காங்கிரஸ் தலைவர் தேர்தலில் புதிய திருப்பம்.. திடீரென போட்டிக்கு வந்த திக்விஜய சிங்

கட்சிக்குள் இருக்கும் ஒரு பிரிவினரின் தலைவர்கள், இந்த ஆச்சரியமான நடவடிக்கையை “பிளான் பி”யின் ஒரு பகுதியாகக் கருதுகின்றனர்.

Digvijaya Singh
Senior Congress leader Digvijaya Singh. (File)

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் புதிய திருப்பமாக, கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங் புதன்கிழமை தானும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.

1993 முதல் 2003 வரை காங்கிரஸின் சிக்கலான தசாப்தத்தில் மத்தியப் பிரதேச முதலமைச்சராக இருந்த சிங், உயர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்வார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான வியாழன் அல்லது வெள்ளியன்று சிங், தனது மனுக்களை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி வியாழன் அன்று வரமாட்டார் என்று கூறப்படுகிறது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தலைமைப் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்ற அழுத்தம் கொடுப்பதற்காக, கட்சிக்குள் ஒரு பிரிவினரின் தலைவர்கள், இந்த ஆச்சரியமான நடவடிக்கையை “பிளான் பி”யின் ஒரு பகுதியாகக் கருதுகின்றனர்.

கெலாட் மற்றும் காங்கிரஸ் மேலிடம் இடையேயான முறுகல் நிலை இன்னும் தணியாத நிலையில், சமீபத்திய நிகழ்வுகள் வந்துள்ளது. கெலாட் மற்றும் சோனியா காந்தி இடையே எதிர்பார்த்த சந்திப்பு நடைபெறாததால், முதல்வர் ஜெய்ப்பூரில் இருந்து புறப்படுவதை தாமதப்படுத்தினார். சோனியா அலுவலகத்தில் இருந்து சந்திப்பு குறித்து எந்த தகவலும் இல்லாததால் தாமதம் ஏற்பட்டதாகவும், கெலாட் அவரை வியாழக்கிழமை சந்திக்கலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன. இறுதியாக இரவு 9.30 மணிக்கு அவர் ஜெய்ப்பூரில் இருந்து புறப்பட்டார்.

இதற்கிடையில், மூத்த தலைவர் ஏகே ஆண்டனியை சோனியா சந்தித்தார். கூட்டம் முடிந்த உடனேயே கட்சியின் பொருளாளர் பவன்குமார் பன்சால், நெருக்கடியைத் தீர்க்க உதவுவதற்காக, அந்தோணி தங்கியுள்ள கேரளா ஹவுஸுக்குச் சென்றார். காந்தி குடும்பத்தின் மேலாதிக்கத்தை எதிர்க்க முடியாது என்பதில் ஆண்டனி உறுதியாக இருப்பதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நீங்கள் போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு, ஆண்டனி, “நான் ஒரு முட்டாளா? என் உடல்நிலை எனக்கு தெரியும். அதன் காரணமாகவே தேசிய அரசியலில் இருந்து விலகினேன். யாரை ஆதரிப்பீர்கள் என்ற கேள்விக்கு, “எனது கருத்தை இப்போது பொதுவில் எதிர்பார்க்க வேண்டாம்” என்றார்.

ஞாயிற்றுக்கிழமை கெலாட் அணியினர், ராஜஸ்தானில் தனது அடுத்த தலைவரை அமைப்பதற்காக அழைக்கப்பட்ட கட்சியின் அதிகாரப்பூர்வ கூட்டத்தை புறக்கணித்து, அதற்கு பதிலாக தனியாக கூட்டத்தை நடத்தினர். கெலாட் தனக்கு நெருக்கமான ஒருவரை தனக்குப் பிறகு நியமிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார், மாநிலப் போட்டியாளரான சச்சின் பைலட் அல்ல.

ஆனால், செவ்வாயன்று கெலாட் தனது முகாமில், தலைமைப் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை என்று கூறியதும், 102 எம்எல்ஏக்களின் உணர்வுகளை முதல்வர் தலைமைக்கு தெரிவிப்பார் என்று அவரது நம்பிக்கைக்குரிய பிரதாப் சிங் கச்சாரியாவாஸ் புதன் கிழமை தெரிவித்த கருத்தும் இந்த குழு கடினமான நிலையில் உள்ளது என்பதற்கான அறிகுறிகளா பார்க்கப்படுகிறது.

திக்விஜய சிங்கின் போட்டியிடுவதற்கான நகர்வு கூட இந்த சூழலில்தான் பார்க்கப்படுகிறது – கெலாட் போட்டியில் என்றால் “பிளான் பி” செயல்படுத்தப்படும். முக்கியமான தேதி அக்டோபர் 8, வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி. எனவே வேட்புமனு தாக்கல் செய்வது முக்கியமில்லை… அக்டோபர் 8-ம் தேதிக்குப் பிறகு யார் தேர்தலில் இருப்பார்கள் என்பதுதான் முக்கியம் என்று மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

புதன்கிழமை பிற்பகுதியில், சிங் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் ஒரே விமானத்தில் டெல்லிக்கு சென்றனர்.

இதற்கிடையில், பட்டியலில் உள்ள மற்றொரு பெயரான மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு நெருக்கமான வட்டாரங்கள், சோனியா குடும்பத்தின் ஆதரவுடன் மட்டுமே அவர் களத்தில் இறங்குவது பற்றி யோசிப்பார் என்று மீண்டும் வலியுறுத்தினார். அவர் போட்டியிடுவதில் தயக்கம் காட்டவில்லை, ஆனால் சோனியா காந்தி கேட்டால் மட்டுமே போட்டியிடுவார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

மற்ற சாத்தியமான போட்டியாளர்களில், மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் புதன்கிழமை அவர் போட்டியிட விருப்பம் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

சோனியா காந்தியை திங்கள்கிழமை சந்தித்தபோது, ​​மத்தியப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ளதால் அங்கிருந்து வெளியேறப் போவதில்லை என்று கூறியதாக கமல் கூறினார். “நான் இந்த பொறுப்பை ஏற்க மாட்டேன், ஏனெனில் இது எனது கவனத்தை மத்திய பிரதேசத்தில் இருந்து அகற்றிவிடும்,” என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் என்ற முறையில், குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு முதலில் கவனம் செலுத்தி, ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு வியூகத்தைத் தயாரிக்க வேண்டும் என்றார்.

ராகுல் காந்தியுடனும் ஒரு வார்த்தை பேசியதாக கமல் நாத் கூறினார். “இதையெல்லாம் முடிவுக்குக் கொண்டுவர நான் அவரைப் போட்டியிட வலியுறுத்தினேன். விஷயங்கள் சிக்கலாகி வருகின்றன என்று நான் அவரிடம் சொன்னேன். ஆனால் அவர் கட்சித் தலைவர் ஆக விரும்பவில்லை என்று கூறியதாக கமல்நாத் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Digvijaya singh congress president polls ashok gehlot rajasthan political crisis

Exit mobile version