மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் காங்கிரஸ் கட்சியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் அசோக் சவான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி உள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலேவுக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில் “ காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவில் இருந்து, இன்று மதியத்தில் இருந்து விலகுவதாக” குறுப்பிட்டுள்ளார்.
2022ம் ஆண்டு, சிவசேனாவை உடைத்துக்கொண்டு, வெளியில் வந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு எதிராக வாக்களிக்க, 7 காங்கிரஸ் எம்.எல்.ஏவுடன் இவரும் மிகத் தாமதமாக அமைச்சரவை கூட்டத்திற்கு நுழைந்தார். அப்போதில் இருந்து அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இப்படி பேசப்படுவது தொடர்பாக அவர் எப்போதும் மறுப்பு தெரிவித்தது இல்லை.
முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் சங்கர்ராவ் சவான் மகனான அசோக் சவான் 1986ம் ஆண்டு அரசியலுக்கு வருகை தந்தார். காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிராவின் பொதுச் செயலாளராக இருந்தார்.
மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் 1992ம் ஆண்டு நுழைந்தார். அப்போது சட்டமேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் பொதுப்பணி, நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக பணியாற்றினார்.
முட்கேட் தொகுதியில் வெற்றிபெற்று மகாராஷ்டிரா சட்டசபையில் நுழைந்தார். மேலும் 2004ம் ஆண்டும் தொடர்ந்து அதே தொகுதியில் வெற்றிபெற்றார்.
அவர் முதல்வராக இருப்பதற்கு முன்பாக வருவாய், போக்குவரத்து, தொழில் துறை அமைச்சராக இருந்தார். இவர் ஒரு வருடம் மட்டுமே முதல்வராக இருந்தார். ஆதர்ச வீட்டுவசதி ஊழலில் இவர் சிக்கிக்கொண்டதால், பதவி விலக நேரிட்டது.
2014ம் ஆண்டு மகாராஷ்டிராவின் நாந்தேடு நாடாளுமன்ற தொகுதியில் மோடி அலைக்கு எதிராக வெற்றி பெற்ற 2 காங்கிரஸ் வேட்பாளர்களில் இவரும் ஒருவர். 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நாந்தேடு நாடாளுமன்ற தொகுதியில் இவர் தோல்வியடைந்தார்.
Read in english
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“