Advertisment

புதுச்சேரி இடையூறான மதுக் கடைகள் அகற்றப்படும்; சி.பி ராதாகிருஷ்ணன்

புதுச்சேரி பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுபான கடைகளும் ரெஸ்ட்ரோபார்களும் அகற்றப்படும் என துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Jharkhand Governor CP Radhakrishnan, எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை இருக்கிறதா என்பது கேள்விக்குறி, ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், CP Radhakrishnan, Whether there is unity between the oppositions is questionable

புதுச்சேரியில் பொதுமக்களுக்கு இடையூறான மதுக்கடைகள் அகற்றப்படும் என சி.பி ராதாகிருஷ்ணன் கூறினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

புதுச்சேரியில் இருந்து பாய் மர படகில் 11 நாட்கள் சாகசப் பயணம் மேற்கொண்டு புதுச்சேரி திரும்பிய நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களை வரவேற்று அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “புதுச்சேரியில் நீண்ட நெடுங்காலமாக மதுபான கடைகள் உள்ளன.

பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் ரெஸ்ட்ரோபார்கள் அகற்றப்படும். போதைப் பொருளை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் அரசு எடுத்துள்ளது. போதைப்பொருட்கள் எங்கிருந்தாலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். அவற்றை அகற்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisment

போதைப்பொருள் நடமாட்டம் குறைந்து வருகிறது என்பதை மக்களின் மூலம் நான் அறிந்து வருகிறேன். போதைப் பொருள் முழுவதும் ஒழிக்க  நடவடிக்கை தொடரும். சந்தன கட்டை விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment