சித்தூர் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து - திருச்சியைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

சித்தூர் அருகே ஏற்பட்ட விபத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சித்தூர் அருகே ஏற்பட்ட விபத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chittoor accident


ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே ஏற்பட்ட விபத்தில், திருச்சியைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருச்சியைச் சேர்ந்த 40 பேர், நேற்று முன்தினம் தனியார் பேருந்தில் திருப்பதி கோயிலுக்கு சென்றிருந்தனர். இவர்கள் அனைவரும் தரிசனத்தை முடித்து விட்டு திருச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, சித்தூர் - வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டுருந்த பேருந்து, கங்கசாகரம் பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், பேருந்தில் பயணித்த அனைவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பேருந்தை அதிவேகமாக இயக்கியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisment
Advertisements

செய்தி - க. சண்முகவடிவேல்

Andhra Pradesh accident

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: