பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை; கோர்ட் அதிரடி தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Former MP Prajwal Revanna gets life sentence in rape case Tamil News

பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாசன் பாராளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்.பி.யாக இருந்தவர் பிரஜ்வல் ரேவண்ணா. ஜனதாதளம் (எஸ்) கட்சியைச் சேர்ந்தவரான இவர் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் ஆவார். இவருடைய தந்தை முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணா ஆவார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  

Advertisment

அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376(2)(கே) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. இது அதிகார துஷ்பிரயோகம் சம்பந்தப்பட்ட மோசமான பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் குற்றவியல் மிரட்டல் தொடர்பான குற்றங்கள் தொடர்பானது. இந்த விவகாரத்தில் வேலைக்கார பெண் உள்பட 4 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) போலீசார் வழக்குகளை பதிவு செய்தனர். அப்போது, தலைமறைவாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருந்து பெங்களூரு திரும்பி வந்ததும், மே 31 ஆம் தேதி அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் தற்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் 

பிரஜ்வல் ரேவண்ணா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட கர்நாடக காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு, அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்களைத் திரட்டியது. வீடியோ ஆதாரங்களைத் தவிர, டி.என்.ஏ பகுப்பாய்வு மூலம் புலனாய்வாளர்கள் முக்கிய திருப்புமுனையைப் பெற்றனர். தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் நாளில் பாதிக்கப்பட்டவர் அணிந்திருந்த ஆடையில் காணப்பட்ட முடி நுண்குழாய்கள் மற்றும் உடல் திரவத் தடயங்கள் பிரஜ்வாலின் டி.என்.ஏ-வுடன் ஒத்துப்போனது.

Advertisment
Advertisements

மே 2, 2024 அன்று மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகரை சேர்ந்த பாதிக்கப்பட்ட வேலைக்கார பெண் கொடுத்த வாக்குமூலத்துடன் வழக்கு முறையாகத் தொடங்கியது. மைசூரு அருகே பண்ணை வீட்டில் இருந்து மீட்கப்பட்ட அந்தப் பெண், மே 8 அன்று அவர் புகார் அளித்தார். வெளியே கசிந்த வீடியோக்களில் ஒன்றில் அடையாளம் காணப்பட்ட பின்னர் தான் சிறைபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். 113 சாட்சிகளின் சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு, டிசம்பர் 2024 இல் சி.ஐ.டி. போலீசார் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் 1,632 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். குற்றச்சாட்டுகள் ஏப்ரல் 3, 2025 அன்று தாக்கல் செய்யப்பட்டன. 

அதைத்தொடர்ந்து சிறப்பு நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. கடந்த 18 ஆம் தேதியே இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றது. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பு நேற்று வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது. இதில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பளித்தது. தண்டனை விவரம் இன்று அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு எதிரான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. இதன்படி, பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகித்தவர் பிரஜ்வாலின் முன்னாள் ஓட்டுநர் என். கார்த்திக் (34) என்பவர் தான். வழக்கு விசாரணையின் போது, பிரஜ்வல் ரேவண்ணாவின் தொலைபேசியில் 2,000-க்கும் மேற்பட்ட ஆபாசப் படங்கள் மற்றும் 40–50 பாலியல் ரீதியான வீடியோக்களைக் கண்டுபிடித்ததாக அவர் சாட்சியமளித்தார். இது பிரஜ்வல் ரேவண்ணாவின் அதிகார துஷ்பிரயோகத்தை அம்பலப்படுத்தியது. 

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், பிரஜ்வால் மீது மேலும் இரண்டு பாலியல் வன்கொடுமை வழக்குகளும் உள்ளன. ஒன்று முன்னாள் ஜே.டி.(எஸ்) மாவட்ட பஞ்சாயத்து ஊழியரை மீண்டும் மீண்டும் தாக்கியதாகக் கூறப்படும் வழக்கு ஆகும். பாதிக்கப்பட்டவரின் கணவர் சமீபத்தில் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். பிரஜ்வல் ரேவண்ணா குடும்பத்தினரால் முன்னர் பணியமர்த்தப்பட்ட வீட்டு சமையல்காரர் மற்றும் முன்னாள் எம்.பி. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அவரது மகள் அளித்த புகாரின் அடிப்படையில் மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரஜ்வாலின் குடும்பத்தினர் இந்த வழக்குகளை அரசியல் நோக்கம் கொண்டவை என்று கூறி நிராகரித்துள்ளனர். மேலும் நீண்டகாலமாக ஜே.டி(எஸ்) கோட்டையாக இருந்த ஹாசன் பகுதியில் ஆளும் காங்கிரஸ் அரசு தங்கள் செல்வாக்கை அகற்ற சதித்திட்டம் தீட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

Karnataka

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: