பாதுகாப்பு அமைச்சகச் செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். லேசான காய்ச்சல் அறிகுறிகள் காட்டிய பின்பு, கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
Advertisment
முதல் முறையாக நாட்டின் உயரிய அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவரோடு தொடர்பில் இருந்து இதர மூத்த அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரா? என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
செயலாளர் அஜய் குமாருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ரைசினா ஹில்ஸில் உள்ள சவுத் பிளாக்கில் உள்ள பாதுக்கப்பு அமைச்சக தலைமையகத்தில் பணிபுரியும் 35 அதிகாரிகள் தத்தம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுக்காப்பு அமைச்சகம் விரிவான தொடர்பு தடமரிதல் பயற்சியில் இறங்கியுள்ளதாக பி.டி.ஐ தெரிவித்தது. சவுத் பிளாக்கின் முதல் தளம் கிருமி நீக்கம் செய்யப்பட்டுவருவதாகவும் தெரிவித்தது.