Advertisment

விஜயபுரா, செங்கல்பட்டு... இந்தியாவில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 இடங்களில் நிலநடுக்கம்!

இந்தியாவில் இன்று ஒரே நாளில் விஜயபுரா (கர்நாடகா), செங்கல்பட்டு (தமிழ்நாடு), ராஜ்கோட் (குஜராத்), ஷில்லாங் (மேகாலயா) ஆகிய 4 இடங்களில் அடுத்தடுத்து லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Earthquake India Four places  Vijayapura Chengalpattu Shillong Rajkot Tamil News

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலஅதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6:52 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ.ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

இதனைத்தொடர்ந்து, தமிழகத்தின் செங்கல்பட்டு பகுதியில் இன்று காலை 7:39 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ.ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலஅதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

தொடர்ந்து மேகாலயா மாநிலம் ஷில்லாங்-கில் காலை 08:46 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 14 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 அலகுகளாகப் பதிவாகியுள்ளது

இதனைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் காலை 9:00 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.9 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

earthquake
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment