Advertisment

தட்சின கன்னடாவில் நடந்த கொலை: கேள்விக்குறியான பசவராஜ் பொம்மையின் எதிர்காலம்

பாஜகவின் ஒரு பிரிவினர் பசவராஜ் பொம்மையை ஆட்சியில் இருந்து அகற்ற முயற்சி செய்கிறார்கள். ஆனால், கர்நாடக முதல்வரும் கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடிய தலைவராக தன்னை காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார்.

author-image
WebDesk
New Update
karnataka, bjp, basavaraj pommai, tamil indian express, political pulse, india

பாஜகவின் ஒரு பிரிவினர் பசவராஜ் பொம்மையை ஆட்சியில் இருந்து அகற்ற முயற்சி செய்கிறார்கள். ஆனால், கர்நாடக முதல்வரும் கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடிய தலைவராக தன்னை காட்டிக்கொள்ள முயற்சி செய்கிறார்.

Advertisment

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையின் பதவிக்காலம் இன்னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஜூலை 26 ஆம் தேதி தட்சிண கன்னடா பகுதியில் 32 வயதான பாஜக இளைஞர் அணி அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதை அடுத்து, பாஜகவில் ஒரு பிரிவினரின் திட்டமிடப்பட்ட முயற்சியால் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பதவியில் இருந்து வெளியேற்றப்படும் அபாயத்தில் உள்ளார்.

பா.ஜ.க.வின் ஒரு பிரிவினர் பசவராஜ் பொம்மைக்கு எதிராக சமூக ஊடக குழுக்களிலும், கொலை செய்யப்பட்ட பிரவீன் நெட்டாருவுடன் தொடர்புடைய பாஜக யுவமோர்ச்சா போன்ற துணை அமைப்புகளிலும் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். இது, 2023 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பசவராஜ் பொம்மை முதல்வராக நீடிப்பது சாத்தியமில்லை என பாஜக தலைமைக்கு உணர்த்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூலை 27 முதல், பாஜக மாநிலத் தலைவர் நளின் குமார் கட்டீல் மற்றும் மாநில அமைச்சர் சுனில் குமார் கர்கலா ஆகியோர் நெட்டாருவின் வீட்டிற்குச் சென்றபோது, ​​தட்சின கன்னடாவில் இந்துத்துவா அமைப்புகளால் தாக்கப்பட்டனர். மேலும், பாஜக இளைஞரணி நிர்வாகி கொலையைப் பயன்படுத்தி ஒரு பிரச்சாரம் நடந்து வருகிறது. ஒரு கடினமான முதல்வர் தேவை. அதே நேரத்தில் பசரவராஜ் பொம்மையை ஆட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜகவுக்கு உள்ளே இருப்பவர்களே தெரிவிக்கின்றனர்.

பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தலைவர்களின் ராஜினாமா பிரச்சாரம், பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தலைவர் தேஜஸ்வி சூர்யா, இதுவே காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியில் இருந்திருந்தால் முதலில் கல்லை எறிந்திருப்பேன் என்று யுவமோர்ச்சா தொண்டர்களிடம் கூறும் வீடியோ வைரலானது. இது பாஜகவின் சமூக ஊடக குழுக்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாஜக இளைஞரணி அமைப்பு தலைவர் கொலையைக் கண்டித்து 700க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் பதவி விலகுவதாக அறிவித்தனர். மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவின் வீட்டை ஏபிவிபி செயல்பாட்டாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்கான மறைமுகப் பிரச்சாரமாக பாஜகவின் ஒரு பிரிவினரால் பார்க்கப்படுகிறது.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் தூண்டுதலைத் தொடர்ந்து ஜூலை 28 ஆம் தேதி பசவராஜ் பொம்மை அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவை ரத்து செய்ய பாஜக தலைமை கட்டாயப்படுத்தப்பட்டது. பாகவின் ஒரு பிரிவினர் இந்த கொலையையும் அதன் பின்விளைவுகளையும் அரசாங்கம் கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சி சாதனைகளை முன்னிலைப்படுத்தாத அளவுக்கு தீவிரமானதாக சித்தரித்துள்ளனர்.

“பாஜகவின் ஒரு பிரிவினர் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி ஆட்சியைப் பிடிப்பதற்கு அதன் நிகழ்ச்சி நிரலை முன்வைக்கிறார்கள் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது. பசவராஜ் பொம்மை நிர்வாகம் ஊழல், முறைகேடு போன்ற குற்றச்சாட்டுகள் இல்லாமல் இருந்தது என்பதல்ல. ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையை பொம்மையை வெளியேற்ற உள்கட்சியினர் பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என்று பாஜக வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்பு அவர் முதல்வராக பதவியேற்றதிலிருந்து, கிட்டத்தட்ட 10 மாதங்களாக பசவராஜ் பொம்மை மாற்ற வேண்டும் என்ற அச்சுறுத்தலை எதிர்கொண்டார். ஆனால், கர்நாடகாவின் சாதி கணக்கிடுகளைக் கருத்தில் கொண்டு, பாஜக தலைமை இந்த எல்லையைப் பின்பற்றுவதன் மூலமும், வேறு மாற்று இல்லாததாலும் அவர் தொடர்ந்து பதவியில் இருக்க முடிந்தது.

முதல்வர் பதவிக்கு பாஜக தலைமையின் முதல் தேர்வாக பசவராஜ் பொம்மை இல்லை என்றாலும், முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்த ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் மற்றும் பாஜகவின் ஒரு பிரிவினருடனான சமன்பாடுகளின் காரணமாக அந்த பதவியை அவர் பெற முடிந்தது. பாஜக தலைமையும் இப்போது தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி தனக்கென ஒரு வேட்பாளரைக் கொண்டுவரக்கூடும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“முதல்வரை மாற்றுவது பாஜகவை உடனடியாக பாதிக்காது. ஆனால், பாதிப்பு இனி வரும் நாட்களில் வரலாம். தட்சிண கன்னடாவில் நடந்த கொலைகளால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையின் பின்னணியில் உடனடி மாற்றம் காணப்படும்” என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வன்முறையைக் கட்டுப்படுத்த தேவைப்பட்டால் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மாதிரியைக் கடைப்பிடிப்பேன் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியது, கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் திறன் கொண்ட தலைவராக தன்னைக் காட்டிக் கொள்ளும் முயற்சியாகவும், அவரை வெளியேற்றும் திட்டங்களுக்கு எதிராக தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

மாநில அமைச்சர் டாக்டர் சிஎன் அஸ்வத்நாராயணன் கடந்த வாரம், குற்றங்களைச் சமாளிக்க என்கவுன்டர்களை நடத்துவதற்கு யோகி அரசாங்கத்தை விட ஐந்து படிகள் மேலே செல்ல மாநில அரசு தயாராக இருப்பதாகக் கூறினார். அவரது கருத்தும் சூர்யாவின் கருத்தும் பசவராஜ் பொம்மையின் பதவிக்காலத்தின் மீதான மறைமுகத் தாக்குதலாகப் பார்க்கப்படுகிறது, இது பல குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் மாதம், கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரும், அமைப்புச் செயலாளருமான பி.எல்.சந்தோஷ், கட்சிக் கூட்டத்தில், பாஜக ஆட்சியிலும் கட்சியிலும் பெரிய மாற்றங்களைச் செய்யும் நிலையில் இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

“இது எல்லா இடங்களிலும் நடக்கும் என்று நான் கூறவில்லை, ஆனால் மற்ற அரசியல் கட்சிகளால் கூட நினைத்துப் பார்க்க முடியாத முடிவுகளை பாஜகவால் எடுக்க முடிகிறது. கட்சி மீதான நம்பிக்கை மற்றும் விருப்பத்தின் காரணமாக, இந்த முடிவுகள் சாத்தியமானது. குஜராத்தில் முதல்வர் மாற்றப்பட்டதும் ஒட்டுமொத்த அமைச்சரவையும் மாற்றப்பட்டது. இது புத்துணர்ச்சியைத் தூண்டும் நோக்கத்துடன் செய்யப்பட்டது. புகார்கள் எதுவும் இல்லை” என்று பாஜக தலைவர் கூறினார்.

பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவின் வருகைக்கு முன்னதாக வந்த இந்த கருத்துக்கள், 2020ல் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியின் வழியில் கர்நாடக முதல்வர் மாற்றப்படுவதற்கான அறிகுறியாகக் காணப்பட்டது. சமீப வாரங்களில், ஏப்ரல் 2023 வரை அவரது பதவிக்காலம் முழுவதுமாக நீடித்தது குறித்து முன்பு இருந்த சந்தேகங்களை களைய முடிந்தது.

இதற்கிடையில், மாநில பாஜக தலைவராக நளின் குமார் கட்டீல் நீடிப்பாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 8-ம் தேதியுடன் முடிவடைகிறது. தட்சிண கன்னடாவில் உள்ள கட்சித் தொண்டர்களிடையே பரவலான கோபத்தின் காரணமாக, மாநில பிரிவின் தலைமையில் கட்டீலின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில், “தட்சின கன்னடத்தில் நடக்கும் சம்பவங்களுக்கும், சங்க பரிவார உள் மோதல்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது.” என்று கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Karnataka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment