விவசாயிகளுடன் நேற்று நள்ளிரவு நடைபெற்ற 3ம் கட்ட பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவுகளை எட்டி வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் 3 மத்திய அமைச்சர்கள் இருந்தனர்.
இந்த பேச்சு வார்த்தை தொடர்பாக மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா கூறுகையில் “ நேற்று நள்ளிரவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பல்வேறு சாதகமான விஷயங்கள் உள்ளன. மீண்டும் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை பேச்சுவார்த்தை நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறுகையில் ” எனது மாநிலம் அமைதிக்கு திரும்ப வேண்டும். எங்கள் இளைஞர்கள் கண்ணீர் புகைக்குண்டுகளை சந்திப்பதை நாங்கள் பார்க்க விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிசான் மஸ்தூர் மொர்சாவின் ஒருங்கிணைப்பாளர் சர்வண் சிங் பாந்தர் கூறுகையில் “ பேச்சுவார்த்தையின் போது ஒப்புக்கொண்ட விஷயங்களை நடைமுறைபடுத்தினால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்” என்று கூறினார்.
பஞ்சாப் முதல்வர் கூறுகையில் “ விவாயிகளின் கோரிக்கைகள் சாதகமான சூழலில் விவாதிக்கப்படுவதாகவும். பஞ்சாப் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுவதால், நான் மாநிலத்தின் தலைமையாக முன்வந்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் “ 3 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் என்ன ஆவார்கள். அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? விவசாயிகள் மீது செல்கள் சுடப்படுகிறது. விவசாயிகளை இதுபோன்று நடத்தப்படக் கூடாது.
நான் 3 முறை மத்திய அரசை விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வைத்துள்ளேன். எங்களது இளைஞர்கள் கண்ணீர் புகை குண்டுகளையும், பெல்லட் குண்டுகளை எதிர்கொள்வதை நான் விரும்பவில்லை. நாம் பஞ்சாபின் பக்கம்தான் நிற்கிறேன். 3 கோடி மக்களின் நலனை நான் கருத்தில் கொள்ள வேண்டும். எரிபொருள் மற்றும் தேவையான பொருட்கள் பற்றாக்குறை ஏற்படும் நிலையை நாம் சந்திக்கக்கூடாது “ என்று கூறினார்.
பாரதிய கிசான் யூனியனின் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் கூறுகையில் ” விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதர விலை தொடர்பாக பேச்சுவார்த்தை என்பதை அரசு அங்கீகரித்தது. பகிரப்பட்ட கடன்கள், மற்ற கோரிக்கைக்கான பேச்சுவார்த்தை தொடரும் என்று அரசு கூறியது” என்றார்.
கிசான் மஸ்தூர் மொர்சாவின் ஒருங்கிணைப்பாளர் சர்வண் சிங் பாந்தர் கூறுகையில் “ நாங்கள் முன்வைத்த கோரிக்கை மீது எங்கள் உறுதிபாட்டை குறித்து தெரிவித்தோம். நாங்கள் பாகிஸ்தான் அல்ல. எங்களுக்கு அமைதியான தீர்வுதான் வேண்டும் மோதல் வேண்டாம். எங்களது கோரிக்கை தொடர்பாக சாதகமான முடிவுகள் ஏற்படும் என்று அவர்கள் தெரிவித்தார்கள் “ என்று அவர் கூறினார்.
இரவு 8.15 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை நள்ளிரவு 1.30 மணி வரை சென்றது. விவசாயிகளை சந்திப்பதற்கு முன்பாக , மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், நித்தியானந்த ராய் ஆகியோர், பஞ்சாள் முதல்வரை சண்டிகரில் உள்ள ஹேட்டலில் சந்தித்தனர். இந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது தொடர்பாக தகவல் வெளியாகவில்லை.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“