Advertisment

சனாதனம் குறித்த கருத்துகளை எதிர்க்கவும், இந்தியா-பாரதம் பேச்சை தவிர்க்கவும்: அமைச்சர்களிடம் மோடி வலியுறுத்தல்

சனாதன தர்மம் குறித்த எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள், இந்தியா-பாரதம் தொடர்பாக கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவும்: ஜி 20 மாநாட்டிற்கு முன்னதாக அமைச்சர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

author-image
WebDesk
New Update
pm modi

பிரதமர் நரேந்திர மோடி

PTI

Advertisment

சனாதன தர்மம் குறித்த எதிர்க்கட்சித் தலைவர்களின் சர்ச்சைக்குரிய கருத்துகளை கடுமையாக மறுத்து, அவற்றை அம்பலப்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தனது அமைச்சர்களை கேட்டுக் கொண்டார் என்றும், அதேநேரம் பாரதம் என்பது நாட்டின் பழங்காலப் பெயர் என்று குறிப்பிட்டு பாரதப் பிரச்சினையைச் சுற்றியுள்ள அரசியல் குழப்பத்தைத் தவிர்க்குமாறு தனது அமைச்சரவை சகாக்களிடம் கூறியுள்ளார், என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரவிருக்கும் ஜி 20 உச்சிமாநாட்டின் போது அவர்கள் கடைபிடிக்க வேண்டிய மற்றும் செய்யக்கூடாதவைகளை வகுத்துள்ள மத்திய அமைச்சர்கள் குழுவுடனான தனது உரையாடலின் போது மோடி இந்தக் கருத்துக்களை கூறினார். உச்சி மாநாட்டின்போது தேசிய தலைநகரான டெல்லியில் தங்கியிருக்கவும், வருகை தரும் பிரமுகர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட எந்தவொரு கடமையையும் செய்யுமாறும் மோடி கேட்டுக் கொண்டார்.

அமைச்சர்கள் தங்களது அதிகாரப்பூர்வ வாகனங்களை நிறுத்திவிட்டு, ஷட்டில் சேவையைப் பயன்படுத்தி பாரத மண்டபம் மற்றும் பல்வேறு கூட்டங்கள் நடைபெறும் இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஜி 20 விவகாரங்கள் தொடர்பான பல்வேறு விஷயங்களில் நியமிக்கப்பட்ட நபர்களை பேச அனுமதிக்கவும், வெளியில் பேசுவதைத் தவிர்க்கவும் பிரதமர் அவர்களிடம் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

மக்களிடையே பிளவு மற்றும் பாகுபாடுகளை வளர்க்கும் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியதையடுத்து, கட்சி தலைவர்கள் வட்டாரத்தில் பேசிய மோடி, இதுபோன்ற அறிக்கைகளின் பின்னணியில் உள்ள கட்சிகள் மற்றும் தலைவர்கள் அம்பலப்படுத்தப்பட்டு உண்மையை மக்கள் முன் கொண்டு வர வேண்டும் என்றார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சனாதன் தர்மத்தின் சகிப்புத்தன்மை குறித்து பிரதமர் சாதகமாகப் பேசியதாகவும், எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துக்களை கடுமையாக மறுக்குமாறு அமைச்சர்களைக் கேட்டுக் கொண்டதாகவும் ஒரு ஆதாரம் கூறியது.

சமீபத்தில் அதிகாரபூர்வ தகவல்களில் திரௌபதி முர்முவை "பாரதத்தின் ஜனாதிபதி" என்றும், மோடியை "பாரதத்தின் பிரதமர்" என்றும் அழைத்ததை அடுத்து, அரசாங்கம் அரசியலமைப்பை மீறுவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியதால், அமைச்சர்கள் அது தொடர்பாக கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

அரசியலமைப்புச் சட்டமே நாட்டை இந்தியா என்றும் பாரத் என்றும் குறிப்பிடுகிறது என்றும், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தில் தேவையற்ற சர்ச்சையைத் தூண்டுவதாகவும் அரசு வட்டாரங்கள் வலியுறுத்தியுள்ளன.

கூட்டத்தில், ஜி 20 இந்தியா மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து, வெளிநாட்டு பிரமுகர்களுடன் உரையாடும் போது அதன் மொழிபெயர்ப்பு மற்றும் பிற அம்சங்களை சிறப்பாகப் பயன்படுத்துமாறு அமைச்சர்களை மோடி கேட்டுக் கொண்டார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

G20 மொபைல் செயலி அனைத்து இந்திய மொழிகளையும் G20 நாடுகளின் மொழிகளையும் உள்ளடக்கிய உடனடி மொழிபெயர்ப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது.

செப்டம்பர் 9-10 தேதிகளில் நடைபெறும் உச்சிமாநாட்டில் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உட்பட கிட்டத்தட்ட 40 உலகத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில், வெளியுறவுச் செயலர் வினய் மோகன் குவாத்ரா நெறிமுறைகள் மற்றும் அது தொடர்பான விஷயங்களை அமைச்சர்களுக்கு விரிவாக விளக்கினார்.

உச்சிமாநாட்டிற்கு வரத் தொடங்கியுள்ள உலகத் தலைவர்களை வரவேற்க அமைச்சர்கள் தயார் நிலையில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை டெல்லி வந்தடைந்த நைஜீரியா அதிபர் போலா அகமது டினுபுவை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் எஸ்.பி.எஸ் சிங் பாகேல் வரவேற்றார்.

ஏறக்குறைய ஒரு மணி நேரம் நீடித்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன் நடந்த முறைசாரா உரையாடலின் போது, ​​உச்சிமாநாடு இந்தியாவிற்கும் அதன் உலகளாவிய உருவத்திற்கும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று அமைச்சர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pm Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment