கனடாவில் இந்திய சமூகத்தை அச்சுறுத்தும் தீவிரவாதிகள்; ட்ரூடோவிடம் கவலை தெரிவித்த மோடி

அமைதியான போராட்டத்தின் சுதந்திரத்தை கனடா எப்போதும் பாதுகாக்கும், அதே சமயம் அது எப்போதும் வன்முறையைத் தடுக்கும் என்றும் - ஜஸ்டின் ட்ரூடோ

அமைதியான போராட்டத்தின் சுதந்திரத்தை கனடா எப்போதும் பாதுகாக்கும், அதே சமயம் அது எப்போதும் வன்முறையைத் தடுக்கும் என்றும் - ஜஸ்டின் ட்ரூடோ

author-image
WebDesk
New Update
Canada PM Justin Trudeau and PM Modi

புதுதில்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. (X/@MEAIindia)

புதுதில்லியில் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்தபோது, ​​கனடாவில் தீவிரவாதிகளின் இந்தியா-விரோதநடவடிக்கைகள் தொடர்வது குறித்து கடுமையான கவலைகளை தெரிவித்ததாக வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.

Advertisment

”அவர் (பிரதமர் மோடி) கனடாவில் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத சக்திகளின் நடவடிக்கைகள் தொடர்வது குறித்து நமது வலுவான கவலைகளை தெரிவித்தார். தீவிரவாதிகள் பிரிவினைவாதத்தை ஊக்குவித்து, இந்திய தூதர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுகின்றனர், தூதரக வளாகங்களை சேதப்படுத்துகிறார்கள், கனடாவில் உள்ள இந்திய சமூகத்தையும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் அச்சுறுத்துகிறார்கள்என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் சிண்டிகேட்கள் மற்றும் மனித கடத்தல் போன்ற சக்திகளின் நடவடிக்கைகள் கனடாவிற்கும் கவலையாக இருக்க வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சகம் கூறியது.

இதுபோன்ற அச்சுறுத்தல்களை கையாள்வதில் இரு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம். இந்தியா-கனடா உறவின் முன்னேற்றத்திற்கு பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கை அடிப்படையிலான உறவு அவசியம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்,” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர் சந்திப்பில் காலிஸ்தான் தீவிரவாதம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அமைதியான போராட்டத்தின் சுதந்திரத்தை கனடா எப்போதும் பாதுகாக்கும் என்றும் அதே சமயம் அது எப்போதும் வன்முறையைத் தடுக்கும் என்றும் வெறுப்புகளை பின்னுக்குத் தள்ளும் என்றும் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

"கனடா எப்போதும் கருத்து சுதந்திரம், மனசாட்சி சுதந்திரம் மற்றும் அமைதியான எதிர்ப்பு சுதந்திரத்தை பாதுகாக்கும், அது எங்களுக்கு மிகவும் முக்கியமானது," என்று ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

அதே நேரத்தில், வன்முறையைத் தடுக்கவும், வெறுப்புக்கு எதிராகப் பின்னுக்குத் தள்ளவும் நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். சமூகத்தின் பிரச்சினையில், ஒரு சிலரின் நடவடிக்கைகள் முழு சமூகத்தையும் அல்லது கனடாவையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை என்பதை நினைவில் கொள்வது அவசியம் என்று நான் நினைக்கிறேன்,” என்று ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

முன்னதாக, பிரதமர் மோடி பல்வேறு துறைகளில் இந்தியா-கனடா இடையேயான முழு அளவிலான உறவுகள் குறித்து விவாதித்ததாகக் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pm Modi Canada

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: