Arun Sharma
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே செவ்வாய்கிழமை மாலை ஏற்பட்ட பயங்கர விபத்தில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பல ராணுவ வீரர்களும் காயமடைந்தனர்.
கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பள்நோய் பகுதியில் ராணுவ வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்ததில் விபத்து நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“