உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.எய்.சந்திரசூட் இன்று பதிவியேற்றுக்கொண்டார்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லத்தின் பணிக்காலம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தனஞ்சய் ஒய்.சந்திரசூட் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இந்த நிகழ்வில் அமித் ஷா, ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜு, பியுஸ் கோயல் கலந்துகொண்டனர்.
கடந்த 1959-ஆம் ஆண்டு நவ.11-ஆம் தேதி பிறந்த டி.ஒய்.சந்திரசூட், 2016-ஆம் ஆண்டு மே 13-ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதியானார். அவா் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக 2024-ஆம் ஆண்டு நவ.10-ஆம் தேதி வரை பதவி வகிப்பார்.