முறையாக கொரோனா பாதிப்புக்கு ஒருவர் பலியாகியிருக்கிறார். ஆரணியைச் சேர்ந்த 55 வயது பெண் திருவண்ணாமலை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவண்ணாமலையில் கொரோனாவால் இதுவரை 25 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது

    10:48 (IST)06 May 2020

    இந்தியாவில் கொரோனா தொற்று

    இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,711-லிருந்து 49,391-ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை, 13,161-லிருந்து 14,183-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,583-லிருந்து 1,694-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

    Corona Updates: மே 6-ம் தேதிக்குள் மின் கட்டண செலுத்த வேண்டும் என்ற இறுதிகெடுவை ரத்து செய்யக்கோரியும், ஜூலை 31ஆம் தேதி வரை மின் கட்டணத்தை வசூலிக்ககூடாது என வலியுறுத்தியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மே 18-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும், மின் இணைப்புகளை துண்டிக்க கூடாது என உத்தரவிட்டனர். மேலும் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
    Coronavirus Corona Corona Virus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment