Advertisment

அரசு ஊழியராக இல்லாவிட்டாலும் பென்ஷன்: மத்திய அரசின் இந்தத் திட்டங்களைத் தெரியுமா?

Government Monthly Pension Schemes ரூ.210 முதலீடு செய்தால், 60 வயதை எட்டிய பிறகு இந்த யோஜனாவின் கீழ் ரூ.5000 மாத ஓய்வூதியத்தைப் பெறலாம்.

author-image
WebDesk
New Update
pension plan

Monthly Pension Schemes Tamil News : உங்கள் முதிய வயதைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் மற்றும் வருடாந்திர ஒரு சிறிய தொகையை அல்லது ஒரு மொத்த தொகையை முதலீடு செய்வதன் மூலம் மாதாந்திர ஓய்வூதியத்தை வழங்கக்கூடிய சில திட்டங்களுடன் அதைப் பாதுகாக்க விரும்பினால், இங்கே சில வழிமுறைகள் உள்ளன. ஓய்வூதியத்தைப் பெற ஏராளமான திட்டங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் 60 வயதை எட்டிய பிறகு மாத ஓய்வூதியத்தை உறுதி செய்கிறது. அந்த வரிசையில் அடல் ஓய்வூதிய யோஜனா, பிரதமர் கிசான் மான்-தான் யோஜனா, பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தான் யோஜனா, தேசிய ஓய்வூதிய திட்டம் ஆகிய 4 திட்டங்களைப் பார்ப்போம்.

Advertisment

அடல் ஓய்வூதிய யோஜனா

இது அமைப்புசாரா துறை மக்களுக்காக அரசாங்கத்தால் நடத்தப்படும் ஓய்வூதிய திட்டம். இந்த திட்டத்தை 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் பெறலாம். ஒருவர் தங்கள் வீட்டிற்கும் அருகிலுள்ள வங்கி அல்லது தபால் நிலையத்திற்குச் சென்று இந்தக் கணக்கைத் திறக்கலாம். அடுத்த 40 ஆண்டுகளுக்கு நீங்கள் ரூ.210 முதலீடு செய்தால், 60 வயதை எட்டிய பிறகு இந்த யோஜனாவின் கீழ் ரூ.5000 மாத ஓய்வூதியத்தைப் பெறலாம்.

பிரதமர் கிசான் மான்-தான் யோஜனா

இந்த திட்டத்தை நாட்டின் விவசாயிகளுக்காக அரசு தொடங்கியுள்ளது. பிரதான் மந்திரி கிசான் மான்-தான் யோஜனா (PM-KMY) மாதாந்திர ஓய்வூதியமான 3000 ரூபாயை 60 வயதை எட்டும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (SMF), ரூ.55-க்கும் குறைவாக முதலீடு செய்வதன் மூலம் அவர்கள் இந்த திட்டத்தின் பலன்களைப் பெற முடியும். இது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும். 18 வயது நிரம்பியிருந்தால், அவர் 60 வயதை எட்டும்போது மாதந்தோறும் ரூ.3000 ஓய்வூதியத்தை இந்தத் திட்டத்தின்மூலம் பெறலாம். 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, இந்த திட்டத்தின் பயனைப் பெற அவர்கள் பிரதமர் கிசான் மந்தன் திட்டத்திற்கு ரூ.200 பங்களிக்க வேண்டும்.

பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தான் யோஜனா

இது முதியோர் பாதுகாப்பு மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்கான மற்றொரு அரசாங்கத் திட்டம். இது ஓர் தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டமும்கூட. இதன் கீழ் சந்தாதாரர் 60 வயதை எட்டிய பின்னர் மாதத்திற்கு ரூ.3000 என்ற குறைந்தபட்ச உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதியத்தைப் பெறுவார். சந்தாதாரர் இறந்தால், குடும்ப ஓய்வூதியமாகப் பயனாளியின் துணைவருக்கு 50% பெற உரிமை உண்டு. குடும்ப ஓய்வூதியம், துணைவருக்கு மட்டுமே பொருந்தும். 18 முதல் 40 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் 60 வயதை எட்டும் வரை மாதத்திற்கு ரூ.55 முதல் ரூ.200 வரை மாதாந்திர பங்களிப்புகளை வழங்க வேண்டும்.

வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான தேசிய ஓய்வூதிய யோஜனா

இது சிறிய அளவிலான வர்த்தகர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் முதியோர் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புக்கான அரசாங்கத் திட்டம். ஆண்டு வருமானம் கொண்ட ரூ.1.5 கோடிக்கு மிகாமல், EPFO/ESIC/NPS/PM-SYM அல்லது வருமான வரி செலுத்துவோர் அல்லாத 18-40 வயதுடைய வர்த்தகர்கள் இத்திட்டத்தில் சேரலாம். 18 முதல் 40 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள 60 வயதை எட்டும் வரை மாதத்திற்கு ரூ.55 முதல் ரூ.200 வரை மாதாந்திர பங்களிப்புகளை வழங்க வேண்டும். இது ஒரு தன்னார்வ மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம். இதன் கீழ் சந்தாதாரர் 60 வயதை எட்டிய பின்னர் மாதத்திற்குக் குறைந்தபட்சம் ரூ.3000 ஓய்வூதியம் பெறுவார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Atal Pension Yojana
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment