Covid-19 Cases Updates: 30 நிமிடத்தில் ரிசல்ட் தரக் கூடிய 1 லட்சம் கொரோனா ராபிட் டெஸ்ட் கிட் வாங்க ஆணை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
1 லட்சம் துரித ஆய்வு உபகரணங்கள் (Rapid Test Kits) கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனையின் நேரமே 30 நிமிடம் தான்.
இதனை சீனாவிலிருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவை 9ம் தேதி கிடைத்தவுடன் 10ம் தேதி எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 6, 2020
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும், மக்கள் அனைவரும் விளக்கேற்றினார்கள். ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக ஆளுயர குத்து விளக்கை ஏற்றினார் பிரதமர் மோடி. குடியரசுத் தலைவர், அமைச்சர்கள், திரையுலக பிரபலங்களும் விளக்கேற்றி தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் 571 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதோடு இத்தொற்றுக்கு 5 பேர் தமிழகத்தில் பலியாகியிருக்கிறார்கள். சென்னையில் அதிகபட்சமாக 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதால், இதனை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அபாயம் காரணமான ஈரோட்டில் 1,09,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 83-ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சைக்குப் பின் 273 பேர் குணமடைந்திருப்பதாக, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் ஒரே நாளில் 1 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் பலியானவர்களின் எண்ணிக்கை 10,000-ஐ நெருங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.
Live Blog
Coronavirus Updates, Coronavirus Latest cases, Covid-19 Latest Cases numbers in tamil nadu - உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தமிழகத்தில் அதன் தாக்கம் உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 704 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 4,281 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் இதுவரை 111 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி, “இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை ஊக்குவிக்கவும், மற்ற நாடுகளை சார்ந்திருப்பதை குறைக்கவும் இந்த நெருக்கடி ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. மத்திய அமைச்சர்கள், ஊரடங்கு முடிவுக்கு வந்ததும், கவனம் செலுத்த வேண்டிய 10 முக்கிய பிரிவுகளை கண்டறிய வேண்டும். அறுவடை காலத்தில் விவசாயிகளுக்கு அனைத்து விதமான உதவிகளையும் அரசு வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரதமரு உள்பட அனைத்து எம்.பி-க்களின் ஊதியம், படிகள், ஓய்வூதியம் 30% குறைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
எம்.பி.க்களின் ஊதியம், படிகள் பிடித்தம், தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தம் நடவடிக்கையை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்
மற்ற கட்சிகளின் எம்.பி.-க்களின் கருத்துகளைக் கேட்காமல் மத்திய அமைச்சரவை தன்னிச்சையாக முடிவெடுத்திருப்பது ஜனநாயக விரோதமானது - திருமாவளவன்
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 6 ஆக உயர்வு
மூச்சுத் திணறல் ஏற்பட்டதில் பெண் ஒருவர் பலியான நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் கொரோனாவிற்கு பலி
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 70,172ஆக உயர்வு. அதிகபட்சமாக இத்தாலி - 15,887 ஸ்பெயின் - 13,055 அமெரிக்கா - 9,620 பிரான்ஸ் - 8,078 பேர் உயிரிழப்பு
உலகம் முழுவதும் 12.82 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் - 2.69 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்
குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், ஆளுநர்களின் ஊதியம் 30 சதவீதம் குறைப்பு. பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஊதியமும் 30 சதவீதம் குறைப்பு. அனைத்து எம்.பி-க்களின் ஓராண்டு ஊதியமும் 30 சதவீதம் குறைப்பு. ஊதிய குறைப்பால் சேமிக்கப்படும் நிதி கொரோனா நிவாரண நிதியில் சேர்க்கப்படும்.
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு - அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது
அமெரிக்கா வனஉயிரியல் பூங்காவில் உள்ள புலிக்கு கொரோனா தொற்று எதிரொலி
இந்தியாவில் உள்ள வன உயிரியல் பூங்காக்களுக்கு மத்திய வனத்துறை அமைச்சகம் எச்சரிக்கை. உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவு.
