Advertisment

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை எதிர்க்க புதிய திட்டம்; மலைப் படைப்பிரிவு பட்டாலியன்களை உருவாக்கும் சி.ஆர்.பி.எஃப்

சி.ஆர்.பி.எஃப் அதன் மலைப் படைப் பிரிவு மவுண்டன் பட்டாலியன்களுக்காக 659 பணியிடங்களை உருவாக்குவதற்கான முன்மொழிவை இந்த கூட்டத்தின்போது முன்னிலைப்படுத்தியதாக தெரிய வந்துள்ளது.

author-image
WebDesk
New Update
crpf amit shah jk

சி.ஆர்.பி.எஃப் அதன் மலைப் படைப்பிரிவு பட்டாலியன்களுக்காக 659 பணியிடங்களை உருவாக்குவதற்கான முன்மொழிவை இந்த சந்திப்பின்போது முன்னிலைப்படுத்தியது தெரிய வந்துள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எஃப்) ஜம்மு காஷ்மீரில் உள்ள மலைப் படைப்பிரிவு பட்டாலியன்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது, தற்போதுள்ள பட்டாலியன்களுக்கு அவற்றின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக மலைப் பகுதி போரில் பயிற்சி அளிப்பதைத் தொடங்கியிருபது இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு தெரிய வந்தது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: CRPF plans to raise mountain battalions to fight terror in J&K

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  ஜூன் 16-ம் தேதி ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலைமையை மறுபரிசீலனை செய்யவும், ஜூன் 29-ம் தேதி தொடங்கவிருக்கும் அமர்நாத் யாத்திரைக்கான ஆயத்தங்களை ஆய்வு செய்யவும் நார்த் பிளாக்கில் ஒரு உயர்மட்டக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா ​​உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சி.ஆர்.பி.எஃப் அதன் மலைப் படைப்பிரிவு பட்டாலியன்களுக்காக 659 பணியிடங்களை உருவாக்குவதற்கான முன்மொழிவை இந்த சந்திப்பின்போது முன்னிலைப்படுத்தியது தெரிய வந்துள்ளது.

“அவர்களின் (பயங்கரவாதிகளின்) வழக்கமான நடவடிக்கைகளைக் கண்காணித்த பிறகு, ஒரு காலகட்டத்தில், அவர்கள் நகர்ப்புறங்களில் இருந்து உயரமான பகுதிகளில் உள்ள காடுகளின் நிலப்பரப்புகளுக்குச் சென்றதைக் காண முடிந்தது. அவர்கள் தங்கள் செயல் முறைகளை மாற்றிக்கொண்டிருப்பதால், பாதுகாப்பு நிறுவனங்களும் தற்போதைய சூழ்நிலையின்படி தங்கள் திட்டங்களுக்கு புத்துயிர் பெற வேண்டும்,” என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார்.

ஜம்மு காஷ்மீர் மண்டலம் சி.ஆர்.பி.எஃப் அதிகார வரம்பிற்கு உட்பட்ட மிகப்பெரிய மண்டலங்களில் ஒன்று, இது 80 செயல்பாட்டு பட்டாலியன்கள் நிறுத்தப்பட்டுள்ள 6 பிரிவுகளை உள்ளடக்கியது.

ஜூன் 24 அன்று, ஜம்மு காஷ்மீர் எல்லைக்கு ஒரு தகவல் தொடர்பு, சி.ஆர்.பி.எஃப் டி.ஜி, மலைப் படைப்பிரிவு பட்டாலியன்களை அதிகரிக்கும் பணியைத் தொடங்குமாறு அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. “தொடக்கமாக, தற்போதுள்ள ஒரு படைப்பிரிவுக்கு மலைப்போர் பயிற்சி அளிக்கப்படலாம். உளவுத்துறை அமைப்பை வலுப்படுத்துவதற்காக, 659 பணியிடங்களை உருவாக்குவதற்கான முன்மொழிவு உள்துறை அமைச்சகத்தில் தீவிர பரிசீலனையில் உள்ளது, ஒப்புதல் கிடைத்ததும், கவலைகளை நிவர்த்தி செய்யும். மேலும், நீண்ட கால - நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை - சமூக ஈடுபாடு திட்டங்கள் மண்டலங்களால் தயாரிக்கப்பட வேண்டும், அவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்படும்” என்று ஒரு அதிகாரி கூறினார்.

ஜம்முவில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து நார்த் பிளாக்கில் கூட்டம் நடந்தது. ஜூன் 9-ம் தேதி ரியாசியில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து தாக்கப்பட்டதில் 9 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 33 பேர் காயமடைந்தனர். பின்னர், தோடா மற்றும் கதுவா மாவட்டங்களில் நடந்த 3 வெவ்வேறு என்கவுன்டர்களில் ஒரு சி.ஆர்.பி.எஃப் வீரர் மற்றும் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 7 பாதுகாப்பு வீரர்கள் காயமடைந்தனர்.

பின்னர் நடந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாத எதிர்ப்பு திறன்களின் முழு பரப்பையும் வரிசைப்படுத்தலை உறுதிப்படுத்துமாறு மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஜம்மு குறித்த சந்திப்பின் போது, ​​வலுவான உளவுத்துறையை உருவாக்குவது மற்றும் ஜம்மு எல்லையில் ஊடுருவல் தடுப்புக் கட்டத்தை வலுப்படுத்துவது (ஜம்முவில் சமீபத்திய தாக்குதல்கள் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது) தேவை என்று முடிவு செய்யப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. களத்தில் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினர் அதிகம் இருக்க வேண்டும். “களத்தில் வீரர்களை அதிகரிக்கவும் அதிக ரோந்துப் பணியை மேற்கொள்ளவும் விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது” என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jammu Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment