five key judgments CJI Gogoi has to deliver before retirement - அயோத்தி தீர்ப்பு ஓவர் - தனது ஓய்வுக்குள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வழங்கவிருக்கும் 5 முக்கிய தீர்ப்புகள்
ராம் ஜென்மபூமி – பாபர் மசூதி வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கியது. ஐந்து நீதிபதிகளும் இணைந்து ஒரே தீர்ப்பினை வழங்கினர். அதன்படி இஸ்லாமியர்கள் தங்களின் மசூதியை அமைத்துக் கொள்ள 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷன், மற்றும் எஸ். அப்துல் நாஸீர் மற்றும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இந்த தீர்ப்பினை வழங்கியது.
Advertisment
Advertisements
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் நவம்பர் 17ம் தேதியோடு ஓய்வு பெற உள்ள நிலையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி வழக்கிற்கு தீர்ப்பு வழங்கிவிட்டார். அதேசமயம், மீதமிருக்கும் இந்த ஒரு வாரத்தில், அவர் இன்னும் வேறு எந்த முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்க வேண்டியுள்ளது என்பது குறித்து இங்கே பார்ப்போம்,
கடந்த ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி, அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், 4: 1 தீர்ப்பில், அனைத்து வயது பெண்கள் கேரளாவின் சபரிமலை கோவிலுக்குள் நுழைவதற்கு வழிவகுத்தது. பாலின பாகுபாடு. ஆனால், அந்த தீர்ப்புக்கு ஒரு சில இந்து குழுக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது.
தீர்ப்பின் பின்னர், கிட்டத்தட்ட 65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை சி.ஜே.ஐ கோகோய் தலைமையிலான அரசியலமைப்பு பெஞ்ச் விசாரித்து வருகிறது.
ரஃபேல் போர் ஜெட் ஒப்பந்தம் மறுஆய்வு வழக்கு
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச், கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் தொடர்பாக தனது தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்களை வாங்க செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் உட்பட பல தரப்பினர் குற்றம் சாட்டினர். இது குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை’ என கடந்த டிசம்பர் 14ம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்நிலையில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் இருந்த சில ஆவணங்கள் ஊடகங்களில் வெளியாயின. இதை அடிப்படையாக வைத்து ரபேல் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும், இந்த முறைகேடு தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதித்தது.
மதிப்பாய்வின் போது, பாதுகாப்பு காரணமாக விலை விவரங்களை பகிரங்கப்படுத்த முடியாது என்றது மத்திய அரசு. எவ்வாறாயினும், 126 ஜெட் விமானங்களுக்கான ஆர்.எஃப்.பி (முன்மொழிவுக்கான கோரிக்கை) விமானத்தின் அனைத்து தொழில்நுட்ப விவரங்களையும் கொண்டிருக்கும்போது, ரஃபேலின் விலையை வெளிப்படுத்துவது தேசிய பாதுகாப்பை எவ்வாறு பாதிக்கும் என்று மனுதாரரும், உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் கேள்வி எழுப்பியிருந்தார்.
ராகுல் காந்தி அவமதிப்பு வழக்கு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று உச்சநீதிமன்ற நீதிபதியே கூறிவிட்டதாகவும் அவர் பேசினார். இதற்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். மேலும் ராகுல் காந்திக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பாஜக எம்.பி மீனாட்சி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது தனது பேச்சுக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார்.
இருப்பினும், லெக்கி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, காங்கிரஸ் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் மன்னிப்பை நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நிதி மசோதா 2017 அரசியலமைப்பு செல்லுபடி
நாடாளுமன்றத்தில் கடந்த 2017-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிதி மசோதாவின் அரசியலமைப்பு செல்லுபடி குறித்து பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த 5 முக்கிய வழக்குகளின் தீர்ப்புகளும் அடுத்துவரும் 10 நாட்களுக்குள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
சி.ஜே.ஐ அலுவலகம் தகவல் அறியும் உரிமையின் கீழ் வர வேண்டும்
இந்திய தலைமை நீதிபதி அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ) கீழ் வர வேண்டுமா இல்லையா என்பதை உச்ச நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மற்ற பொது அதிகாரிகளைப் போலவே சி.ஜே.ஐ அலுவலகமும் உச்ச நீதிமன்றமும் தகவல்களை வெளியிடக் கடமைப்பட்டிருப்பதாக டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.