Advertisment

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு மிரட்டல்: சீக்கிய அமைப்பு நிறுவனர் மீது வழக்குப் பதிவு

காலிஸ்தான் பிரிவினைவாதியான பன்னு, ஜூலை 1, 2020 அன்று இந்தியாவால் ‘தனிப்பட்ட பயங்கரவாதி’யாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் மிரட்டல் அழைப்புகள் பன்னுவின் குரலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
 Sikhs for Justice founder

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது.

Cyber Crime : தடை செய்யப்பட்ட சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் நிறுவனரும் வழக்கறிஞருமான குர்பத்வந்த் சிங் பன்னுவுக்கு எதிராக அகமதாபாத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த மிரட்டல்கள் வந்ததாக கூறப்படுகிறது.

Advertisment

காலிஸ்தான் பிரிவினைவாதியான பன்னு, ஜூலை 1, 2020 அன்று இந்தியாவால் ‘தனிப்பட்ட பயங்கரவாதி’யாக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் மிரட்டல் அழைப்புகள் பன்னுவின் குரலில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று ஒரு போலீஸ் அதிகாரி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

அதில், நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்குவதற்காக காலிஸ்தான் கொடியுடன் அகமதாபாத்தை தாக்கப் போவதாக கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டது.

FIR lodged against Sikhs for Justice founder Gurpatwant Singh Pannu following threat calls ahead of World Cup

பன்னு மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சதி மற்றும் வெறுப்பைப் பரப்புதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது, பன்னு மீது 121 (ஏ) (இந்திய அரசுக்கு எதிராகப் போரை நடத்த சதி செய்தல்), 153 (ஏ) (வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் எந்தவொரு நடவடிக்கை அல்லது தகவல்தொடர்புக்கும் தண்டனை வழங்குதல்) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மக்களிடையே பகை, வெறுப்பு அல்லது தவறான எண்ணம்), 153 பி(1) (சி) (குற்றச்சாட்டுகள், தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதகமான கூற்றுகள்), 501 (1) (பி) (அவதூறாக அறியப்படும் விஷயத்தை அச்சிடுதல் அல்லது பொறித்தல்) மற்றும் ஐபிசியின் 120 (பி) (குற்றச் சதி); தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66 (எஃப்) (சைபர் பயங்கரவாதம்); மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் பிரிவு 161 (B) (பயங்கரவாத சட்டம்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment