ரேவந்த் ரெட்டி அமைச்சரவையில் இணையும் அசாருதீன்; தெலங்கானாவில் அரசியல் புயல்

தெலங்கானாவில் முதலமைச்சர் உட்பட அமைச்சரவையின் மொத்த பலம் 18 ஆகும். தற்போது மாநிலத்தில் 13 அமைச்சர்கள் உள்ளனர்.

தெலங்கானாவில் முதலமைச்சர் உட்பட அமைச்சரவையின் மொத்த பலம் 18 ஆகும். தற்போது மாநிலத்தில் 13 அமைச்சர்கள் உள்ளனர்.

author-image
WebDesk
New Update
Azarudhin 2

அசாருதீன் இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்க உள்ளார். Photograph: (File Photo)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அரசியல்வாதியுமான முகமது அசாருதீன், முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டியின் அமைச்சரவையில் சேருவது, பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) ஆகிய கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்துள்ளது. இந்த நடவடிக்கை, மிக முக்கியமான ஜூபிலி ஹில்ஸ் இடைத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சி என்று கட்சிகள் பார்க்கின்றன.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

அசாருதீன் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12.15 மணிக்கு பதவியேற்க உள்ளார். ஜூபிலி ஹில்ஸ் சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இதனால், காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் பி.ஆர்.எஸ் இடையே நடைபெறும் மும்முனைப் போட்டிக்கு முன்னதாக "வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கும்" ஒரு செயலாக அவரது பதவி உயர்வு கருதப்படுகிறது.

வியாழக்கிழமை அன்று, பா.ஜ.க இந்த நடவடிக்கையை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது.

“இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்காளர்களைக் கவர முயற்சிக்கும் செயல், அது வெளிப்படையாகத் தெரிகிறது” என்று ஒரு பா.ஜ.க தலைவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். இதேபோன்ற குற்றச்சாட்டுகளைப் பி.ஆர்.எஸ் கட்சியும் முன்வைத்து, இந்த நடவடிக்கை ஜூபிலி ஹில்ஸ் தேர்தலைக் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறியது.

Advertisment
Advertisements

தெலங்கானா உருவான 2014-ம் ஆண்டு முதல் இந்தத் தொகுதியை பி.ஆர்.எஸ் கட்சியே தக்கவைத்து வருகிறது.

இதற்குப் பதிலளித்த காங்கிரஸ் கட்சி, அசாருதீனின் நியமனம், கிரிக்கெட் வீரராகவும் அரசியல்வாதியாகவும் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்குக் கிடைத்த அங்கீகாரம் என்று கூறியது.

“பா.ஜ.க=வுக்கும் பி.ஆர்.எஸ்=ஸுக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது, அதனால்தான் அவர்கள் அவரது பதவி உயர்வை எதிர்க்கிறார்கள்” என்று துணை முதலமைச்சர் மல்லு பட்டி விக்ரமார்கா ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

மொத்தம் 18 அமைச்சர்கள் இருக்க வேண்டிய தெலங்கானா அமைச்சரவையில் தற்போது 13 அமைச்சர்கள் உள்ளனர்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அசாருதீன் சட்ட மேலவைக்கு ஆளுநரின் ஒதுக்கீட்டின் கீழ் பரிந்துரைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Telangana

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: