Advertisment

தற்காலிகமாக ஒதுக்கி வைக்கப்படும் வேறுபாடுகள்; ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி மெகா பேரணி

அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் கூறியதையடுத்து, இது நபர்களை மையமாகக் கொண்டது அல்ல, மாறாக ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கான போராட்டம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

author-image
WebDesk
New Update
INDIA bloc

இந்தியா கூட்டணியின் “ஜனநாயகத்தைக் காப்பாற்றும் பேரணி, அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பதே தவிர, எந்த ஒரு தலைவரையும் அல்ல என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. (Photo: PTI)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான போராட்டம் என்று  ஆம் ஆத்மி கட்சி தலைவர் கூறியதையடுத்து, இது நபர்களை மையமாகக் கொண்டது அல்ல, மாறாக ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்காக நடைபெறும்  போராட்டம் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Differences ‘set aside’ for now, INDIA bloc mega rally at Ramlila Maidan today: ‘Goes beyond just AAP’

இந்தியா கூட்டணி உருவாகத் தொடங்கிய 9 மாதங்களுக்குப் பிறகு, சமீபத்திய பிரச்சனைகளுக்குப் பிறகு, தலைநகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஒரு மெகா பேரணியில், எதிர்க்கட்சிகள் அணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் ஒன்றிணைந்து வலிமையைக் காட்டுகிறார்கள்.

கடந்த இரண்டு மாதங்களில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் எதிர்க்கட்சிகளின் முக்கிய முகங்களில் இருவர் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் இந்த பேரணி நடைபெறுகிறது. “லோக்தந்த்ரா பச்சாவோ பேரணியின் (ஜனநாயகத்தைக் காப்பாற்றும் பேரணி)” நோக்கம் அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பதே தவிர எந்த ஒரு தலைவரையும் காப்பாற்றுவது நோக்கம் அல்ல என்று காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை வலியுறுத்தியது.

“இந்த பேரணி நபர்களை மையமாகக் கொண்டது அல்ல. இது யாரையும் பாதுகாப்பதற்கானது அல்ல. இது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கா நடைபெறுகிறது. இது எந்த ஒரு கட்சியின் பேரணியும் அல்ல. இதில் 28 கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இந்தியா கூட்டணியின் அனைத்துக் கட்சிகளும் இதில் ஈடுபட்டுள்ளன. இதில் திரிணாமுல் காங்கிரசும் (டி.எம்.சி) இடம்பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் எங்களின் தொகுதிப் பங்கீடு சூத்திரம் செயல்படவில்லை என்றாலும், திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவர்கள் கலந்துகொள்வார்கள்” என்று காங்கிரஸ் தகவல் தொடர்புத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

பணவீக்கம், வேலையின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வு மற்றும் எதிர்நிலையாக்கம் ஆகியவற்றுக்கு எதிராக இந்த பேரணியின் நிகழ்ச்சி நிரலாக இருக்கும் என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார். “ஹேமந்த் சோரன் ஜியை நாம் மறந்துவிடக் கூடாது. பாரத் ஜோடோ நீதி யாத்திரை ஜார்கண்டிற்குள் நுழையவிருந்தபோது கைது செய்யப்பட்ட முதல் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆவார் (கைது செய்யப்படுவதற்கு முன்பு அவர் ராஜினாமா செய்தார்). ஹேமந்த் சோரன், கெஜ்ரிவால் ஜி, டெல்லி, ஜார்கண்ட், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள்.” என்று ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய், “அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராகவும், நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்றவும் பேரணி நடத்தப்பட்டது” என்று கூறிய ஒரு நாள் கழித்து ஜெய்ராம் ரமேஷின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. கோபால் ராய் மேலும் கூறுகையில், “டெல்லியில் கொடுங்கோன்மை முதல்வரை கைது செய்யும் அளவிற்கு அதிகரித்துள்ளது. அனைவரும் தங்கள் கவலையை வெளிப்படுத்த மெகா பேரணியில் திரண்டு வருகின்றனர். சர்வாதிகாரப் போக்குகள் செயல்படுத்தப்படுவதும், ஜனநாயகம் கொலைசெய்யப்படுவதும், எதிர்க்கட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்கள் கைது செய்யப்படுவதும் தவறு, அதற்கு எதிராக மெகா பேரணியில் குரல் எழுப்பப்படும்.” என்று கூறினார்.

ராய் ராம்லீலா மைதானத்தை "இயக்கங்களின் பிறப்பிடம்" என்று அழைத்தார். 2011-ம் ஆண்டில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலைமையிலான ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தை மையமாகக் கொண்டு, இறுதியில் ஆம் ஆத்மியின் பிறப்பிற்கு வழிவகுத்தது மற்றும் இறுதியில் காங்கிரஸ் தலைமையிலான யு.பி.ஏ அரசாங்கத்தை மத்தியில் அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு வழிவகுத்த வேகத்தை உருவாக்கியது. 

இருப்பினும், ஆம் ஆத்மி கட்சி தலைவர் ஒருவர், ஆம் ஆத்மி மற்றும் டெல்லிக்கு மட்டும் அல்லாமல், நாட்டிற்கு இந்த பேரணியை மிக முக்கியமான ஒன்றாகக் காட்டவே இந்த முயற்சி என்று தெளிவுபடுத்தினார்.  “இது ஒரு வெளிப்படையான அழைப்பு ... மற்றும் ஆம் ஆத்மிக்கு அப்பாற்பட்ட ஒரு பெரிய பிரச்சினை” என்று ஒரு கட்சியின் தலைவர் கூறினார்.

இந்த பேரணியில் ஜார்கண்ட் முதல்வர் சம்பாய் சோரன், ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா, என்.சி.பி (சரத்சந்திர பவார்) தலைவர் சரத் பவார், ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ், சி.பி.ஐ(எம்) பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, சி.பி.ஐ பொதுச்செயலாளர் டி. ராஜா ஆகியோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, பி.டி.பி தலைவர் மெகபூபா முப்தி, சமாஜவாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தி.மு.க.வின் திருச்சி சிவா, டி.எம்.சி-யின் டெரெக் ஓ பிரையன்.

ஜூன் 2023ல் கூட்டணி உருவானதில் இருந்து, நான்கு மாநில சட்டசபைகளுக்கான தேர்தல், நிதிஷ் குமார், ஜெயந்த் சவுத்ரி போன்ற முக்கிய உறுப்பினர்களின் பதவி விலகல், மேற்கு வங்கத்தில் சீட் பகிர்வு ஒப்பந்தங்களை செய்யத் தவறியது, சோரன் மற்றும் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது என இந்தியா கூட்டணி பல நிகழ்வுகளைக் கண்டது. 

இந்த மாத தொடக்கத்தில் ஆர்.ஜே.டி பாட்னாவில் ஒரு பெரிய பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்தது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்ரா மும்பையில் ஒரு பேரணியுடன் முடிவடைந்தது. இரண்டு நிகழ்வுகளிலும் ஒரு சில இந்தியா கூட்டணி தலைவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஞாயிற்றுக்கிழ்மை பேரணியானது பெரும்பாலான கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் முதல் கூட்டு நிகழ்வாகும். 1,745 கோடி ரூபாய்க்கான புதிய நோட்டீஸ்கள் மற்றும் வரி அதிகாரிகளின் மொத்தக் கோரிக்கையை தோராயமாக ரூ.3,567 கோடிகளாகக் கொண்டு செல்வது உட்பட, வருமான வரித்துறை நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக, இந்தியா கூட்டணியின் மிகப்பெரிய அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடிகள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (சி.பி.ஐ) வெள்ளிக்கிழமை வருமானவரித் துறை நோட்டீஸ் வந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு ராகுல் காந்தி வருவதற்கு முன்னதாக 2,000 முதல் 3,000 ஆதரவாளர்களைத் திரட்ட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. “இது காங்கிரஸ் தொண்டர்களுக்கு முக்கியமானது மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே தொடங்குகிறது. பல கட்சிகளின் ஆதரவாளர்களின் கூட்டம் அதன் தலைவர்கள் கலந்து கொள்ளும் இடத்திற்கு நாங்கள் அணிவகுப்போம்” என்று ஒரு காங்கிரஸ் தலைவர் கூறினார்.

இதற்கிடையில், இந்த பேரணியில் டி.எம்.சி-யும் சேர்கிறது, டி.எம்.சி சந்தேஷ்காலி வன்முறை மற்றும் மஹுவா மொய்த்ராவுக்கு சி.பி.ஐ சம்மன்களை எதிர்த்து போராடுகிறது - காங்கிரசுக்கு எதிராகவும் போராடுகிறத். மேற்கு வங்கத்தில் இரண்டு கட்சிகளும் ஒன்றுக்கொன்று எதிராக களமிறங்குகின்றன, கேரளாவில் இடதுசாரிகளும் காங்கிரசும் ஒன்றுக்கொன்று எதிராக போட்டியிடுகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

INDIA bloc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment