Covid-19 Cases Update: கொரோனா வைரஸ் தொற்றுக்கு தமிழகத்தில் முதல் பலி மதுரையில் நிகழ்ந்துள்ளது. மதுரை அ்ண்ணா நகர் பகுதியில் தொற்று ஏற்பட்டிருந்த 54 வயது நபர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. சீனாவில் தொடங்கிய உயிர்கொல்லி தொற்றான 'கொரோனா வைரஸ்' உலகம் முழுவதும் ஆட்டிப்படைகிறது. 195 நாடுகளில் பரவிய வைரசால், இதுவரை 3,78,846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 16,512 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்று பரவாமல் தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வைரஸ் குறித்து பயம் மக்களிடையே பரவினாலும், கட்டுப்பாடுகளாலும், தனிமைப்படுத்தலாலும் மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கலாம். மேலும், பாதிக்கப்பட்ட பலர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து முழுவதும் குணமடைந்து வருகின்றனர்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான அறிகுறிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் பிரான்ஸ் சுகாதாரத்துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் புதிதாக ஒரு அறிகுறியை கண்டுபிடித்துள்ளனர். உலக நாடுகளில் கடும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயின் அறிகுறிகளாக கடுமையான காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சுத்திணறல், போன்றவற்றை மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Corona latest news updates : உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
நியூசிலாந்து, லண்டனில் இருந்து தமிழகம் வந்த 3 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கொரானா பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்ந்திருக்கிறது. மேலும் 3 பேருக்கு கொரோனா இருக்கும் தகவலை டுவிட்டரில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ளது. அத்தியாவசிய பணிகள், உணவுப் பொருட்கள் விற்பனைக்கு தடையில்லை என்று தமிழக அரசு அறிவித்ததன் பேரில் சென்னை கோயம்பேசு காய் கனி அங்காடி வழக்கம் போல செயல்படும் என்று வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 1-ம் தேதி காலை 6 மணி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவை மீறுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது
ஐடி நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்
* ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட தடை. பார்சல் வாங்கிச் செல்ல மட்டும் அனுமதி
* உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி, ஜொமேட்டோ, ஊபர் போன்ற நிறுவனங்கள் செயல்பட தடை
மருத்துவ பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தொடர்ந்து இயங்க அனுமதி
* மார்ச் 1ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியது கட்டாயம்
* அத்தியாவசிய காரணங்களை தவிர, வேறு எதற்காகவும் மக்கள் வெளியே செல்ல தடை
ஆம்புலன்ஸ், பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி
கல்லூரி தேர்வுகளும், வேலை வாய்ப்பு போட்டித் தேர்வுகளும் தள்ளிவைப்பு
ஆசிரியர்கள், கல்வி நிறுவன ஊழியர்கள் மார்ச் 31 வரை வீட்டில் இருந்து பணி செய்ய அறிவுரை
அரசு அலுவலகங்கள், தன்னாட்சி அமைப்புகள், பொதுத் துறை நிறுவனங்கள் மூடல்
கடைகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் கடைகள் மூடல்.
சாலையில் கூட்டமாக யாரும் நிற்கக் கூடாது, அனைவரும் வீட்டிற்கு உடனடியாக செல்ல வேண்டும் என்றும் போலீசார் எச்சரித்து வருகின்றனர்.
தடை காலத்திலும் பொதுமக்கள் சிரமத்தை போக்கும் வகையில் வாரியம் சார்பாக குடிநீர் வழங்க ஏற்பாடு
அனைத்து பகுதிகளிலும் குறைபாடு இன்றி உடனுக்கு உடன் குடிநீர் வழங்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் வெவ்வேறு இடங்களுக்கு சென்று குறைகளை சரி செய்வார்கள்
-தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அறிவிப்பு
மருத்துவமனைகள் தங்களது பரிசோதனை மையங்கள், தனி வார்டுகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருங்கள் - அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்.
செயற்கை சுவாச கருவிகள், முகக்கவசங்கள், மருந்து பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.
கொரானோவை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவு.
மார்ச், ஏப்ரல், மே மாத ஜிஎஸ்டியை ஜூன் இறுதி வரை தாக்கல் செய்யலாம். நாட்டில் பொருளாதார அவசர நிலையை பிரகடனப்படுத்தும் திட்டம் இல்லை. ரூ.5 கோடிக்கு கீழ் பரிவர்த்தனை செய்யும் வணிகர்களுக்கு ஜிஎஸ்டி தாமதத்திற்கான அபராதம் ரத்து - நிதியமைச்சர்
சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா நோயால், வயதானவர்களுக்கு இறப்பு நேரிடுவதால், உலகம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார். மக்கள் வெளியூர் பயணங்களை தவிர்த்து, வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். உலக நாடுகளை கொரோனா உலுக்கி கொண்டிருந்தால், அதன் ஏற்படும் ஆபத்துகளை உணர்ந்து, மக்கள் அரசுக்கு மிகப்பெரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்தார். எதிர்மறையான கருத்துக்களுக்கு இடமளிக்காமல், ஒருமித்த கருத்துகளுடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மும்பையில், 2 வாரத்துக்குள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை கட்ட முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்வதாக அறிவித்துள்ளது. மும்பை மாநகராட்சியுடன் இணைந்து,100 பேருக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய மருத்துவமனை கட்ட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்புவர்களை தனிமைப்படுத்தும் சிறப்பு முகாம்களை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அமைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. முகக்கவச உற்பத்தி, அவசர ஊர்திகளுக்கான இலவச எரிபொருள், இலவச உணவு உள்ளிட்ட பணிகளை செய்ய உள்ளதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னையில், புதிதாக மேலும் 3 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் ஸ்டான்லி மற்றும் கேஎம்சி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் புரசைவாக்கம், கீழ்க்கட்டளை மற்றும் போரூர் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனறு அமைச்சர் விஜயபாஸ்கர், டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
#coronaupdate:Chennai reports 3 new cases for #COVID19. All 3 travelled abroad.74 Y M return from USA at #Stanley,52 Y F return from USA at #Stanley,25 Y F return from Swiss at #KMC,.They are residents of Porur, Purasaivakkam, Keelkattalai rsptvly.Pts in isolation & stable. #CVB
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 24, 2020
கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் வரும்பட்சத்தில், கோவிட் 19 நோயாளிகள், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற வழிவகை ஏற்படும்.
சென்னை அரசு மருத்துவமனையில் 350 படுக்கைகளுடன் கொரோனா சிறப்பு வார்டு தயார் ஆக இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
#Infrastructure: #TNHealth is scaling up additional facilities. I personally inspected the site.A 350 bedded isolation ward will be ready tomorrow at #Tamilnadu Govt MultiSuper Speciality hospital to accommodate more patients,if required. @CMOTamilNadu @MoHFW_INDIA #Vijayabaskar pic.twitter.com/ACyMpjo1A2
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 24, 2020
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு நிலை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டுள்ள கட்டட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று மாநில முதல்வர்களுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
Congress president Sonia Gandhi writes to party's chief ministers asking them to take steps to provide wage support to registered construction workers. @IndianExpress #Covid19India pic.twitter.com/7xCDnNAyFD
— Manoj C G (@manojcg4u) March 24, 2020
கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரி்தது வரும் நிலையில், அதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்த பிரதமர் மோடி சமீபத்தில் மக்களிடையே உரையாற்றியிருந்த நிலையில், இன்று ( மார்ச் 24) இரவு 8 மணிக்கும் மீண்டும் நாட்டு மக்களிடையே உரையாற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு எதிராக சர்வதேச அளவில் மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய நேரம் என்று ஐக்கிய நாடுகள் சபை பாெதுச்செயலாளர் ஆன்டனியோ குவாட்ரஸ் தெரிவித்துள்ளார்.
It’s time to end the sickness of war and fight the disease that is ravaging our world – the #coronavirus pandemic.
It starts by stopping the fighting everywhere. Now.
That is what our human family needs, now more than ever.https://t.co/K08WmglU2X
— António Guterres (@antonioguterres) March 23, 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, சர்வதேச விமான சேவை கடந்த 22ம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்நாட்டு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நாளை (25ம் தேதி முதல்) கார்கோ விமானங்கள், சிறப்பு விமானங்கள், ஆப் ஷோர் ஹெலிகாப்டர்கள், மருத்துவ சேவை விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் என்று விமானத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோயை சமாளிக்க உதவும் வகையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் முக கவச உற்பத்தி திறனை, ஒரு நாளைக்கு, ஒரு லட்சம் என்ற அளவுக்கு உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights