டாக்கா டு டெல்லி; போலி குடும்ப உறுப்பினர்கள், பொய் ஆவணங்கள்: சிறுநீரக மோசடி கும்பலின் பகீர் பின்னணி

நொய்டாவில் உள்ள 2 பிரபல மருத்துவமனைகளில் ஒரு மருத்துவரால் 20-25 மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.

நொய்டாவில் உள்ள 2 பிரபல மருத்துவமனைகளில் ஒரு மருத்துவரால் 20-25 மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.

author-image
WebDesk
New Update
Dhaka.jpg

போலி குடும்ப உறுப்பினர்கள், போலி ஆவணங்கள், போலி ஆய்வகம், புனையப்பட்ட முத்திரைகள், "பிரீமியம் தேதிகள்" என்று பெயரிடப்பட்ட பிளாஸ்டிக் பெட்டி,  அரசின் சிவப்பு நிற  "அதிகாரப்பூர்வ" ஸ்டிக்கர்கள் என டெல்லி அறுவை சிகிச்சை நிபுணரைச் சுற்றி 10 உறுப்பினர்களைக் கொண்ட சிண்டிகேட் செயல்படுகிறது. 

Advertisment

தேசிய தலைநகரில் உள்ள இரண்டு பிரபலமான மருத்துவமனைகளுடன் இந்த கும்பல் செயல்படுகிறது. சர்வதேச சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபடுகிறது என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டறிந்துள்ளது.

சர்வதேச ஒப்புதல் படிவங்கள் மற்றும் அழைப்பு பதிவுகளுக்கான ஏராளமான விசாரணை அறிக்கைகள் இதில் அடங்கும் - மற்றும் அப்பல்லோ மற்றும் பங்களாதேஷ் நோயாளிகளுக்கு சுமார் 20-25 மாற்று அறுவை சிகிச்சைகள் செய்ததாகக் கூறப்படும் 50 வயதான அறுவை சிகிச்சை நிபுணர் உட்பட 10 குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய வழிவகுத்த மோசடியை அம்பலப்படுத்தியது. கடந்த மூன்று ஆண்டுகளாக நொய்டாவில் உள்ள அப்பல்லோ, யதார்த் மருத்துவமனைகள் விசாரணை வலையத்தில் உள்ளன. 

இந்த இரண்டு மருத்துவமனைகளிலும் 2018 முதல் 2024 வரை வங்கதேச நோயாளிகளுக்கு நடத்தப்பட்ட 125-130 க்கும் மேற்பட்ட மாற்று அறுவை சிகிச்சைகளின் விவரங்களையும் போலீசார் கோரியுள்ளனர். மேலும் இந்த அறுவை சிகிச்சை அனைத்தும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விஜய ராஜகுமாரியால் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர் கடந்த ஜூலை 1-ம் தேதி கைது செய்யப்பட்டார். இப்போது ஜாமீனில் உள்ளார். நீதிமன்றத்தில் அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார்.

Advertisment
Advertisements

கைது செய்யப்பட்டவர்களில் இந்தியாவின் மருத்துவ சுற்றுலாத் துறையில் பணிபுரியும் மொழிபெயர்ப்பாளர் உட்பட இரண்டு பங்களாதேஷ் நபர்களும் அடங்குவர்.

இந்த ஆண்டு ஏப்ரலில் வெளிநாட்டினருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் “வணிக ரீதியான நடவடிக்கைகள்” அதிகரித்துள்ளது என்று  மத்திய சுகாதார அமைச்சகத்தின் எச்சரிக்கையால் விசாரணை நடத்தப்பட்டது. அதில் டெல்லி காவல்துறையால் இந்த மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

ஜூன் 17 அன்று தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கு மற்றும் ஒரு மாதத்திற்குப் பிறகு குற்றப்பத்திரிகையைத் தொடர்ந்து, டெல்லி உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 23 அன்று டாக்டர் ராஜகுமாரிக்கு ஜாமீன் வழங்கியது, அவர் காவல்துறையின் கூற்றுப்படி முதன்மையாக டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோவுடன் தொடர்புடையவர்.

நொய்டாவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை மற்றும் இந்திரபிரஸ்தா அப்பல்லோ ஆகியவை ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட அப்பல்லோ குழும மருத்துவமனைகளின் ஒரு பகுதியாகும். வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு இப்போது ஜாமீனில் வெளியே உள்ளனர்.

இந்தியாவில் உறுப்பு தானம்

இந்தியாவில், உறுப்பு தானம் என்பது நெருங்கிய ரத்த உறவினர்கள் - பெற்றோர், உடன்பிறந்தவர்கள், குழந்தைகள், தாத்தா பாட்டி, பேரக்குழந்தைகள் - மற்றும் வாழ்க்கைத் துணைவர்களுடன் மட்டுமே கண்டிப்பாக பெற முடியும்.

அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டு, பிற உறவினர்கள் சிறப்பு சூழ்நிலையில் பணத்திற்காக அல்லாமல் தானமாக மட்டுமே வழங்க முடியும்.  வெளிநாட்டு நபர்களுக்கு வழங்கப்படும் பட்சத்தில் அரசின் “படிவம் 21” ஐ சமர்ப்பிக்க வேண்டும், இது அடிப்படையில் சம்பந்தப்பட்ட  தூதரகத்தில் இருந்து  தடையில்லாச் சான்றிதழ் பெறுவதாகும். 

வழக்கு பதிவுகளின் பகுப்பாய்வு படி, வங்காளதேச நோயாளிகளுக்கு நொய்டாவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஜனவரி 1, 2018 முதல் மார்ச் 31, 2023 வரை மொத்தம் 66 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை டாக்டர் ராஜகுமாரி நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 7, 2022 முதல் மே 13, 2024 வரை நொய்டாவில் உள்ள யதார்த் மருத்துவமனையில் இதே அறுவை சிகிச்சை நிபுணர் வெளிநாட்டினருக்கு 78 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டதாகவும், இதில் 61 பங்களாதேஷ் நோயாளிகள் செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

நொய்டாவில் உள்ள யதர்த் மருத்துவமனை மற்றும் அப்பல்லோ மருத்துவமனையில் நடத்தப்பட்ட 20-25 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மீது வழக்கு கவனம் செலுத்தியது.

ஆங்கிலத்தில் படிக்க:    From Dhaka to Delhi, how kidney racket grew on fake family trees, fudged papers and a ghost lab

இது தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த யதர்த் மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, சமீபத்திய வழக்கு தொடர்பாக, வருகை தரும் ஆலோசகர்கள் உட்பட அனைத்து வழக்குகளும் எங்களின் கடுமையான பல அடுக்கு சரிபார்ப்பு செயல்முறைக்கு உட்பட்டுள்ளன என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். எங்களின் செயல்முறைகளை மேலும் வலுப்படுத்த முனைப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

யதர்த் மருத்துவமனை எப்பொழுதும் அனைத்து சட்ட மற்றும் நெறிமுறைகளையும் மாற்று அறுவை சிகிச்சை முறையில் கடைபிடித்துள்ளது என்பதை வலியுறுத்துவது மிகவும் முக்கியமானது. அதிகாரிகளின் விசாரணைக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளோம் என்றார். 

தொடர்ந்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் அப்பல்லோ மருத்துவமனையிடம் இந்த வழக்கு குறித்தான விரிவான கேள்விகளுக்கு நிர்வாகம் பதிலளிக்கவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: