/indian-express-tamil/media/media_files/dBt9RaMkzZ9sWrxzjaCq.jpg)
புதுச்சேரியில் இருந்து ஜூலை 1-ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை
புதுச்சேரியில் இருந்து ஜூலை 1-ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடக்கப்பட உள்ளது. பெங்களூரு, ஹதராபாத், திருப்பதி, கோவை, சேலம் நகரங்களுக்கு சேவையை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான நிலையம் அமைந்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு, ஜனவரி முதல் இந்த புதிய விமான நிலைய வளாகம் செயல்படுகிறது. புதுச்சேரியில் இருந்து பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால், பயணிகள் எண்ணிக்கை குறைந்ததையடுத்து, 2014-ம் ஆண்டு, பிப்ரவரி முதல் புதுச்சேரியில் விமான சேவை நிறுத்தப்பட்டது.
இதற்கு பிறகு, 2015-ம் ஆண்டு, ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான போக்குவரத்து சேவை தொடங்கியது. இதுவும், 2015-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் மீண்டும் நிறுத்தப்பட்டது.
இதனிடையே, மத்திய அரசின் பிராந்திய விமான இணைப்பு திட்டமான ‘உதான்’ திட்டத்தின் கீழ், விமான சேவைகளைத் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, 2017-ம் ஆண்டில் புதுச்சேரியிலிருந்து ஐதராபாத், பெங்களூருக்கு விமான சேவைகள் தொடங்கப்பட்டன.
இதையடுத்து, வார இறுதி நாட்களை தவிர்த்து மீதமுள்ள நாட்களில் போதிய அளவு பயணிகள் இல்லாத காரணத்தால் கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதியில் இருந்து விமான சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், புதுச்சேரியில் விமானசேவை தொடங்க திட்டமிட்டிருந்த இண்டிகோ நிறுவனம் புதுச்சேரியில் இருந்து பெங்களூரூ மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு விமான சேவையை ஜூலை 1ம் தேதி முதல் தொடங்குகிறது.
புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை ஜூலை 1ம் தேதி முதல் தொடக்கப்பட உள்ளது. பெங்களூரு, ஹதராபாத், திருப்பதி, கோவை, சேலம் நகரங்களுக்கு சேவையை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக, ஜூன் மாதத்தில் புக்கிங் தொடங்க உள்ளது. அடுத்த கட்டமாக புதுச்சேரியில் இருந்து திருப்பதி, கோவை, சேலம் ஆகிய பகுதிகளுக்கு விமான சேவை தொடங்கவும் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.