தொங்கும் பாலம் சம்பவம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தினாலும் குஜராத் தேர்தலில் மோர்பி தொகுதியில் பாஜக முன்னிலையில் உள்ளது.
குஜராத்தின் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்ததன் மூலம் 53 குழந்தைகள் உட்பட 141 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் திடுக்கிட வைத்தது. மோர்பி தொகுதியில் போட்டியிட்ட பாஜா வேட்பாளர் கண்டிலால் அம்ருதியா 22,489 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். இந்நிலையில் இவருக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜெயந்திலால் பட்டேல் வெற்றியடையும் வாய்ப்புகள் குறைவு.
தொங்கும் பாலம் விபத்தைத்தான் முக்கிய புள்ளியாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் முன்வைத்து பிரச்சாரத்தை நடத்தினாலும் தேர்தலில் அதற்கு பலன் கிடைக்கவில்லை என்றுதான் கூற வேண்டும். 2017-ம் தேர்தலில் பாஜக வேட்பாளர் கண்டிலால் அம்ருதியா காங்கிரஸிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில் இவர் 1995, 1998, 2002, 2007மற்றும் 2012 என்ற 5 முறை வெற்றிகண்டவர் என்பவர் குறிப்பிடதக்கது.