Advertisment

சி.ஏ.ஏ. சிறுபான்மையினருக்கு எதிரானது; நாராயண சாமி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை புதுச்சேரியில் ஆளும் அரசு அமல்படுத்தினால் அதை காங்கிரஸ் கட்சி எதிர்க்கும் என்று புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

author-image
WebDesk
New Update
Narayanasamy

சி.ஏ.ஏ. சிறுபான்மையினருக்கு எதிரானது என புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயண சாமி கூறினார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

புதுச்சேரியில் சிறுமி ஆர்த்தி படுகொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும்  போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மகளிர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவி பஞ்சகாந்த தலைமை தாங்கினார். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மகளிர் தின கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

Advertisment

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “சிறுமி  படுகொலை செய்யப்பட்ட வழக்கை ஆளும் பாஜக என். ஆர். காங்கிரஸ் அரசு பூசி மெழுக பார்க்கிறது.

மாணவி ஆர்த்தி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். குடியுரிமைச் சட்டத்தை அமுல்படுத்துவது என்பது சிறுபான்மையினருக்கு எதிரானது. எனவே காங்கிரஸ் கட்சி சார்பிலும் நாங்கள் அதை எதிர்க்கிறோம்” என்றார்.

செய்தியாளர் பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Puducherry Narayanasamy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment