/tamil-ie/media/media_files/uploads/2023/07/CP-Radhakrishnan.jpg)
புதுச்சேரியில் பொதுமக்களுக்கு இடையூறான மதுக்கடைகள் அகற்றப்படும் என சி.பி ராதாகிருஷ்ணன் கூறினார்.
புதுச்சேரியில் இருந்து பாய் மர படகில் 11 நாட்கள் சாகசப் பயணம் மேற்கொண்டு புதுச்சேரி திரும்பிய நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களை வரவேற்று அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை கவர்னர் சிபி ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “புதுச்சேரியில் நீண்ட நெடுங்காலமாக மதுபான கடைகள் உள்ளன.
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் ரெஸ்ட்ரோபார்கள் அகற்றப்படும். போதைப் பொருளை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் அரசு எடுத்துள்ளது. போதைப்பொருட்கள் எங்கிருந்தாலும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். அவற்றை அகற்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
போதைப்பொருள் நடமாட்டம் குறைந்து வருகிறது என்பதை மக்களின் மூலம் நான் அறிந்து வருகிறேன். போதைப் பொருள் முழுவதும் ஒழிக்க நடவடிக்கை தொடரும். சந்தன கட்டை விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us