New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/11/surgery-main1.jpg)
பரிசோதனைகளின் முடிவில், அவரது வயிற்றில் நாணயங்கள், ஊசிகள், பிளேடுகள், செயின்கள் உள்ளிட்ட உலோகங்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
மத்தியபிரதேச மாநிலத்தில் ஒருவரது வயிற்றிலிருந்து சுமார் 5 கிலோ கொண்ட உலோகங்களை மருத்துவர்கள் அகற்றினர்.
மத்தியபிரதேச மாநிலம் சட்னா மாவட்டத்திலுள்ள சோஹாவால் பகுதியை சேர்ந்தவர் முகமது மக்சூத் (வயது 32). இவர் கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த 18-ஆம் தேதி, சஞ்சய் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன.
பரிசோதனைகளின் முடிவில், அவரது வயிற்றில் நாணயங்கள், ஊசிகள், பிளேடுகள், செயின்கள் உள்ளிட்ட உலோகங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, 6 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் அவருக்கு அறுவை சிகிச்சையை மேற்கொண்டு அந்த உலோகங்களை அகற்றினர். அவற்றில், சுமார் சங்கிலி, 263 நாணயங்கள், 10-12 பிளேடுகள் உள்ளிட்டவை இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முகமது மக்சூத் சரியான மனநிலையில் இல்லாதவர் என்பதால், இப்பொருட்களை அவர் ரகசியமாக உட்கொண்டு வந்திருக்கலாம் எனவும், தற்போது அவர் நல்ல உடல்நிலையில் இருப்பதகவும், மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.