Advertisment

இந்திய அரசியலமைப்புச் சட்டம் காலத்தின் சோதனையைத் தாங்கி நிற்கிறது; ராஜ்யசபாவில் நிர்மலா சீதாராமன் பேச்சு

“இந்தப் புனித ஆவணத்தில் பொதிந்துள்ள ஆன்மா இந்தியாவை நிலைநிறுத்தும், அதாவது பாரதத்தை உருவாக்குவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய நேரம் இது.” என்று நிர்மலா சீதராமன் கூறினார்.

author-image
WebDesk
New Update
Nirmala Sitharaman 1

ராஜ்யசபாவில் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தனது உரையில், “இந்தியாவின் ஜனநாயகம் வளர்ந்து வரும் விதத்தில் இன்று நாம் மிகவும் பெருமைப்படுகிறோம். (Photo: Screengrab from YouTube/SansadTV)

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஜ்யசபாவில் திங்கள்கிழமை பேசுகையில், 50-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒரே நேரத்தில் அரசியலமைப்பை எழுதியிருந்தாலும் அவற்றின் முழு அம்சங்களையும் மாற்ற வேண்டியிருந்தது, இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த கடந்த 75 ஆண்டுகளில் காலத்தின் சோதனையைத் தாங்கி நிற்கிறது என்று வலியுறுத்தினார். 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Indian Constitution has stood the test of time: FM Nirmala Sitharaman in Rajya Sabha

ராஜ்யசபாவில் ‘இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகளின் புகழ்பெற்ற பயணம்’ குறித்த விவாதத்தை, அரசியலமைப்பு சபையின் 15 பெண்கள் உட்பட 389 உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தி ஆரம்பித்தார். “அவர்கள் 3 ஆண்டுகளுக்குள், ஒன்றாக, கடினமான சவாலை ஏற்றுக்கொண்டு, மிகவும் சவாலான சூழலில், காலத்தின் சோதனையைத் தாங்கி நிற்கும் இந்திய அரசியலமைப்பை தயாரித்தனர்.”

வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் குறிக்கும் வகையில், நிர்மலா சீதாராமன், “இந்தப் புனித ஆவணத்தில் பொதிந்துள்ள ஆன்மாவை இந்தியாவை நிலைநிறுத்தும், அதாவது பாரதத்தை உருவாக்குவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன்.” என்று கூறினார்.

Advertisment
Advertisement

இந்திய அரசியலமைப்பின் 75 ஆண்டுகால பயணத்தை ஆழமாக ஆராய்ந்து, அது எவ்வாறு தனித்து நிற்கிறது என்பதை "தனக்கென தனி தொடரில்" விரிவாக எடுத்துரைத்தார். நிர்மலா சீதாராமன் கூறினார்: இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 50-க்கும் மேற்பட்ட நாடுகள் சுதந்திரமடைந்தன, அவற்றின் அரசியலமைப்பு எழுதப்பட்டது, ஆனா, பலர் தங்கள் அரசியலமைப்பை மாற்றியுள்ளனர், அவற்றைத் திருத்தவில்லை, ஆனால், அவர்களின் அரசியலமைப்பின் முழு அம்சத்தையும் உண்மையில் மாற்றியுள்ளனர். நமது அரசியலமைப்புச் சட்டம் காலத்தின் சோதனையைத் தாங்கி நிற்கிறது…” என்று கூறினார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ராஜ்யசபாவில் இன்றும் நாளையும் விவாதம் நடைபெறுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Nirmala Sitharaman
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment