scorecardresearch

கைது அச்சத்தில் கவிதா.. கலங்கும் கே.சி.ஆர்., நெருங்கும் டெல்லி மதுபான ஊழல் வழக்கு

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் தனது மகளை அமலாக்கத் துறை கைது செய்யலாம் என தெலங்கானா முதல் அமைச்சர் கே. சந்திர சேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

ED may arrest Kavitha tomorrow in liquor policy case will take the fight to Delhi KCR
தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர ராவ்

டெல்லி மதுபான ஊழல் வழக்கில் தனது மகளும் பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) எம்எல்சியுமான கே.கவிதாவை டெல்லியில் சனிக்கிழமை அமலாக்க இயக்குனரகம் (ED) கைது செய்யக்கூடும் என்று தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற மூத்த பிஆர்எஸ் தலைவர்களின் கூட்டத்தின் போது, கவிதாவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய சனிக்கிழமை ஏஜென்சி முன் ஆஜரான பிறகு, அமலாக்கத் துறை (ED) காவலில் எடுக்கப்படலாம் என்று முதல்வர் கூறினார்.

கவிதாவை கைது செய்வதன் மூலம் மத்திய பாஜக தலைமையிலான அரசு பிஆர்எஸ்ஸை மிரட்ட முயற்சிப்பதை முதல்வர் கவனித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் டெல்லி வரை போராட்டத்தை கொண்டு செல்வதாகவும் கட்சி தலைவர்களிடம் உறுதியளித்தார்.

டெல்லி மதுபான வழக்கில் கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாக ED விசாரணையில் கட்சியில் நிறைய அமைதியின்மை இருப்பதாக பிஆர்எஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.

கே.சி.ஆரின் மகனும், தெலுங்கானா மூத்த அமைச்சருமான கே.டி.ராமராவ், தனது சகோதரி கவிதா அமலாக்கத்துறை முன் ஆஜராகத் தயாராகி வரும் நிலையில், அவருடன் இருக்க புதுடெல்லிக்கு விமானத்தில் சென்றுள்ளார்.

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் கவிதாவின் வாக்குமூலத்தை மார்ச் 9ஆம் தேதி பதிவு செய்ய அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

வெள்ளிக்கிழமை, கவிதா டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, மாநில சட்டமன்றங்களிலும் பாராளுமன்றத்திலும் பெண்களுக்கு மொத்த இடங்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக் கோரினார்.

தெலங்கானா அமைச்சர்கள் சபிதா இந்திரா ரெட்டி, சத்யவதி ரத்தோட் ஆகியோர் கவிதாவுடன் சென்றனர். ஜேஎன்யு மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமியாவிலிருந்து குறைந்தது 10 அரசியல் கட்சிகள், மாணவர் அமைப்புகள்; பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலிருந்து இளைஞர் அமைப்புகள்; மற்றும் தேசிய கிறிஸ்தவ வாரிய உறுப்பினர்கள் கவிதாவுடன் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை இடதுசாரிக் கட்சிகள் பிஆர்எஸ் உடன் நின்று போராடும் என்றார்.

இதற்கிடையில், நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை தனது அரசு நிறைவேற்றும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

கவிதா தனது உரையில், “உலகின் மற்ற நாடுகளுக்கு இணையாக இந்தியா வளர்ச்சியடைய வேண்டும் என்றால், அரசியலில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.

மேலும், மகளிர் இடஒதுக்கீடு மசோதா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. பாஜகவுக்கு நாடாளுமன்றத்தில் முழுப்பெரும்பான்மை இருப்பதால், மசோதாவை நிறைவேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Ed may arrest kavitha tomorrow in liquor policy case will take the fight to delhi kcr

Best of Express