Advertisment

17 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தலித் பொறியாளர்; தாக்கிய ராஜஸ்தான் காங். எம்.எல்.ஏ

28 வயதான இளைஞர் உதவியின்றி நடக்க முடியாமல் கிட்டத்தட்ட 17 மாதங்கள் ஆகின்றன. ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் உள்ள அவரது அறையில், ஹர்ஷாதிபதி நாள் முழுவதும் படுக்கையில் இருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
SMS Hospital in Jaipur, Harshadhipati, Harshadhipati Valmiki, Gehlot MLA booked for assault of Dalit engineer, 17 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தலித் பொறியாளர், ராகுல் உடன் நடந்த தாக்கிய காங். எம்.எல்.ஏ, ராஜஸ்தான், காங்கிரஸ், அசோக் கெலாட், ஹர்ஷாபதி வால்மீகி தலித் பொறியாளர், ராகுல் காந்தி, India news, Indian express, Indian express India news, Indian express India

17 மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தலித் பொறியாளர்; ராகுல் உடன் நடந்த தாக்கிய காங். எம்.எல்.ஏ

28 வயதான இளைஞர் -ஆதரவின்றி நடக்க முடியாமல் கிட்டத்தட்ட 17 மாதங்கள் ஆகின்றன. ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் உள்ள அவரது அறையில், ஹர்ஷாதிபதி நாள் முழுவதும் படுக்கையில் இருக்கிறார்.

Advertisment

ஹர்ஷாதிபதி வால்மீகி, எலும்புகள நேராக இணைப்பதற்காக உலோகச் சட்டம் பொருத்தப்பட்டு, பல காயங்களைக் கொண்ட தனது அடிபட்ட காலைப் பார்க்கிறார்.

28 வயதான ஹர்ஷாதிபதி வால்மீகி ஆதரவின்றி நடக்க முடியாமல் கிட்டத்தட்ட 17 மாதங்கள் ஆகின்றன. ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் உள்ள அவரது அறையில், ஹர்ஷாதிபதி நாள் முழுவதும் படுக்கையில் இருக்கிறார். எப்போதாவது, அவர் வெளியே போக்குவரத்தைப் பார்க்க ஜன்னலைப் பார்க்கிறார். ஹர்ஷாதிபதிக்கு தொடை எலும்பு முறிவு உட்பட பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாக அரசு மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

“எனது உடல் காயங்கள் ஒருநாள் குணமடைந்தாலும், நான் தினமும் உணரும் துரோக உணர்வைப் பற்றி என்ன சொல்வது? எம்.எல்.ஏ கிரிராஜ் சிங் மலிங்கா என் மீது நாற்காலியை வீசினார் சாதிய அவதூறுகளை வீசினார் அவரும் அவரது கூட்டாளிகளும் என்னை பாதி இறந்துவிட்ட பிறகு என் முகத்தை மிதித்தார்கள். ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால், நான் நீதிக்காக காத்திருக்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர் பாதுகாக்கப்படுகிறார்” என்றார்.

ஜூலை 31-ம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஃபர்ஜந்த் அலி பெஞ்ச் கூறியது: “விண்ணப்பிக்காதவர் ஒரு சிட்டிங் எம்.எல்.ஏ., எனவே, நிலையான அறிவுறுத்தலின்படி, ஜெய்ப்பூரில் உள்ள சி.ஐ.டி., சி.பி.யால் விசாரணை நடத்தப்படுகிறது. ஆனால், 16-17 மாதங்களுக்கு மேலாகியும், விசாரணை முடிவு இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த நிலையில், மாநில காவல்துறை ஆளுங்கட்சியின் செல்வாக்கில் இருப்பதாகவும், அதனால் விசாரணை முடிவு தாக்கல் செய்யப்படவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. கற்றறிந்த அரசு தலைமை வழக்கறிஞராக இருந்து அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் இது சம்பந்தமாக கூறப்பட்ட கோரிக்கைகளை மறுத்தது. இருப்பினும், நிலைமையை தெளிவுபடுத்துவதற்கு அவர் குறுகிய கால அவகாசம் கோருகிறார்” என்று கூறினார்.

அரசு வழக்கறிஞர் மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கன்ஷ்யாம் ரத்தோர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தொடர்பு கொண்டபோது, “விசாரணையின் முடிவை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிமன்றம் என்னிடம் கேட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.ஐ.டி., சி.பி.,க்கு தபால் மூலம் அனுப்பியுள்ளேன்.” என்று கூறினார்.

கடந்த ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி, தோல்பூரில் நியமிக்கப்பட்ட ஹர்ஷாதிபதி, அந்த மாவட்டத்தில் உள்ள பாரியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ மலிங்காவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. முதல்வர் அசோக் கெலாட்டுடன் மேடையைப் பகிர்ந்துகொள்வது, முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டை அவரது பிறந்தநாளில் சந்திப்பது, பாரத் ஜோடோ யாத்திரையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் நடந்து செல்வது என அந்த நேரத்தை மலிங்கா செலவிட்டார்.

ராகுல் காந்தியுடன் நடந்த எம்.எல்.ஏ

ஹர்ஷாதிபதி நினைவு கூர்ந்தார்: “அரசாங்கத்தின் மின்கட்டணத்தை வசூலிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பல ஆண்டுகளாக மக்கள் மின் கட்டணம் செலுத்தாத கிராமங்களுக்கு எனது குழுவுடன் சென்று, அவர்களின் நிலுவைத் தொகையை செலுத்த வலியுறுத்துவேன். மக்கள் அடிக்கடி என் சாதியைக் கேட்பதை நான் கவனிக்கிறேன். ஒரு சந்தர்ப்பத்தில், மக்கள் என்னைச் சூழ்ந்துகொண்டு, தாக்குர் கிராமத்திற்குள் நான் எப்படி நுழையத் துணிந்தேன் என்று கேட்கிறார்கள். அவர்களில் என்னை துஷ்பிரயோகம் செய்து மிரட்டிய ஒருவர், போனில் எம்.எல்.ஏ மலிங்கா என்று கூறி பேச வைத்தார்.” என்று கூறினார்.

மார்ச் 28-ம் தேதி குற்றம்சாட்டப்பட்ட ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த மலிங்கா - மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர் - தனது கூட்டாளிகளுடன் தனது அலுவலகத்திற்குள் நுழைந்து தன்னைத் தாக்கியதாக ஹர்ஷாதிபதி குற்றம் சாட்டினார். ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவதற்கு முன்பு அவர் முதலில் ஆக்ராவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அந்த நேரத்தில், மலிங்கா இந்த குற்றச்சாட்டுகளை பொய்யானது, ஆதாரமற்றது என்று கூறினார். மேலும், சில பா.ஜ.க தலைவர்களின் உத்தரவின் பேரில் தனது பெயர் எஃப்.ஐ.ஆர்-ல் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட மலிங்கா பெயர் எஃப்.ஐ.ஆர்-ல், எஸ்சி/எஸ்டி வன்கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, மற்ற குற்றவாளிகளை ராஜஸ்தான் போலீசார் கைது செய்தாலும், மலிங்கா கைது செய்யப்படவில்லை. மே 11, 2022-ல் கெலாட்டைச் சந்தித்து, தான் குற்றமற்றவர் என்று ஊடகங்கள் முன் அறிவித்த பிறகு அவர் சரணடைந்தார். ஒரு நாள் கழித்து, தோல்பூரில் உள்ள உள்ளூர் நீதிமன்றம் நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்ட மலிங்காவுக்கு கோவிட் தொற்று சோதனையில் தொற்று உறுதி செய்து மருத்துவமனையில் வைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட ஒரு வாரத்தில், மலிங்காவுக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Dalit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment