'சந்திரயான்-2 தோல்வி பாடம் பலன் அளித்துள்ளது': முன்னாள் இஸ்ரோ தலைவர்
'சந்திரயான் -2 இன் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டு, சந்திரயான் -3ல் நிறைய திருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.' என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.
'சந்திரயான் -2 இன் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டு, சந்திரயான் -3ல் நிறைய திருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.' என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.
‘சந்திரயான்-3’ 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்து விட்டது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.
இந்தியா கடந்த 2008-ம் ஆண்டு ‘சந்திரயான்-1’ விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. நிலவில் தண்ணீர் இருப்பதையும் அது உறுதிசெய்தது. அதன்பிறகு, 2019-ம் ஆண்டு நிலவின் தென்துருவத்துக்கு ‘சந்திரயான்-2’ விண்கலம் அனுப்பப்பட்டது. ஆனால் அதன் ‘லேண்டர்’ கருவி நிலவின் தரையில் மோதி உடைந்தது. இருப்பினும், ‘சந்திரயான்-2’-ல் அனுப்பப்பட்ட ‘ஆர்பிட்டர்’ கருவி தற்போதும் நிலவைச் சுற்றி வந்து தகவல்களை தந்துகொண்டிருக்கிறது.
Advertisment
இந்நிலையில், கடந்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி ‘சந்திரயான்-3’ விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது. ரூ.615 கோடி செலவில் 40 நாள் பயண திட்டத்துடன் அனுப்பப்பட்ட ‘சந்திரயான்-3’ விண்கலம், முதலில் புவிவட்டப் பாதையைச் சுற்றி வந்தது. பிறகு நிலவுவட்டப் பாதைக்கு மாற்றப்பட்டு, படிப்படியாக அதன் சுற்றுவட்டப் பாதை குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், ‘சந்திரயான்-3’ 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்து விட்டது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. மிகவும் சவாலான இந்தப் பணிகளை பெங்களூரு தரை கட்டுப்பாட்டுத் தளத்தில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகுந்த சாதுர்யமாக நடத்தி முடித்தனர். அவர்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
Advertisment
Advertisements
தோல்வி
கடந்த செப்டம்பர் 6, 2019 அன்று சந்திரயான்-2 விபத்திற்குள்ளானபோது, அப்போதைய இஸ்ரோ தலைவராக கே.சிவன் மிகவும் ஏமாற்றமடைந்தார், கண்ணீர் விட்டார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி அவரை கட்டித்தழுவி ஆறுதல் கூறினார். ஆனால் நேற்று புதன்கிழமை, தற்போதைய இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத், சந்திரயான்-2 தோல்வி இஸ்ரோவின் விஞ்ஞானிகளுக்கு என்ன கற்பித்தது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும் சந்திரயான் -3 இன் மென்மையான தரையிறக்கத்திற்கு அவர்கள் வெற்றியை உறுதிசெய்ய செய்த பல சோதனைகளுக்கு நல்ல அளவில் காரணமாக இருந்து என்றும் கூறினார்.
"சந்திரயான்-3 மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. இதற்காக நான்கு ஆண்டுகள் உழைத்தோம். ஆனால் சந்திரயான் -2 க்கு, இது பல வருட உழைப்பு. சந்திரயான் -2 க்குப் பிறகு நாங்கள் பெற்ற கற்றல் - மென்மையான தரையிறக்கத்திற்கான எங்கள் தோல்வியுற்ற முயற்சி - உண்மையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் எங்களுக்கு உதவியது.. மேலும் அதிக எண்ணிக்கையிலான சோதனைகள், தரையிறங்கும் செயல்முறையை நிரூபிக்கும் சோதனைகள். மற்றும் அது இன்று சரியான ஈவை வழங்கியுள்ளது." என்று அவர் கூறினார்.
பாடம்
"நான் பெரிதும் ஏமாற்றமடையவில்லை என்று சொன்னால் நான் பொய் சொல்வேன். நாங்கள் வெற்றியை நெருங்கினோம்." என்று சந்திரயான்-2 தோல்வி குறித்து குறிப்பிட்ட கே.சிவன் சந்திரயான்-3 இன் வெற்றிகரமான தரையிறக்கம் குறித்து பேசுகையில், "சந்திரயான்-3 திட்டத்தை திரும்பப் பெறுவதற்கான திறன் மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். இது இஸ்ரோவின் மிகப்பெரிய நிறுவன பலமாகவும், அதன் வெற்றிக்கான திறவுகோலாகவும் இருப்பதாக நான் நினைக்கிறேன். அழுத்தம் குறைந்துவிட்டதாக உணர்கிறேன்.
சந்திரயான் -2 இன் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டு, சந்திரயான் -3ல் நிறைய திருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் புதிய சிக்கல்கள் வெளிவருவதற்கான வாய்ப்பு எப்போதும் இருக்கும்” என்று சிவன் கூறினார்.
சந்திரயான்-2 திட்டம் செயல்படுத்தப்படும்போது, சந்திரனில் இறங்கும் கடைசி கட்டத்தில் ஏற்படும் அபாயங்கள் குறித்து சிவன் "15 நிமிட பயங்கரம்" பற்றி பலமுறை பேசினார். அந்த '15 நிமிட பயங்கரம்' சந்திரயான்-3 விஷயத்திலும் பொருந்தும் என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil