டெல்லி அரசின் மதுபான கொள்கை திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த வாரம் கைது செய்தது. இதையடுத்து தாம் சிறையில் இருந்தபடியே ஆட்சி செய்யப் போவதாக அறிவித்தார். அந்த வகையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நீர் மற்றும் சாக்கடை தொடர்பான பொது நலப் பணிகளைத் தொடங்க தனக்கு உத்தரவு அனுப்பியதாக அமைச்சர் அதிஷி அறிக்கை வெளியிட்டார். இவ்விவகாரத்தை அமலாக்கத் துறை கவனத்து வருவதாக அத்துறை வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
கைது செய்யப்பட்ட முதலமைச்சர் இவ்வாறான உத்தரவுகள் பிறப்பிக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தில் (பிஎம்எல்ஏ) இடம் உண்டா என்பது குறித்து அமலாக்கத் துறை விசாரணை நடத்தும் எனக் கூறப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலை மார்ச் 28-ம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்றும் தனிப்பட்ட உதவியாளர் பிபவ் குமார் ஆகியோர் தினமும் மாலை 6 மணி முதல் 7 மணிக்குள் அரை மணி நேரம் அவரைச் சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதே போல் அவரது வழக்கறிஞர் தனியாக அரை மணி நேரம் அவரைச் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, நீர்வளத் துறை அமைச்சர் அதிஷி செய்தியாளர்களிடம் பேசுகையில், நீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான பொதுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான "அவரது வழிகாட்டுதல்களுடன்" சனிக்கிழமையன்று இ.டி காவலில் இருந்து ஒரு ஆவணத்தை கெஜ்ரிவால் தனக்கு அனுப்பியதாகக் கூறினார்.
கோடை காலத்திற்கு முன்னதாக தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பகுதிகளில் போதுமான எண்ணிக்கையிலான தண்ணீர் டேங்கர்களை அமைக்குமாறு முதல்வர் உத்தரவிட்டதாக அவர் கூறினார். 55 வயதான கெஜ்ரிவால், டெல்லி கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக அவரது அதிகாரப் பூர்வ இல்லத்தில் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து மார்ச் 21 அன்று இ.டியால் கைது செய்யப்பட்டார்.
இந்த சந்திப்புகளின் போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என விசாரணை நடத்தப்படும் என இ.டி வட்டாரங்கள் தெரிவித்தன. முறைகேடுகள் கண்டறியப்பட்டால் சிறப்பு நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்படும், என்றனர்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/india/ed-takes-cognisance-of-directions-issued-by-kejriwal-to-delhi-govt-from-custody-9232194/?tbref=hp
கெஜ்ரிவால் தனது குடும்ப உறுப்பினர்கள், வழக்கறிஞர்களை மத்திய டெல்லியில் உள்ள ஏ.பி.ஜே அப்துல் கலாம் சாலையில் உள்ள ED தலைமையகத்தில் சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்புகள் சிசிடிவி வீடியோ இணைப்பு மூலம் கண்காணிக்கப்படுகிறது என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி கலால் கொள்கை "ஊழலின்" "கிங்பின் மற்றும் முக்கிய சதிகாரர்" கெஜ்ரிவால் என்று இ.டி குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி மற்றும் கெஜ்ரிவால் இ.டியின் இந்த நடவடிக்கையை பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் "அரசியல் பழிவாங்கும் செயல்" என்று குறிப்பிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“