scorecardresearch

ஏ.ஐ ரோபோக்கள், நாய் குழு: கடற்கரைகளை பாதுகாப்பானதாக மாற்ற கோவா முன்னெடுக்கும் திட்டம் என்ன?

கடலில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்கும் வகையில் கோவா அரசு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Goa
Goa

கோவாவின் இயற்கையான குகைகளின் மேல் அமர்ந்து, நான்கு நண்பர்கள் குழு செல்ஃபிக்கு போஸ் கொடுத்தனர். அவர்கள் வடக்கு கோவாவில் உள்ள க்யூரிம் கடற்கரையில் ‘செல்ஃபி எடுக்க அனுமதி இல்லை’ என்ற பதாகையை பலகையைக் கடந்து பாறைகள் நிறைந்த பகுதியை நோக்கிச் சென்று அங்கு அமர்ந்து போட்டோ எடுத்தனர். அப்போது, ​​ஒரு அலை அவர்களை வீழ்த்தி கடலுக்குள் இழுத்தது. நால்வரும் நீரில் மூழ்கினர். இதில் 3 பேர் சிறார்கள் ஆவர்.

இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கவும், கடற்கரை உயிரிழப்பை பூஜ்ஜியமாகக் குறைக்கவும், கோவா புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பயிற்சி பெற்ற நாய்களின் குழுவில் இருந்து மீட்பு நடவடிக்கைகளில் உயிர்காப்பாளர்களுக்கு உதவுவதற்கு “செயற்கை நுண்ணறிவு” பயன்பாடு வரை கண்காணிப்பு மற்றும் தகவல் பகிர்வு விழிப்புணர்வு திட்டங்களை புதுப்பிக்கிறது.

ஆனால் சவால்கள் உள்ளன – சரியான செல்ஃபிக்காக மக்கள் தங்கள் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவது, குடிபோதையில் நீந்துவது அல்லது பாதுகாப்பற்றதாகத் தெளிவாகக் குறிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வது போன்றவற்றில் கட்டாயம் ஈடுபடக் கூடாது.

2008 ஆம் ஆண்டு முதல் கோவாவின் கடற்கரைகள் மற்றும் நீர்நிலைகளில் குறைந்தது 92 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர் மற்றும் 5,565 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று அரசு நியமித்த தனியார் உயிர்காப்பு நிறுவனமான த்ரிஷ்டி மரைன் தொகுத்த தரவுகள் தெரிவிக்கின்றன. 92 சம்பவங்களில் 43 சம்பவங்கள் கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்துள்ளன. இந்த மாத தொடக்கத்தில், நான்கு பேர் உயிரிழந்த அதே குவெரிம் கடற்கரையில் ஒரு ரஷ்ய நாட்டவர் கடலில் நீந்தியபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

கோவா இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். உள்நாடு மட்டும் அல்லாது வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்வர்.

பருவமழை நெருங்கி வரும் நிலையில், கடல் நீரோட்டங்கள் வலுவாக இருக்கும்போது, ​​மாநில அரசு, த்ரிஷ்டி மரைன் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தியது. இதையடுத்து பல முயற்சிகளை நிறுவனம் எடுக்க உள்ளதாக அறிவித்தது. “நாம் புதிய தொழில்நுட்பங்களையும் கண்டுபிடிப்புகளையும் பின்பற்ற வேண்டும். சில நாட்களுக்கு முன்பு ‘நோ செல்பி’ பகுதியில் சிலர் செல்பி எடுக்க முயன்ற சோக சம்பவம் நடந்தது. அவர்களின் துரதிர்ஷ்டவசமான மரணங்கள் மாநிலத்தின் சுற்றுலா மற்றும் பாதுகாப்பை பிரதிபலிக்கின்றன என்று சுற்றுலாத் துறை அமைச்சர் ரோஹன் கவுண்டே சமீபத்தில் கூறினார்.

சுற்றுலா பயணிகள் கோவாவுக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், அதேநேரத்தில் அவர்கள் பொறுப்புடன் கவனமாக இருக்க வேண்டும். கடற்கரை பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.

‘பாவ்’ ஸ்குவார்டு

‘பாவ்’ ஸ்குவார்டியில் 11 தத்தெடுக்கப்பட்ட நாய்கள், 11 முதல் 19 மாதங்களுக்குள்ள நாய்களில் 9 இந்திய மோங்ரல்கள், ஒன்று லாப்ரடோர் மற்றும் ஒன்று கலப்பு இனத்தை உள்ளடக்கியவைகள் உள்ளன. 26 மாத பயிற்சித் திட்டத்தில் நீச்சல், துன்பத்தில் இருக்கும் நபரைக் கண்டறிதல், மீட்பு நுட்பங்கள் மற்றும் பாறைப் பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் ஆகியவைகள் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற்றவுடன், அதிக மக்கள் நடமாட்டம் உள்ள மற்றும் ஆழமான கடல் பகுதி பின்னர் கூட்டம் குறைவாக உள்ள கடற்கரைகளிலும் நாய்ப் படை நிறுத்தப்படும்.

நாய் பயிற்சி நிபுணர் அர்ஜுன் ஷான் மொய்த்ரா கூறுகையில், நாய்கள் உயிர்காக்கும் முயற்சிகளுக்கு, கூடுதல் பரிமாணத்தை சேர்க்கும் என்று கூறினார் – குறிப்பாக சர்ப் மீட்பு, பாறை பகுதிகளில் மீட்பு முயற்சிகள் மற்றும் கடற்கரைகளில் காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிதல் ஆகியவற்றில் பெரும் பங்கு வகிக்கும் என்றார்.

“நாய்களுக்கு உயிர்வாழும் உள்ளுணர்வு உள்ளது, இது பாதிக்கப்பட்டவரை இழுத்துச் செல்லும் போது கரைக்கு பாதுகாப்பான பாதையில் செல்ல உதவுகிறது, இதனால் மீட்பு நேரத்தையும் முயற்சியையும் குறைக்கிறது,” என்று அவர் கூறினார்.

மேலும் நாய்களுக்கு மணி மற்றும் மீட்புக் குழாய் பொருத்தப்பட்டு, தண்ணீரில் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கண்டறிவதற்கும், பாதிக்கப்பட்டவருக்கு நீந்துவதற்கும், மீட்புக் குழாயைப் பிடித்துக் கொண்டு, பாதிக்கப்பட்டவரை இழுத்துக்கொண்டு கரைக்குத் திரும்புவதற்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாய்க்கும் பிரத்யேகமாக ஒருவர் பயிற்சி அளிப்பார் என்று அவர் கூறினார்.

மேலும் நாய்கள் தங்கள் பயிற்சியாளரின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபடுவதற்கு முறையாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நாய்களுக்கு அதிக ஸ்டேமினா உள்ளது என்றார்.

இத்தாலியில் உள்ள கடலோர காவல்படை கடற்கரைகளில் மீட்பு நடவடிக்கைகளுக்காக நாய்களுக்கு பயிற்சி அளித்து வருவதாக சுற்றுலா துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

AI தொழில்நுட்பம்

இரண்டு செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான அமைப்புகள் தயாராக உள்ளன – ஆரஸ் என்ற சுய-ஓட்டுநர் ரோபோ மற்றும் TRITON எனப்படும் AI- இயங்கும் கண்காணிப்பு அமைப்பு ஆகும்.

கண்காணிப்பு மற்றும் கூட்டத்தை நிர்வகிப்பதை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, AURUS மூடப்பட வேண்டியிருக்கும் போது உதவிக்காக Miramar கடற்கரையில் பைலட் அடிப்படையில் பயன்படுத்தப்பட்டது. நீச்சல் அல்லாத பகுதிகளில் ரோந்து செல்வதன் மூலமும், கடல் அலையின் போது சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கை செய்வதன் மூலமும் பல மொழிகளில் அறிவிப்புகளை வெளியிடுவதன் மூலம் உயிர்காப்பாளர்களுக்கு உதவுவதற்காக இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இது 100-கிலோ பேலோடை எடுத்துச் செல்லக்கூடியது மற்றும் தளவாட ஆதரவு வாகனமாக பயன்படுகிறது.

எதிர்காலத்தில் ரோபோ முதலுதவி பெட்டிகளை எடுத்துச் செல்லும் வகையிலும் கடற்கரையில் சிவப்புக் கொடி நடலாம் எனவும் ஆலோசிக்கப்படுகிறது என்று த்ரிஷ்டி மரைனின் தலைமை நிர்வாக அதிகாரி நவீன் அவஸ்தி கூறினார்.

TRITON அதன் சோதனைக் கட்டத்தில் உள்ளது மற்றும் தெற்கு கோவாவில் உள்ள பைனா, வெல்சாவ், பெனாலிம் மற்றும் கல்கிபாக் கடற்கரைகளிலும், வடக்கு கோவாவில் உள்ள மோர்ஜிம் ஆகிய இடங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இது நீச்சல் செய்யக் கூடாத, ஆபத்தான பகுதிகளை ஸ்கேன் செய்து, உயிர்காக்கும் காவலர்களுக்கு தகவல்களைக் கண்டறிந்து கொடுக்கும். மேலும் அதிக அலை மற்றும் ஆபத்து ஏற்படும் பகுதிகளில் நீருக்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகளைக் கண்டறிய உதவும். வரும் மாதங்களில் கோவா கடற்கரைகளில் 100 TRITON மற்றும் 10 AURUS யூனிட்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

நோ செல்ஃபி , நோ நீச்சல் பகுதி

39 கடற்கரைகள், துத்சாகர் நீர்வீழ்ச்சிகள் மற்றும் மாயெம் ஏரியை உள்ளடக்கிய கோவாவின் கடற்கரையில் 450க்கும் மேற்பட்ட உயிர்காப்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பாகா, கலங்குட் மற்றும் கோல்வா போன்ற பிரபலமான கடற்கரைகளில் சராசரியாக 22 உயிர்காப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இங்குள்ள ஆபத்தான பகுதிகளில் நோ செல்ஃபி பகுதி என்ற பலகை, நோ நீச்சல் பகுதி என்ற பலகைகள், சிவப்பு நிறக் கொடி கம்பத்துடன் நிறுவப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளுக்கு தெரியும் வகையில் இவைகள் வைக்கப்பட்டுள்ளன என்று நிறுவனத்தின் அதிகாரிகள் கூறினர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Dog squads to ai robots how goa plans to make its beaches safer