நோய்வாய்ப்பட்ட விலங்குகளை தனிமையில் வைத்து கண்காணிக்க உத்தரவு. நோய்வாய்ப்பட்ட விலங்குகளின் ரத்த மாதிரிகளை உடனடியாக ஆய்வகங்களுக்கு அனுப்ப உத்தரவு.
"இந்தியாவில் கொரோனாவின் வீரியம் படிப்படியாக அதிகரிக்கிறது. 30 நிமிடங்களில் பரிசோதனை செய்யும் வகையில் 1 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளன. மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.500 கோடி வந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 21 இடங்களில் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது. 3,371 வெண்டிலேட்டர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ளன. பல்வேறு தொழிலாளர் நல வாரியங்களில் உள்ளவர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும். 21 நாட்களுக்கு பிறகு நோயின் தீவிரத்தை பார்த்த பிறகு தான் பள்ளித் தேர்வுகள் குறித்து முடிவு செய்யப்படும். அரிசி ரேசன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே அரசின் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்" - முதல்வர் பழனிசாமி.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், எடப்பாடி பழனிச்சாமி, “மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும். மக்களை துன்புறுத்த வேண்டும் என்பது, அரசின் நோக்கமல்ல. மக்கள் இதை புரிந்துக் கொள்ள வேண்டும். அத்தியாவசிய பொருட்களை முடிந்தளவு வீடுகளுக்கே சென்று, வழங்க அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. சென்னையிலும் நடமாடும் காய்கறி கடைகளை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
டெல்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு மதுராந்தகத்தில் தங்கியிருந்த இந்தோனேசியர்கள் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்ட விதி மீறல், விசா விதி மீறல், 144 தடை மீறல் உள்ளிட்ட விதிகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவை மீறியதாக, தமிழகத்தில் இதுவரை 82,752 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் காவல்துறையால் 90,918 பேர் கைதாகி விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளின்றி வெளியில் சுற்றிய 69,589 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இதுவரை 24 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிப்பு
இன்று பாஜக துவங்கி 40 ஆண்டுகள் நிறைவுறுகிறது. 1977 ல் ஜனதாவில் இணைந்தது ஜனசங்கம். ஆர் எஸ் எஸ் ல் உள்ளவர்கள் ஜனதாவில் இருக்க முடியாது என்ற தீர்மானத்தால் பாஜக துவங்கப்பட்டது. காரைக்குடி கட்சி அலுவலகம் முன்பு கொடியேற்றப்பட்டது. pic.twitter.com/OOYqkGK2bT
— H Raja (@HRajaBJP) April 6, 2020
நிலவேம்பு குடிநீர் போல் கபசுர குடிநீர் குடிப்பதும் பயனுள்ளதாக இருக்கும், அது நன்மைதரும் என்றும், அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அவசியம் எனவும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாட்டுத்தாவணி மொத்த காய்கறி சந்தையில் சமூக விலகலை கடைப்பிடிக்காத 5 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் வழங்கியும் சமூக விலகலை கடைப்பிடிக்காததால் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதே போல் சென்னை தி நகரில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் மலேசியா செல்ல முயன்ற 10 பேர் மீது 8 பிரிவின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற 10 பேரும் மலேசியா செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும், சோர்வடைந்த மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்திலும் சிஆர்பிஎஃப் வீரர்களின் இசைக்குழு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளது. பேண்டு வாத்தியங்கள் முழங்க இசைக்கப்ப்டும் அந்த பாடலை சிஆர் பிஎஃப் வெளியிட்டுள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் முக்கியமான 2 வார காலக்கட்டத்திற்குள் நுழைகிறது. எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேசியது வரவேற்கத்தக்கது. கொரோனாவை கட்டுப்படுத்த எதிர்க்கட்சி தலைவர்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
India enters a crucial two week period today. So does the world
It is good that @narendramodi spoke to leaders of Opposition parties. I have no doubt that every one of them pledged support to the government’s efforts to battle the spread of COVID-19.
— P. Chidambaram (@PChidambaram_IN) April 6, 2020
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights