/tamil-ie/media/media_files/uploads/2022/03/BSF-1-1.jpg)
BSF jawan fires at colleagues, kills four before taking his own life: பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள காசாவில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைமையகத்திற்குள் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) ஜவான் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை காலை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது, மேலும் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு கொள்வதற்கு முன்பு தனது சகாக்கள் நான்கு பேரைக் கொன்றார் என்று போலீசார் தெரிவித்தனர்.
அமிர்தசரஸ் கிராமப்புற காவல்துறையின் மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) தீபக் ஹிலோரி, துப்பாக்கிச் சூடு நடத்திய ஜவான் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தினார். மற்றொரு BSF வீரர் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து அமிர்தசரஸில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
BSF இதுவரை எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை, இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடத்திய ஜவான் தனது பணி நேரத்தால் வருத்தமடைந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இச்சம்பவம் காலை 10:15 மணியளவில் நிகழ்ந்தது மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் 11 மணியளவில் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: ரஷ்யா – உக்ரைன் போர்நிறுத்தம் உதவவில்லை; இந்தியர்களை வெளியேற்றுவதில் நீடிக்கும் சிக்கல்கள்
பிஎஸ்எஃப் வட்டாரங்கள் கூறுகையில், ‘பி’ காய் 144 பட்டாலியனின் கான்ஸ்டபிள் செட்டப்பா எஸ்கே தனது ஆயுதத்தைப் பயன்படுத்தி, காசா தலைமையகத்தின் ஜிஎஃப் மற்றும் ஓஆர்எஸ் படைமுகாமில் உள்ள தனது சக ஊழியர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினார். அவர் 144 பட்டாலியனின் கமாண்டன்ட் அதிகாரியான சதீஷ் மிஸ்ராவின் வாகனத்தின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
காசா பஞ்சாபில் உள்ள பிஎஸ்எஃப் இன் பரபரப்பான தலைமையகத்தில் ஒன்றாகும், இந்த படைத் தலைமையகம் அதன் அதிகார வரம்பிற்கு உட்பட்ட இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி மற்றும் பாசறை திரும்புதல் விழா ஏற்பாடுகளின் பொறுப்பைக் கொண்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.