கர்நாடக அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4% இட ஒதுக்கீடு: பா.ஜ.க. பரபர குற்றச்சாட்டு

கர்நாடக அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4% இட ஒதுக்கீடு தொடர்பான மாநில அரசின் அறிவிப்புக்கு எதிர்க்கட்சியான பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. "மத அடிப்படையிலான இடஒதுக்கீடு" வழங்குவது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

கர்நாடக அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4% இட ஒதுக்கீடு தொடர்பான மாநில அரசின் அறிவிப்புக்கு எதிர்க்கட்சியான பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. "மத அடிப்படையிலான இடஒதுக்கீடு" வழங்குவது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
cm

இந்த மாத தொடக்கத்தில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, ரூ.1 கோடி வரையிலான அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினருக்கு 4% இடஒதுக்கீட்டை அறிவித்தார். மார்ச் 7 அன்று தாக்கல் செய்யப்பட்ட தனது 16-வது பட்ஜெட்டில் சித்தராமையா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

Advertisment

மார்ச் 15 அன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இஸ்லாமியர்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்கும் வகையில், கே.டி.பி.பி., எனப்படும் கர்நாடகா பொது கொள்முதல் வெளிப்படைத்தன்மை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

cm

மாநில அரசின் அறிவிப்புக்கு எதிர்க்கட்சியான பாஜகவிடமிருந்து கடும் எதிர்ப்பை தூண்டியது . பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா இந்த நடவடிக்கையை "சர்க்காரி ஜிஹாத்" என்று குறிப்பிட்டு, சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இதற்கு எதிராகப் போராடுவதாக உறுதியளித்தார்.

Advertisment
Advertisements

"புதிய ஒதுக்கீடு" என்றால் என்ன?

சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, பட்டியல் சாதியினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஆகியோரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கிய 4% இடஒதுக்கீட்டுடன் கூடுதலாக இந்த 4% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு, பிரிவு 1, பிரிவு 2ஏ, பிரிவு 2பி என, அனைத்து பிரிவுகளிலும், 1 கோடி ரூபாய் வரையிலான பணிகளில், முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என, புதிய சட்டத்திருத்தம் கூறுகிறது. இதில், பிரிவு 2பி என்பது இஸ்லாமியர்களுக்கானது.

அரசாங்க ஒப்பந்தங்களில் தற்போதைய ஒதுக்கீடு என்ன?

தற்போது, ​​2 கோடி ரூபாய்க்குக் குறைவான அரசுத் திட்டங்களிலும், அரசுத் துறைகளிலிருந்து 1 கோடி ரூபாய்க்குக் குறைவான பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதிலும் SC மற்றும் ST பிரிவினருக்கு 24% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. வகை-1 இன் கீழ் வரும் சமூகங்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் வகை-2B இன் கீழ் வரும் சமூகங்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

பிரிவினைவாத அரசியலை பின்பற்றும் பா.ஜ.க. - டி.கே.சிவகுமார்

பா.ஜ.க பிரிவினைவாத அரசியலை பின்பற்றுவதாக குற்றஞ்சாட்டிய கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் அரசின் நடவடிக்கையை ஆதரித்தார்."இஸ்லாமியர்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, சீக்கியர்களாக இருந்தாலும் சரி, பௌத்தர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் அனைவரும் நம் நாட்டின் குடிமக்கள். அனைத்து சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய சமூகங்களைப் பற்றியும் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம்," என்று அவர் கூறினார்.

பா.ஜ.க.-வை கடுமையாக சாடிய சிவகுமார், ஒற்றுமை பற்றி பேசுபவர்கள் கிறிஸ்தவ அல்லது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை எம்.எல்.சி (அ) ராஜ்யசபா எம்.பி அல்லது மத்திய அமைச்சராக்க வேண்டும் என்றார். "அவர்கள் அவ்வாறு செய்யும்போது, ​​அனைவருக்கும் சம வாய்ப்பு பற்றி பேச உரிமை இருக்கும்," என்று அவர் கூறினார். இஸ்லாமியர்களுக்கு மட்டுமே 4% இடஒதுக்கீடு தரவில்லை; அனைத்து சிறுபான்மையினருக்கும்தான் 4% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

4% இட ஒதுக்கீடு - பாஜக என்ன கூறுகிறது?

காங்கிரஸ் அரசு "சமாதான அரசியலை" நாடுவதாகக் குற்றம் சாட்டிய கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா, "இன்று 4%, நாளை 100%. சித்தராமையா அரசு இந்துக்கள் மீது திணித்து, SC, ST மற்றும் OBC பிரிவினருக்கு எதிராக முறையான பாகுபாட்டை உறுதி செய்யும் புதிய 'சர்க்காரி ஜிஹாத்' இதுவாகும்" என்று கூறினார்.

இந்தப் பிரச்சினை அரசியல் ரீதியாக எப்படி வெளிப்படும்?

கர்நாடக காங்கிரஸ் அரசு தனது நடவடிக்கையின் மூலம், 2023 சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு பெரும்பாலும் வாக்களித்த அதன் முக்கிய தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் முஸ்லிம்களிடையே தனது ஆதரவை வலுப்படுத்த முயல்கிறது.

கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட  ஆய்வுகளின்படி, மாநில மக்கள்தொகையில் சுமார் 14% பேர் உள்ள இந்த சமூகத்தினர், அரசு வேலைகள் மற்றும் கல்வியில் குறைந்த பிரதிநிதித்துவத்துடன் பின்தங்கியவர்களாகக் காணப்படுகிறார்கள். புதிய ஒதுக்கீடு, தற்போதுள்ள எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓ.பி.சி-களுக்கான இடஒதுக்கீட்டின் வழியில் இருந்தாலும், இந்த நடவடிக்கை பா.ஜ.க-வுக்கு மாநில அரசை எதிர்த்து போராட்டம் நடத்த வாய்ப்பை வழங்கியுள்ளது. 

காங்கிரஸ் "முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதாக" குற்றம் சாட்டிய பாஜக, காங்கிரஸ் "அரசியலமைப்புக்கு விரோதமாக மத அடிப்படையிலான ஒதுக்கீட்டை வழங்குகிறது" என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

சித்தராமையா அரசு கடந்த காலங்களில் இதே போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதா?

2013 முதல் 2018 வரை முதல்வராக இருந்தபோது, ​​சித்தராமையா அரசு டெண்டர்களில் எஸ்சி மற்றும் எஸ்டி சமூகத்தினருக்கு ரூ.50 லட்சம் வரை இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தினார். 2023 இல் அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த வரம்பு ரூ.2 கோடியாக நீட்டிக்கப்பட்டது, அதே நேரத்தில் ஓபிசி பிரிவினர் ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்டனர்.

சித்தராமையாவின் முதல் பதவிக் காலத்திலும், 2018 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) செயல்பாட்டாளர்கள் மீதான வகுப்புவாத கலவரங்கள் தொடர்பான வழக்குகளை வாபஸ் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. காங்கிரஸ் அரசாங்கம் தீவிர இஸ்லாமிய கூறுகளுடன் கைகோர்த்து செயல்படுவதாக பாஜக குற்றம் சாட்டியது.

இதனிடையே, அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினருக்கும் 4% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம் என பா.ஜ.க., ஜே.டி.எஸ். கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Karnataka

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: