டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை 5.36 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. தலைநகர் டெல்லியில் பிப்ரவரி 17 அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.
இந்த நிலநடுக்கம் டெல்லியில் ஏறபட்டதாகவும் பூமியின் மேற்பரப்பில் இருந்து 5 கி.மீ கீழே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்பரப்புக்கு கீழே ஐந்து அல்லது பத்து கி.மீ ஆழத்தில் தோன்றும் ஆழமற்ற நிலநடுக்கங்கள், மேற்பரப்புக்கு கீழே ஆழமாக உருவாகும் பூகம்பங்களை விட அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்:
Shallow earthquake of magnitude 4 shakes Delhi; PM Modi urges people to stay alert for ‘possible aftershocks’
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி மக்கள் அமைதியாக இருக்கவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவும், "சாத்தியமான நிலநடுக்கங்களுக்கு" எச்சரிக்கையாக இருக்கவும் கேட்டுக்கொண்டார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் "அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக" பதிவிட்டுள்ளார்.
சமீபத்திய ஆண்டுகளில், இப்பகுதியில் பல ரிக்டர் அளவிலான 4 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டில், டெல்லியின் அண்டை மாநிலமான ஹரியானாவில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ஒரு ஆழமற்ற நிலநடுக்கமாக இருந்தது, ஆனால் எந்த சேதமும் ஏற்படவில்லை. டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளில் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில்லை என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இமயமலை, ஆப்கானிஸ்தான், சீனா உள்ளிட்ட தொலைதூர பகுதிகளில் ஏற்படும் நிலநடுக்கங்களால் டெல்லி அடிக்கடி அதிர்வுகளை உணர்கிறது. பூமிக்குள் ஆழமாக உருவாகும் நிலநடுக்கங்கள் - மேற்பரப்புக்கு கீழே 100 கி.மீ அல்லது அதற்கு மேற்பட்டவை - நீண்ட தூரம் பயணிக்க முடியும். எவ்வாறாயினும், தொடக்கத்திலிருந்து அதிக தொலைவு இருந்தால், சேதமடைவதற்கான வாய்ப்பு குறைவு, ஏனெனில் நிலநடுக்கங்கள் பயணிக்கும்போது விரைவாக ஆற்றலை இழந்து பலவீனமடைகின்றன.