scorecardresearch

மாநிலங்கள் மாற்று உரங்களை பயன்படுத்த, ‘பிரதமர் பிராணம்’ திட்டம்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

PM PRANAM என்ற யோசனை மத்திய இரசாயன மற்றும் உர அமைச்சகத்தால் முன்வைக்கப்பட்டது.

FM Sitharaman announces PM PRANAM scheme to push states to promote alternative fertilisers
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மாற்று உரங்கள் மற்றும் ரசாயன உரங்களின் சீரான பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் PM PRANAM திட்டம் தொடங்கப்படும்.

மாற்று உரங்கள் மற்றும் ரசாயன உரங்களின் சீரான பயன்பாட்டை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஊக்குவிக்க பிரதான் மந்திரி பிராணம் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இது குறித்து நிர்மலா சீதாராமன், “மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மாற்று உரங்கள் மற்றும் ரசாயன உரங்களின் சீரான பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், மறுசீரமைப்பு, விழிப்புணர்வு, ஊட்டமளிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான பிரதமர் பிராணம் திட்டம் (PM PRANAM) தொடங்கப்படும்” என்றார்.

முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பரில், தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம், “நாட்டில் ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்க அரசாங்கம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது” என்றார்.

PM PRANAM என்ற யோசனை மத்திய இரசாயன மற்றும் உர அமைச்சகத்தால் முன்வைக்கப்பட்டது. செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெற்ற ரபி பிரச்சாரத்திற்கான விவசாயம் பற்றிய தேசிய மாநாட்டின் போது உர அமைச்சக அதிகாரிகள் மாநில அரசு அதிகாரிகளுடன் உத்தேச திட்டத்தின் விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

PM-PRANAM இன் கீழ், ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்கு மாநிலங்களை ஊக்குவிக்கவும், இறுதியில் மானியச் சுமையைக் குறைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது 2022-23ல் ரூ.2.25 லட்சம் கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டு ரூ.1.62 லட்சம் கோடியை விட 39 சதவீதம் அதிகமாகும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Fm sitharaman announces pm pranam scheme to push states to promote alternative fertilisers

Best of Express