புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான 128-ஸ்லைஸ் சி.டி ஸ்கேன் கருவி மற்றும் ஆம்புலன்ஸ்கள் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவிற்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், சபாநாயகர் செல்வம் மற்றும் கதிர்காமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் ஆகியோரும் பங்கேற்றனர். இது தவிர சுகாதாரத் துறை செயலர் ஜெயந்த் குமார் ராய், சுகாதாரம் மற்றும் குடும்ப நல சேவைகள் இயக்குநர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தீவிர நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறியும் வகையிலான இந்தக் கருவி, மக்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதன் மூலம் புதுச்சேரியின் அவசர மருத்துவ சேவைகள் வலுப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.